காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Tuesday, March 31, 2009

பாவம் அத்வாணியா? இந்தியாவா?

NDTVயின் walk the Talk நிகழ்ச்சியில் சேகர் குப்தாவுடன் அத்வாணி பேசியது.
கடைசி 2 கேள்வி - பதில்கள் தான் முக்கியமானது.

Advani defends Kandahar case handling
Shekhar Gupta (Walk The Talk)
Saturday, March 22, 2008, (New Delhi)

Nine years after the Kandahar hijack drama, BJP leader LK Advani has said that he had no idea that the then Foreign Minister Jaswant Singh was accompanying the terrorists on the flight to Kandahar.

The NDA government had to release militants in exchange of the Indians held hostage on board the IC 814 airline.

Advani spoke to Editor-in-Chief of The Indian Express Shekhar Gupta on NDTV's Walk The Talk programme.

Advani said the decision was taken in consultation with Vajpayee.

Shekhar Gupta: But going on plane was his (Jaswant Singh) own decision?
Advani: I wouldn't say it I would know that. He must have consulted Vajpayeeji, but it was not an issue at all and this issue was also raised by many others many months later.

Shekhar Gupta: But in this country, would an External Affairs Minister himself escort militants?
Advani: He is not escorting, he is trying to bring back the passengers. But I don't think that I am answerable for that, if the security committee on security had taken a decision.

Shekhar Gupta: You were not consulted on this?
Advani: I don't know about it.

Shekhar Gupta: So when did you get to know he went on the plane?
Advani: I came to know when he was going.

உள்துறை அமைச்சராக இருந்த அத்வாணிக்கு தெரியாமல் ஜஸ்வந்த் சிங் 3 தீவிரவாதிகளையும் கந்தகாருக்கு அழைத்து சென்றாராம். தீவிரவாதிகளுடன் ஜஸ்வண்ட்சிங் போகும் போது தான் அத்வாணிக்கு தெரியுமாம். வாஜ்பாய் அவர்களை கேட்டு அழைத்து சென்றிருப்பார் என்கிறார் அத்வாணி. ஒரு முக்கியமான விஷயத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரை நெ2 அமைச்சரை கலந்தாலோசிக்காமல் அமைச்சரவை செயல்பட்டிருக்கிறது. நாளை அத்வாணி பிரதமரானால் இந்தியா இவர் கட்டுபாட்டில் இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

இந்த லட்சணத்தில் இவர் மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் எங்கிறார். அந்த பலவீனமான பிரதமர் தான் பல தடைகளைத் தாண்டி அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வெங்கய்யா நாயுடு, அத்வாணி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, சுஸ்மா சுவராஜ், ஜெஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஷி என பல அதிகார மையங்கள் செயல்படும்.

பிஜேபியில் அருண் ஜேட்லிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் ஏற்பட்ட பூசலையே தடுத்து நிறுத்த முடியாமல் அப்பாவியாய் இருந்த அத்வாணி எபப்டி இந்த நாட்டின் பிரச்சனைகளை தைரியமாக தீர்ப்பார். ஆட்சியின் குறைபாடுகளை திசை திருப்ப தினம் ஒரு மதக் கலவரத்திற்கு தான் ஏற்பாடு செய்வார்.


http://ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080044709&ch=3/22/2008%209:22:00%20PM

Monday, March 30, 2009

யாரிந்த வைகோ @ வைகோயபல்ஸ்

யாரிந்த வைகோ? எவ்வளவு நல்லவர்? எந்த அளவு உண்மையானவர்? எந்த அளவு மற்ற அரசியல்வாதிகளை விட மேன்மையானவர்? பார்த்துவிடுவோம்.

இப்போது ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் மீது பொய்க் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறாரே , இவர் 2007 வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் அங்கம் வகித்தார். அப்போது ஈழப் பிரச்சனை இல்லையா? இவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஈழத்தமிழருக்கு செய்தது என்ன? துரோகத்தைத் தவிர. அப்போது இவர் கட்சிக்கு 4 எம்பிக்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பேபினட் மந்திரி பதவியும் இன்னொருவருக்கு இணை மந்திரிப் பதவியும் கொடுக்க காங்கிரஸ் தயாராய் இருந்தது. ஆனால் இவர் என்ன செய்தார்?. அமைச்சரவையில் இடம் வேண்டாம். வெளியிலிருந்தே ஆதரவு தருகிறோம் என்று சொன்னார்.

ஏன்?

தனக்கு கிடைக்காத அந்த அமைச்சர் பதவிகள் தன் கட்சியின் இரண்டாம் மட்டத் தலவர்களுக்குக் கிடைத்தால் தேசிய அளவில் அவர்கள் செல்வாக்குத் தன்னைவிட உயர்ந்துவிடும் என்ற பொறாமையும் வயித்தெரிச்சலும் தான். இந்த சரிவாதிகார மனப்பான்மை தான் செஞ்சி ராமச்சந்திரன், கணேசனில் ஆரம்பித்து இப்போது கண்ணப்பன் , கம்பம் ராமகிருஷ்ணன் என்று தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நட்களில் அவர் மட்டுமே கட்சியில் இருப்பார். இது இவர் கட்சிக்கு?! ஏற்பட்ட இழப்பு. இதை விடுவோம்.

ஆனால் ஈழத் தமிழருக்காக தான் மட்டுமே போராடுவதாக ஊரை ஏமாற்றுகிறாரே. அந்த ஈழ மக்களுக்கு இவர் செயலால் என்ன இழப்பு என்று பார்ப்போம்.

அன்று காங்கிரஸ் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும். அப்போது வெளியுறவு அல்லது பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றை கேட்டிருக்கலாம். குறைந்த பட்சம் இவைகளின் இணை அமைச்சர் பதவியாவது கிடைத்திருக்கும். அல்லது வேறு துறையின் அமைச்சர் பதவிகள் கிடைத்திருந்தாலும் அதை வைத்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக்களில் இடம் கிடைத்திருக்கும். அதை வைத்து அமைச்சரவைக் கூட்டங்களின் போதெல்லாம் ஈழப் பிரச்சனையை அந்த மக்கள் சிங்கள இன வெறி அரசால் படும் துயரங்களை எழுப்பி இருக்கலாம். அமைச்சரவையின் மற்ற சகாக்களுக்கும் புரியவைத்து இது விடுதலைப் புலிகள் பிரச்சனை மட்டுமில்லை அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களும் அடங்கி இருக்கு என புரிய வைத்திருக்கலாம். இவர்கள் தானே ஈழ மக்களின் ஒரே பாதுகாவலன் என்பது போல் நடிக்கிறார்கள் . அதனால் இவர்களை சொல்கிறேன்.

இந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் வேண்டுமென்றே விட்டுவிட்டு இப்போது காங்கிரஸ் அரசாங்கத்தை குறை சொல்லிக் கொண்டிருக்கிரார்.

இவர் கட்சி எம்பிக்களையும் காட்டி திமுக அமைச்சர் பதவிகள் பெற்றுக் கொண்டது என சொல்லி அகில இந்தியாவையும் சிரிப்பு மூட்டினார். :)) . இவர் கட்சி எம்பிக்கள் என்ன பெட்டியில் அடைத்து வைத்த ஆப்பிளா? லேபிள் மாத்தி ஒட்டிக் கொள்ள? :)

சரி , இவர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தாரே .. அதற்கு காரணம் என்ன? ஈழத் தமிழரை அழிக்க காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுக்கிறது என்று பொய்க் குற்றசாட்டு சுமத்தியா? இல்லவே இல்லை. கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் இறுதியாகக் கேட்ட 23 தொகுதிகளை( முதலில் 25 கேட்டார்) தரமுடியாது என்று சொல்லி திமுக அவருக்கு 22 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இதனால் காலையில் திமுகவுடன் பேரம் பேசிவிட்டு அந்த ஒரு சீட்டுக்காக அன்று மாலையே அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆகவே அவர் அப்போதும் காங்கிரஸ் மீது எந்த பொய்க் குற்றச்சாட்டும் சுமத்தவில்லை. அவர் பிரச்சனை வெறும் ஒரு தொகுதி தான். அவ்வளவு பெரிய கொள்கை திலகம் இந்த வைகோ.

இது வரை தாவல் ஸ்பெஷலிஸ்டான பாமக கூட காலையில் பேரம் பேசிவிட்டு படியாமல் மாலையில் எதிர் முகாம் போனதில்லை. முன் கூட்டியே அதற்கான வேலைகளை எல்லாம் செய்துவிட்டு தான் எதிர் முகாம் போவார் மருத்துவர் ஐயா. ஆனால் இந்த கொளகைப் புயல் வைகோ ஒரு சீட்டுக்காம 10 மணி நேரத்தில் கூட்டணி மாறியவர். அப்போதெல்லாம் அவர் ஈழ மக்களைப் பற்றி யோசித்ததே இல்லை.

பிறகு தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தான் கடந்த ஓராண்டாக தான் மத்திய அரசின் மீது குறைகள் எதுவும் இல்லாததால் காங்கிரஸ் மீது பொய்க் குற்றசாட்டு சுமத்திக் கொண்டிருக்கிறார். அதென்ன பொய்க் குற்றசாட்டு?

பின்னே? கொடுக்காத ஆயுதத்தை இலங்கைக்கு கொடுபப்தாக சொல்வது பொய் தானே. ப்ரணாப் முகர்ஜி, அந்தோணி மற்றும் சிதம்பரம் என சொல்ல வேண்டிய அனைவரும் சொல்லிவிட்டார்கள், இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் வழங்கவில்லை என்று. அப்போதும் நம்பாமல் குற்றம் சுமத்துவது பொய் தானே. சமீபத்தில் கடர்படைத் தளபதியும் சொல்லி இருக்கிறார் ஆயுத உதவி எதுவும் செய்யவில்லை என்று. அப்படி செய்தால் யாருக்கு பயந்து மறைக்க வேண்டும். இதில் இந்திய ராணுவத்தினர் இலங்கைப் போரில் பங்கேற்பதாக தகவல்கள் என்று தினமும் பித்தலாட்ட பதிவுகள் வேறு. இதுவரை யாரும் அதற்கு ஆதாரம் தரவில்லை. உண்மை இருந்தால் தானே. யாரிடமோ எதையோ வாங்கிக் கொண்டு இப்படி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் இணையத்தில்.

கீழே இருக்கும் படத்தை பெரிது பண்ணி பார்க்கவும்..( தி சண்டே இண்டியன் இந்த வார இதழ்)
இலங்கை ராணுவம் பயன்படுத்துவது சீனாவின் டி56 ரக துப்பாக்கிகள் தான். இந்தியா தன் ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவில்லை என்பது இதில் தெரிகிறது.

புலிகளின் தாக்குதலில் இந்திய ராடார் தொழில்நுட்ப இஞ்சினியர்கள் காயம் பட்டார்களே என்கிறார் வைகோ. ”ராடார்” என்பது ஆயுதம் இல்லை என்பதை யாராவது அவருக்கு புரியவைத்தால் நல்லது. அது ஒரு கண்காணிப்புக் கருவி. விடுதலை புலிகள் விமானத்தாக்குதலுக்கு வாய்ப்புகள் இருப்பதால் இலங்கைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதை வைத்து தமிழர்களை ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் சொல்லப் போனால் அது தற்காப்பிற்கே.

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தின் மீது என்ன கரிசனம்? எதற்கு ராடார் தர வேண்டும்? என்று கேட்கலாம்.

எல்லாம் சுயநலம் தான். இதைக் கொடுத்தால் ராடாரை வைத்து தமிழ்மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது ஒரு காரணம். இன்னொன்று இந்தியப் பாதுகாப்பு தொடர்புடையது. நாம் கொடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அல்லது சீனா கொடுத்திருக்கும். டயலாகை மாத்துடா டேய்ன்னு சொல்றது புரியுது. ஆனால் இது வெறும் டயலாக் இல்லை. பாகிஸ்தானோ சீனாவோ ராடார் வழங்கி இருந்தால் அதை பயன்படுத்தவும் பயிற்சிக் கொடுக்கவும் கூடவே ஆட்களை அனுப்பி இருப்பார்கள். அதை வைத்து இந்தியாவைக் கண்காணித்திருப்பார்கள். மும்பை தாஜ் மற்றும் ட்ரைடண்டில் நடந்த தாக்குதல் சென்னையின் கன்னிமாராவிலோ, லீ மெரிடியனிலோ நடந்திருக்கும். ஆகவே ராடார்கள்க் கொடுத்ததால் ஈழத் தமிழருக்கும் பாதிப்பில்லை. இந்தியாவுக்கும் புதிய பகுதியிலிருந்து ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.

மேலும், சண்டைன்னா சட்டை கிழியத் தான் செய்யும். சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குன்னு வடிவேலு காமெடி பண்ண மாதிரி , போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள். இது எல்லா இடத்திலும் இருப்பது தான் என்று ஈழத் தமிழரின் படுகொலைகளை காங்கிரஸ் கொச்சைப் படுத்தவில்லை. அப்படி சொன்ன புரட்சித்தலைவியுடன் தான் ஈழ மக்களின் தோழனாக நடிக்கும் வைகோ ஓட்டுககாக கூட்டு வைத்திருக்கிறார்.

இவர் தான் வைகோ என்று நியூமராலஜி பார்த்து பெயர் வைத்துக் கொண்ட பகுத்தறிவுவாதி வையாபுரி கோபால்சாமி. 2 எம்பிக்களும் 2 எம்எல்ஏக்களும் இவரை விட்டுப் போனதும் இன்றி தன் உரிமையான திருமங்கலைத்தையும் அம்மாவிடம் இழந்து கூனி குறுகி நின்ற தன்மானச் சிங்கம் வைகோ அவர்கள்.

இவர் போன்ற வேஷதாரிகளை மக்கள் நிச்சயம் அடையாளம் கொள்வர். காங்கிரஸ் + திமுக கூட்டணி ஈழத் தமிழருக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும் புரிந்துக் கொள்வர். அப்படி எதிரானவர்களாக இருந்தால் திருமாவளவன் சேர்ந்திருக்க மாட்டாரே.

படம் நன்றி : தி சண்டே இண்டியன் மின்னிதழ்.

Friday, March 27, 2009

ராமதாஸ் காமெடி


ராமதாஸ் நேத்து ஒரு ட்ராமா நடத்தினது எல்லாருக்குமே தெரியும். அதெப்டிங்க மருத்துவரே... நீங்க பொதுக் குழுவை கூட்டுவிங்க. அதுல அதிமுகவா, திமுகாவா என்று கேட்டு ஒரு அட்டையை எல்லார்கிட்டயும் குடுப்பிங்க. அவங்க எந்தக் கூட்டணின்னு சொல்வாங்க. அப்பால அந்தக் கூட்டணியில நீங்க சேருவிங்க. உங்களுக்கே இதெல்லாம் சிரிப்பு வரலை? :))

சரி.. எல்லாரும் அதிமுகன்னு சொல்லிட்டாங்க. இப்போ அதிமுக உங்களை சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னா என்னா செய்விங்க? :))
(ஒரு பத்திரிக்கையாளர் கூட இதைக் கேட்கலை.. யாரும் சீரியசா எடுத்துக்கலையோ? :)) )

போறதுன்னா வழக்கம் போல வேட்டியை இறக்கிவிட்டு துண்டை இடுப்புல கட்டிகிட்டு தலையைக் குனிஞ்சி கை கூப்பிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே. அதான் இரண்டு பக்கமும் ஆள்விட்டுப் பேசி எங்க வெயிட்டா கெடைக்கிதோ அங்க சேருவதுன்னு முடிவு பண்ணியாச்சி இல்ல.

அதென்னா மருத்துவரே பூவாத் தலையா போடற மாதிரி ஒரு வாக்கெடுப்பு? . உங்களுக்குன்னு கொள்கை தான் ஒன்னும் இல்லை. இப்போதைய சூழல்ல யாரோட செயல்பாடு நல்லா இருக்குன்னு பார்த்து போறதா சொல்லி இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும். அதை விட்டு பள்ளிக் கூட பசங்களை மாதிரி சரியான விடையை தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிங்க. நல்லா இருங்கய்யா..

அன்புச்சகோதரி கிட்ட ஏற்கனவே பேசி ஒப்பந்தம் எல்லாம் போட்டாச்சி இல்ல. அதை நேரடியாக அமல்படுத்த வேண்டியது தானே. எதுக்கு பொதுக் குழு ட்ராமா?. ஒருவேளை உங்க கட்சிக்காரங்க திமுக கூட்டணிதான்னு சொல்லி இருந்தா என்ன செஞ்சிருபிங்க? அவங்க தான் ஒரு மாவட்ட செயலாளர் அல்லது மந்திரிக் கூட உங்க கிட்ட வந்து பேசலையே.

ஆனா ஒன்னு மருத்துவரே.. இந்த தேர்தல் முடியறதுக்குள்ள நீங்க அனுபவிக்கப் போறதை எல்லாம் நினைச்சா உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுங்க.. :(

அதிக அளவில் பல்டி அடிச்சது நீங்க தான்னு தினமலர்ல நியூஸ் போட்டிருக்காங்க. அவிங்க கெடக்கறாய்ங்க. குடும்பத்துல இருந்து யார்னா அரசியலுக்கு வந்தா முச்சந்தியில வச்சி சவுக்கால அடிக்க சொன்ன கொள்கை வீரர் நீங்க. இதுக்கெல்லாம் கவலைப் படாதிங்க.

சரி சரி.. போனோமா.. 6 சீட்டு வாங்கினோமா 2 எடம் ஜெயிச்சோமான்னு சட்டு புட்டுன்னு கிளம்பி வாங்க. அங்கயே ரொம்ப நாள் இருந்துடாதிங்க. அன்புமணிக்கு மந்திரிப் பதவி தொடரனும்ல.

தேர்தல் முடிந்த கையோடு உங்கள் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்கும்
ஒரு காங்கிரஸ் தொண்டன்.

Thursday, March 26, 2009

திருமாவளவன் பேட்டி



'' திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொடரும்'' என்று முதல்வர் அறிவித்த பிறகும் காங்கிரஸ் தரப்பிலிருந்து உங்களுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதே ?


'' நான் தனிப்பட்ட முறையில் எந்த காங்கிரஸ் தலைவரையும் விமர்சிக்கவில்லையே ? ''பதிபக்தி இல்லாதவர்'' என்று சோனியாவின் நடத்தையை விமர்சித்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க தங்கபாலு, ஞான சேகரன் போன்றவர்கள் துடிதுடிக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் இதற்கு முன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், அதில் பல முரண்பாடுகளையும் கண்டுள்ளது. அந்தக் கட்சிகளை விட நான் எதுவும் பெரிதாகப் பேசி விடவில்லையே ?''


'' கருணாநிதி, முன்பு விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் நாம் ராஜீவ் காந்தியை இழந்தோம். இப்போது விடுதலை சிறுத்தைகளை ஆதரிப்பது சோனியாவுக்கு ஆபத்தாக முடியும்.'' என்று ஞான சேகரன் கூறியிருப்பது பற்றி ?


'' இதற்கு கலைஞர்தான் பதில் சொல்ல வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து திருமாவை வெளியேற்ற வேண்டும் என்பது காங்கிரஸின் இலக்கு அல்ல. திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு. அப்படித்தான் நான் கருதுகிறேன்.''


'' அம்பேத்கரின் கொள்கைப்படி காங்கிரஸ் கட்சியை அழிப்பதுதான் விடுதலைச்சிறுத்தைகளின் லட்சியம் '' என்று முன்பு கூறியிருந்தீர்கள். அந்த நிலைப்பாட்டில் இப்போது ஏதாவது மாற்றம் உள்ளதா ?


'' ஒரு தேர்தலுக்காக அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற முடியாது. அம்பேத்கரின் பார்வையில் அன்றைய காங்கிரஸ் கட்சி எப்படி இருந்தது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தேன். அதே நேரத்தில் இதைத் தேர்தலோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.''


வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்னைதான் முக்கியப் பிரச்னை. இதில் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி ஏற்கனவே காட்டமாக விமர்சித்த நீங்கள்,மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரம் செய்வீர்கள் ?


'' ஈழத்தமிழர்களுக்காக திமுக அரசு எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளது. அதில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ ராஜபக்ஷேவின் குரலாகவே ஈழப்பிரச்னையில் எதிரொலித்தார். ''புலிகள் ஆயுதங்களைப் போட்டு விட்டு சரணடைய வேண்டும் '' என்றும் '' போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் '' என்றும் பேசினார்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறாது என்று தெரிந்ததும் ஈழப்பிரச்னைக்காக ஜெயலலிதா தேவையில்லாமல் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அது அப்பட்டமான நாடகம் என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, ஈழப்பிரச்னை தொடர்பாக மாநில அரசு எடுத்த முயற்சிகளைச் சொல்லி நான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வேன்.''


மத்திய அரசின் சாதனை எதையாவது சொல்லித்தானே தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும் ?


'' இங்கே மத்தியில் ஆட்சியமைக்கும் தகுதியை காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே இழந்து விட்டன. மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை மாநிலக் கட்சிகள் தான் முடிவு செய்கின்றன. ஆகவே, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் போதும், மத்திய அரசின் சாதனைகளைச் சொல்லத் தேவையில்லை.


திமுக கூட்டணியில் நீங்கள் நீடிக்க விரும்புகிறீர்கள். காங்கிரஸோ உங்களை வெளியேற்ற கங்கணம் கட்டிச் செயல்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து இதற்காக சமரச முயற்சி மேற்கொள்வீர்களா ?


'' எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் அவர்களை நான் சந்திக்க மாட்டேன். இங்குள்ள காங்கிரஸ் கட்சியினரும் தமிழர்கள்தான். அவர்கள் ஒன்றும் மார்வாடிகளோ, குஜராத்திகளோ கிடையாது.''


”கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் பாமகவுக்கு சீட் பங்கீட்டில் உங்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ததால், ''எச்சில் இலைச் சோறு வேண்டாம்'' என்று ரோஷத்துடன் திமுக கூட்டணியில் இருந்து விலகினீர்கள். இப்போது நீங்கள் நீடிக்கக் கூடாது என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கும் நிலையில் உங்கள் ரோஷம் எங்கே போனது ?


'' தமிழகத்தில் நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அல்ல''


உங்களது இந்தப் பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தீர்வு காண முயல்வீர்களா ?


'' எங்கள் கொள்கையோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒத்துப் போகிறது'' என்று முதல்வர் அறிவித்த பிறகுதான் நான் அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன். நாங்கள் கூட்டணியில் நீடிப்பதாக அவரே அறிவித்து விட்டார். எனவே, என்னை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கேள்விக்கும் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்''.


உங்கள் பிரச்னை இப்படியே நீடித்தால் நீங்கள் அணி மாற வாய்ப்பு உண்டா ?


'' நாங்கள் இன்னும் தொகுதிப் பங்கீடு பற்றிகூட பேசவில்லை.''


நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

படங்கள் : இணையத்தில் இருந்து

Wednesday, March 25, 2009

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை- பொதுத் தேர்தல் 2009


தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

மதச்சார்பின்மை, தேசியவாதம், சமூகநீதி மற்றும் அனைவருக்கும் குறிப்பாக சாமான்ய மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சி என்பதே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தாரக மந்திரமாக உள்ளது.

இந்திய தேசிய கட்சி மட்டுமே அனுபவசாலிகள் மற்றும் இளைஞர்கள், சாதனை மற்றும் லட்சியத்தைக் கொண்டவர்களுக்காக செயலாற்றுகிறது.

ஒற்றுமையான இந்தியாவால் மட்டுமே பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட முடியும்.

இந்தியாவின் பாதுகாப்பும், ஒருமைப்பாடும் மிக முக்கியமானதாகும். இந்தியா உட்பட பல நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு மத மற்றும் அரசியல் எல்லைகள் கிடையாது. அப்பாவி மக்களுக்கு எதிராக மிகக் கொடிய முறையில் வன்முறையை ஏவி விடுவதே பயங்கரவாத சக்திகளின் நோக்கமாகும்.

எனவே பயங்கரவாதத்தை தீவிரமாகவும், அறிவுப்பர்வமாகவும், அச்சம் ஏதுமின்றியும் முறியடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது.

பயங்கரவாதத்தை ஒற்றுமையுடன் இருக்கும் மக்களால் மட்டுமே முறியடிக்க முடியும். மதத்தால் பிரிந்துள்ள மக்களால் முடியடிக்க முடியாது. இந்த கொடூரத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முறியடித்து, சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.

நம் நாட்டு எல்லைக்கு அப்பால் இருந்து ஏவப்படும் பயங்கரவாதத்தை ஒற்றுமையுடன் செயல்பட்டு முறியடித்தல் அவசியம்.

தவிர இந்தியாவிற்கு அறிவுப்பூர்வமான வெளியுறவுக் கொள்கை அவசியம். நமது பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையால், ஒற்றுமையுடன் பலமும் கிடைக்க வேண்டும். பொதுவான நோக்கத்துடன் நம்பிக்கையும் உருவாக வேண்டும்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலிமையான ராஜ்யரீதியிலான பிரசாரத்தை முன்வைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் முதல்முறையாக மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்ததை ஒப்புக் கொண்டது. இது நமது வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

உலக அளவில் பொருளாதார தேக்கநிலை நீடித்த போதிலும், இந்தியாவில் அதன் பாதிப்புகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியடையும் 2ஆவது நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

இதன்மூலம் நாடு நடுநிலையான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது.

பொதுத்துறை மற்றும் தனியார் துறையினருக்கு இடையேயும், கூட்டுறவு மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு இடையேயும் நடுநிலையான பங்கு உள்ளது.

நவீன பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய தொழில்களுக்கு இடையே புதிய உத்வேகம் பிறந்துள்ளது.

அமைப்புரீதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் நடுநிலையான போக்கு.

கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நடுநிலையைக் கடைபிடித்தல்.

கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சாதனைகளில் சாமான்ய மற்றும் ஏழை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடரும்.

நலிவடைந்த பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கல்வி, பொருளாதார வளர்ச்சியை நோக்கிய வேலைவாய்ப்புகள்.

லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றுள்ள தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

பாரத் நிர்மாண் திட்டம் : கிராமப்புறங்களில் வேளாண் சாகுபடி பரப்புகளைப் பராமரித்தல், சாலை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.

விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்தல்.

சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவி அளித்தல்.

சர்வ சிக்சா அபியான் எனப்படும் அனைவருக்கு கல்வித் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் திறம்பட செயல்படுத்துதல்.

கடந்த 5 ஆண்டுகால பொருளாதார சாதனைகள் தொடர வழிவகை செய்தல்.

ஜவஹர்லால் நேரு தேசிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம்.

அனைத்து மாநிலங்களுக்கும் போதிய நிதி ஆதாரம் அளித்தல்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி என்ன உறுதி அளித்ததோ, அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் வேகமான அதிக வளர்ச்சியை நோக்கி பயணிக்க காங்கிரஸ் உறுதி.

கடந்த 2008-09 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு அளித்தல்.

உயரிய பாதுகாப்புத் துறையை உருவாக்குவதுடன், பாதுகாப்புப் படையினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் போதிய நல உதவிகளுக்கு நடவடிக்கை.

காவல்துறை சீர்திருத்தத்தை விரைவுபடுத்துதல்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும்.

அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளிக்கப்படும்.

சிறப்புப் பிரிவின் கீழ் வருவோருக்கு ஒருங்கிணைந்த சமூகப்பாதுகாப்பு அளிக்கப்படும்.

அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தரமான கல்வி அளித்தல்.

தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்படும்.

விவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மேம்பாட்டிற்கான திட்டங்கள் கொண்டுவரப்படும்.

கூட்டுறவு அமைப்புகளை ஜனநாயக அடிப்படையில் மாற்றியமைத்தல்.

சமுதாயத்தில் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும்.

நெசவாளர்கள், மீனவர்கள், மீனவப் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கொண்டுவரப்படும்.

தோல் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்களுக்கும் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

மதவாதத்தை அனைத்துப் பிரிவுகளிலும் எதிர்க்கவும், ஜாதியக் கொடுமைகளை உறுதியுடன் எதிர்க்கவும் காங்கிரஸ் உத்தரவாதம்.

குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளின் மேம்பாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி ஆதாரம் அளித்து வலுப்படுத்த உறுதி.

3 ஆண்டுகளுக்கும் அனைத்துக் கிராமங்களும் பிராட்பேண்ட் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படும்.

சிறு தொழில்முனைவோரில் இருந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

மிகக் குறைந்த பணவீக்கத்தை கடைபிடிப்பதுடன் அதிக வளர்ச்சி விகிதத்தை கடைபிடிக்க முடிவு.

இந்தியாவின் இயற்கைவள சுற்றுச்சூழலை பாதுகாத்த, அவற்றை புத்துணர்வு பெறச் செய்தல்.

அறிவியல் - தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் புத்துணர்வு அடையச் செய்தல்.

நீதிமன்றத்தில் வழக்குகள் தாமதமாவதைத் தடுக்க நீதித்துறை சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

சுயேச்சையான, உள்நாட்டிற்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கை தொடரும்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி எடுக்கும்.

எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர, நிலையான நீடித்த, ஒருமைப்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை ஆதரியுங்கள்

நன்றி : வெப்துனியா.

Tuesday, March 17, 2009

வருண்காந்தி - மோடி நெ.2 ?

பிராணிகள் ஆர்வலர் என்ற வகையில் மேனகா காந்தி மீதும் எப்போதுமே பெரிய மரியாதை உண்டு. என் அசைவ உணவு பழக்கத்தை விட்டதற்கு அவரும் ஒரு காரணம். அவர் காங்கிரசை எதிர்த்தாலும் கூட குறை சொல்லும் அளவுக்கு எந்த முறைகேடுகளோ தரம் தாழ்ந்த அரசியலோ செய்ததில்லை என்றே நினைக்கிறேன். பிஜேபியில் இருக்கும் சில மரியாதைக்குரியவ்ர்களில் ஒருவர். ஆனால் அவர் மகன் வருண்காந்திக்கு திடீர் என்று இந்துத்துவ அரசியல்வாதி ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போலும். மோடியைப் பார்த்து கெட்டுப் போய்விட்டார் போல.

சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

வருண் உதிர்த்த முத்துக்கள்..
அவர்கள் (முஸ்லிம்கள்) கரிமுல்லா, நசருல்லா என பயமுறுத்தும் பெயர்களை வைத்திருக்கிறார்கள். அவர்களை இரவில் பார்க்க பயமாக இருக்கிறது. எனக்கு ஒரு உறவுக்காரப் பெண் இருக்கிறார். அனைத்து வேட்பாளர்களும் இருந்த ஒரு ஆல்பத்தை பார்த்தாள். அவள் ஏழு வயதாக இருக்கும் போது சமாஜ்வாதி வேட்பாளர் படத்தைக் காட்டி அண்ணா , உங்கள் தொகுதியிலிருந்து பின்லேடன் போட்டியிட்டது எனக்கு தெரியாதுஎன்றாள்....

முஸ்லிம் வேட்பாளார்கள் பின்லேடன் போல் இருக்கிரார்களாம். இப்படி அந்தப் பெண் சொன்னாரா அல்லது இவரே கதை அளக்கிறாரா தெரியவில்லை.

இது ”கை” இல்லை.. இது தாமரையின் சக்தி. இது முஸ்லிம்களின் தலையை வெட்டும். ஜெய் ஸ்ரீராம். யாராவது இந்துக்களை நோக்கி விரல்களை உயர்த்தினாலோ அல்லது இந்துக்கள் பலவீனமானவர்கள் அல்லது தலைவர்கள் இல்லாதவர்கள் என்று யாராவது நினைத்தாலோ, இந்தத் தலைவர்கள் வோட்டுக்காக அவர்களின் கால்களை நக்குவதாக நினைத்தாலோ நான் கீதை மீது ஆணையாக சொல்கிறேன். அவர்கள் கைகளை வெட்டிவிடுவேன்.

என்ன ஒரு ஆதிக்க மனோபாவம்.. என்ன ஒரு திமிரான பேச்சு.. இது தான் பிரிவினையைத் தூண்டும் செயல். தேர்தல் வந்தாலே பிஜேபியினருக்கு சிறுபான்மை மக்களை மிரட்டுவதே தொழிலாகிவிட்டது. இவ்வளவு நாளாக பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். குஜராத்தில் நடபெற்ற மத அழிப்பு முயற்சிக்கு பிறகு வருண்காந்தி போன்றவர்கள் நேரடியாகவே மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

Sunday, March 15, 2009

Think India.. Vote for UPA..

Friday, March 13, 2009

காங்கிரசின் இளமை பட்டாளம்

இந்திய பாராளுமன்றத்தில் காங்கிரசின் தற்போதைய இளமைப் பட்டாளம்

ராகுல்காந்தி

Education: M.Phil. in Development Economics, Educated at Trinity College, Cambridge University.



மிலிந்த் தியோரா

Education: BBA, Educated at Sydenham College, Mumbai and Boston University, USA


ஜிதின் ப்ரசாதா

Education: MBA, Educated at Sri Ram College of Commerce, Delhi and IMI, Delhi


புரந்தேஸ்வரி

Education: B.A. (Literature) and Graduate in Gemology, Educated at South Indian Educational Trust and Women College, Chennai and Gemological Institute of India.


ஜோதிராதித்யா சந்தியா

Education: M.A., MBA, Educated at Doon School, Dehradun, Harvard University and Stanford University, California


சச்சின் பைலட்

Education: B.A. (Hons), MBA Educated at St. Stephens College, University of Delhi, and Wharton Business School, University of Pennsylvania, Philadelphia, USA.


குஜராத் காங்கிரஸ் வேட்பாளர்கள்

குஜராத்
Sl.No.No & name of ConstituencySelected Candidate
11 KACHCHH (SC)DANICHA VALJIBHAI
24 MEHSANAJIVBHAI AMBALAL PATEL
35 SABARKANTHAMADHUSUDHAN MISTRY
411 PORBANDARVITTALBHAI RADADIA
516 ANANDBHARAT BHAI M. SOLANKI
617 KHEDADINSHA PATEL
718 PANCHMAHALSHANKARSINH VAGHELA
819 DAHOD (ST)SMT. PRABHA TAVIYAD
920 VADODHARASATYAJIT GAEKWAD
1021 CHHOTA UDAIPUR (ST)NARANBHAI J. RATHWA
1123 BARDOLI (ST)TUSHAR A CHAUDHARY
1226 VALSAD (ST)KISHANBHAI V PATEL


பொறுப்பாளர் 
திரு. ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ்

சட்டிஷ்கர் காங்கிரஸ் வேட்பாளர்கள்

LOK SABHA ELECTIONS 2009 - CHHATTISGARH

Press Release Monday, 9th Mar 2009

The candidates selected by the CEC for the ensuing Elections to the Lok Sabha from Chhattisgarh.

Sl.No.No & name of ConstituencySelected Candidate
11 SARGUJA (ST)BHANU PRATAP SINGH
23 JANGIR-CHAMPA (SC)DR. SHIV KUMAR DEHARIYA
34 KORBADR. CHARAN DAS MAHANT
46 RAJNANDGAONDEWRAT SINGH
510 BASTAR (ST)SHANKAR SINGH SODI
611 KANKER (ST)SMT. PHULO DEVI NETAM

OSCAR FERNANDES

Incharge, CEC

காங்கிரஸ் - திருணாமுல் காங்கிரஸ் தொகுதி பங்கீடு

                                                       

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இணைத்து பொதுத் தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 14 மற்றும் திருணாமுல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டி இடுகின்றன. இரண்டு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப் படுவார்கள்.

மேற்கு வங்கத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஏப்ரல் 30 - 14 தொகுதிகள்
மே 7 - 17 தொகுதிகள்
மே 13 - 11 தொகுதிகள்

Tuesday, March 3, 2009

கோவை மாநகராட்சி இடைத்தேர்தல் : காங்கிரஸ் அமோக வெற்றி

கோவை மாநகராட்சியின் 62வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காயத்ரி 925 ஓட்டுகள் வித்தியாசத்தின் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு வாழ்ட்துக்கள்.

ஓட்டுகள் விவரம்
  • காயத்ரி - காங் - 2364
  • அழகம்மாள் - கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை - 1439 ( அதிமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு)
  • சந்திரா - சுயேட்சை - 457
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களுக்கு ஓட்டளித்த அனைவருக்கும் நன்றிகள்.

இந்த இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி போட்டியிடவில்லை. ஆனாலும் ஜமுகூ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர்களை போட்டியிட வைத்து ஆதரித்தார்கள். ஆகவே திமுக- காங் கூட்டணியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததுதான். போலிகள் மற்றும் வேஷதாரிகளின் பொய்ப் பிரச்சாரங்களைத் தாண்டி திமுக - காங் கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு பெருமளவில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.