காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Saturday, December 12, 2009

இலங்கை பிரச்சனை - மாணிக்கத் தாகூர் வேண்டுகோள்

இந்திய இளம் எம்பிக்களின், அமெரிக்கத் தூதருடனான நல்லெண்ண சந்திப்பில் விருதுநகர் எம்பி மாணிக்கத்தாகூரும் கலந்துக் கொண்டார். அப்போது அமெரிக்க தூதரிடம் பேசிய மாணிக்கத் தாகூர், இலங்கையில் போரால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களை மறு குடியேற்றம் செய்ய அமெரிக்காவும் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு “ இந்தியாவே சரியான நடவடிக்கை” எடுத்து வருவதாக அமெரிக்கத் தூதர் கூறினார்.

Sunday, November 29, 2009

நாம் கைக்கூலிகள் இயக்கத்திற்கு கண்டனம்.

"வேசி மக்கள் புகழ்” சமூகவிரோதி சீமான் என்பவனின் தலைமையில் இயங்கும் நாம் கைக்கூலிகள் என்ற இயக்கத்தின் கோழைகள் சிலர் இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து காங்கிரசின் மூத்தத் தலைவர் திரு. இளங்கோவனின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் குண்டு தயாரித்து வீசும் அளவு தமிழகத்தின் நிலை ஆகிவிட்டது வேதனை. இந்த மாதிரி வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களின் கைக்கூலிகளாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சமூக விரோதிகளின் வன்முறைக் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

Tuesday, November 10, 2009

காங்கிரசில் இணைந்தார் திருநாவுக்கரசர்.

MGR அமைச்சரவையில் பெரும் அதிகாரத்துடன் இருந்து பின் அரசியல் சூழ்நிலைகளால் தனிக்கட்சி ஆரம்பித்து அதன் பின் BJPயில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் பிஜேபியின் மதவாதப் போக்காலும் RSSன் தலையீட்டாலும் விரக்தி அடைந்த திருநாவுக்கரசர் இந்தியாவின் மிகப் பெரும் இயக்கமான காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான திரு. குலாம் நபி ஆசாத் முன்னிலையில் திருநாவுக்கரசர், தன்னை 09-11-2009 அன்று காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.

வரும் 12ஆம் தேதி தன் ஆதரவாளர்களுடன் இணையும் விழாவை திருச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

http://congressmedia.net/articles/newsandmedia/pressbriefings/09nov2009.rst

Friday, October 23, 2009

காங்கிரஸ் வெற்றி தொடர்கிறது..

இந்த மாதம் 13ஆம் தேதி ( 13.10.2009 ) நடைபெற்ற மஹாராஷ்ட்ரா, ஹரியானா மற்றும் அருணாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று ( 22.10.2009) நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மஹாராஷ்ட்ராவில் தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.

மகாராஷ்ட்ரா காங் - 82 , தேசியவாத காங் - 62 = 144

அருணாச்சல் பிரதேஷ் : காங்கிரஸ் - 40 / 60

ஹரியானா : காங் - 40 / 90

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் தனிப் பெரும் கட்சியாக வென்றுள்ளது.. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. பிரதமர் மன்மோகன் சிங் நல்லாட்சியில் அன்னை சோனியாகாந்தி மற்றும் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் வெற்றி தொடர்கிறது... காங்கிரஸில் இருப்பதே பெருமை.. காங்கிரஸை வளர்ப்பதே கடமை..ஜெய் ஹோ..

Friday, October 9, 2009

ராஜபாளையம் தேர்தல் : காங்கிரஸ் பெரும் வெற்றி

2009 அக்டோபர் 7ஆம் தேதி நடைப்பெற்ற ராஜபாளையம் நகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியிடப் பட்டன. இதில் 19 வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

முடிவுகள் விவரம்
காங்கிரஸ் : 19
திமுக : 7
அதிமுக கூட்டணி : 10
மதிமுக : 3
சுயேட்சைகள் : 3

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. ஜெய் ஹோ..!

Sunday, September 6, 2009

தலைவர் ராகுல்காந்தி தமிழக சுற்றுப் பயண விவரம்

மிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பணிக்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகிறார். செப்டம்பர் 8,9,10 ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்களை சந்திக்கிறார். சுற்றுப் பயண விவரம்.

செப்டம்பர் 8, 2009
  • காலை 10.30 நாகர்கோவிலில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11.30க்கு திருநெல்வேலியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 1 மணிக்கு விருதுநகரில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 3.30 மணிக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு இளைஞர் SC/ST மாநாட்டில் பங்கேற்கிறார்.

செப்டம்பர் 9, 2009
  • காலை 9.30 மணிக்கு தஞ்சாவூரில் இளம் விவசாயிகளுடன் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு விழுப்புரத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பகல் 12 மணிக்கு வேலூர் CMC கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களுடன் சந்திப்பு
  • பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணாப் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 6.30 மணிக்கு சென்னையில் பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் நிறுவனர்களுடன் சந்திப்பு.
செப்டம்பர் 10, 2009
  • காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11 மணிக்கு கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பு.
  • பகல் 12.30க்கு சேலத்தில் தொழிலாளர்களுடன் சந்திப்பு.
  • பகல் 1.30 மணிக்கு சேலத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • மாலை 3 மணிக்கு கோவையில் இளைஞர்களுடன் சந்திப்பு
  • மாலை 4 மணிக்கு கோவை காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 5 மணிக்கு கோவை இளம் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு.


பத்திரிக்கை செய்தி:
"கிராமங்களில் இளைஞர்களை தேடி...'கட்சியை வளர்க்க ராகுல் வியூகம் : மதுரைக்கு ராகுல் வரும் நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுவிட் டது. ஆனால் இத்தகவல் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சில நாட்களுக்கு முன் வரை தெரியாது. ஒரு மாதத்திற்கு முன்பே, டில்லியில் இருந்து வந்து சில இளைஞர் காங்., நிர்வாகிகள் மதுரை லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.உள்ளூர் காங்., தலைவர் களை இவர்கள் தொடர்பு கொள்ள வில்லை. அவர்களின் வாகனங் களை பயன்படுத் தவில்லை. ஒரு டீ கூட வாங்கிக் குடிக்கவில்லை. தனித்தனியே இரு சக்கர வாகனங்களில் பல்வேறு கிராமங்களுக்கு சென்ற இவர்கள், எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களை சந்தித் தனர். காங்.,கில் இணைந்து பணியாற்ற விரும்புவோரை தேர்வு செய்து, அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் இ-மெயில் மூலம் தினமும் ராகுலுக்குஅனுப்பினர்.

அவற்றை அன்றன்றைக்கு பார்த்த ராகுல், டில்லியில் இருந்தபடியே சில யோசனைகளை தெரிவித்தார். இப்படியே இவர்கள் இரண்டாயிரத்து 500 இளைஞர்களை தேர்வு செய்தனர். மீதி இரண்டாயிரத்து 500 பேரை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் உள்ளூர் காங்., நிர்வாகிகளுக்கு தரப்பட்டது.இப்படி, ரொம்ப கவனமாக பல நாட்கள் திட்டமிட்டு ராகுல் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது. ஒத்த கருத்துள்ள இளைஞர்களை சேர்த்து, எதிர்காலத்தில் காங்கிரசை வலுவான கட்சியாக்கும் யோசனையில் இந்நிகழ்ச்சிக்கு ராகுல் ஏற்பாடு செய்துள்ளார். சொன்னதை செய்த ராகுல்: கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சிதம்பரத்தை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்தார். காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ""தமிழகம் எனக்கு பிடிக்கும். லோக்சபா தேர்த லுக்குப் பிறகு அடிக்கடி தமிழகம் வருவேன். நிறைய இளைஞர் களை சந்தித்து கட்சியை வலுப்படுத்துவேன்,'' என்றார். சொன்னது போலவே தற்போது தமிழகத்தில் தீவிர சுற்றுப் பயணத்தை துவக்கி இளைஞர் களை சந்திக்கிறார் ராகுல்.

நன்றி : தினமலர்

Thursday, September 3, 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆந்திராவில் மிகத்திறமையாகவும் மக்களின் நன் மதிப்புடனும் ஆட்சி செய்து பலத்தப் போட்டிகளுக்கிடையே ஆந்திர மக்களால் தொடர்ந்து இரண்டாவது முறையாக மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்தவருமான முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கும் அவருடன் பயணித்து மரணம் அடைந்த விமான ஓட்டிகள், அரசு அலுவலர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.

  • பிறந்தது : ஜூலை 8, 1949
  • மருத்துவர்
  • நான்கு முறை ஆந்திர சட்ட மன்றத்திற்கும் நான்கு முறை பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
  • போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வென்றவர்.
  • இரண்டு முறை ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர்.
  • ஒரு முறை ஆந்திர சட்டசபை எதிர்கட்சித் தலைவராக இருந்தவர்.(1999-2004)
  • 2004 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 185 தொகுதி வெற்றிகளுடன் முதல்வராக இருந்தார்.
  • 2009 தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார்.
  • 2009 பாராளுமன்றத் தேர்தலில் 33 தொகுதிகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்.
  • செப்டம்பர் 2, 2009ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அகில இந்திய அளவிலும் மிகப் பெரும் இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

Thursday, July 16, 2009

காமராஜர் பிறந்தநாள் விழா

தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.
படம் : தினமணி.

விருதுநகர்
காமராஜரைப் போல் எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என காமராஜர் பிறந்த நாள் விழாவில் மத்திய தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் பேசினார். விருதுநகரில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா நடந்தது.மாணவர் காங்கிரஸ் தலைவர் நவீன் தலைமை வகித்தார். மாணிக் தாகூர் எம்.பி., முன்னிலை வகித்தார். விருதுநகர் தொகுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் முன்று இடங்கள் பெற்றவர்களுக்கு மத்திய இணைஅமைச்சர் சிங் சான்றிதழும், கேடயமும் வழங்கிப்பேசுகையில்,"காமராஜரின் எளிமையும், நேர்மையும் நாடு முழுவதும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தமிழக முதல்வராக இருந்த போது மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டமும், கிராமப்புறங்களில் சிறியஅணைகள் கட்டுவதற்கும், தொழிற்சாலைகள் உருவாவதற்கும் அடிப்படை காரணமாக இருந்தார். மாணவர்கள் காந்திய கொள்கைகளை பின்பற்றி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும். காமராஜரைப் போல் மாணவர்கள் எளிமையாக வாழவேண்டும்' என்றார். அமைச்சரின் பேச்சை விருதுநகர் எம்.பி., மாணிக் தாகூர் தமிழில் மொழி பெயர்த்தார்.

நன்றி : தினமலர்.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று(15.07.2009) கொண்டாடப் பட்டது.

Friday, June 26, 2009

பொறுமை 'ஓவர்'.. இலங்கைக்கு இந்தியா தந்த 'ஷாக்'

டெல்லி: தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும், அப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் பணியில் நீ்ங்கள் விரும்பாவிட்டாலும் நாங்கள் ஈடுபடுவோம் என்று இலங்கையிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.மேலும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி வந்த அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்களிடம் இந்தியா கூறியுள்ளது.புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை ராணுவம் முடிக்கும் வரை பொறுமை காத்த மத்திய அரசு இப்போது தமிழர்களின் உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகளை மெல்ல தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரான பாதுகாப்பு ஆலோசகர் பாசில் ராஜபக்சே, இன்னொரு சகோதரரும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே ஆகியோர் அதிபரின் செயலாளர் லலித் வீரசிங்கவுடன் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இந்த விஷயங்களை இந்தியத் தரப்பு எடுத்து வைத்தது.தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் ராணுவத்தினரின் அளவுக்கு அதிகமான நடமாட்டம்தான் என்று 'ரா' கொடுத்துள்ள தகவல்கதளை சுட்டிக் காட்டிய இந்தியத் தரப்பு உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வலியுறுத்தியது.அதே போல இந்தக் குழு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது, முகாம்களில் தமிழர்கள் போதிய உணவு, சுகாதார வசதியின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளது கவலை தருவதாகக் கூறிய அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தமிழர்கள் பாதிப்பு அடைந்து வருவதால் அனைத்து முகாம்களையும் மூடிவிட்டு அவர்கள் உடனே வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இந்தக் குழு இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சி்ங்கை சந்தித்தபோது, தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியை இலங்கை அரசு உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் கண்ணி வெடிகள் அகற்றும் பணியை இலங்கை அரசு 10 நாட்களுக்குள் தொடங்காவிட்டால் அதன் பிறகு அந்தப் பணியில் இந்தியா ஈடுபடும் என்றும் திட்டவட்டமாக இலங்கை குழுவிடம் கூறப்பட்டுள்ளது.புலிகளின் பெயரால் சீனா, பாகிஸ்தானுடன் இலங்கை நெருக்கம் காட்டியதை இந்தியா எரிச்சலுடன் பார்த்து வந்தது. இந் நிலையில் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதால் இலங்கையை மீ்ண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாகவே தமிழர் பிரச்சனையில் இனியும் மத்திய அரசு அமைதியாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மறு சீரமைப்புக்கு வேண்டிய அளவு உதவுவதாகவும் அந்தக் குழுவிடம் மத்திய அரசு உறுதி தந்துள்ளதோடு, இனியும் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் எண்ண ஓட்டங்களை புறக்கணித்துவிட்டு செயல்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழர்களுக்கு உரிய மரியாதை, அரசியல் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிங்களர்களுக்கு இணையான சம வாய்ப்பும் தரப்பட வேண்டும் என்றும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்திலிருந்து கடும் அரசியல் நெருக்குதல் தரப்பட்ட நிலையிலும் புலிகள் விஷயத்தில் இலங்கையின் ராணுவரீதியான நடவடிக்கைகளில் தலையிடாமல் இருந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் கிருஷ்ணா, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பகை நாடுகளுடன் இலங்கை அளவுக்கு அதிகமாக நெருங்குவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரித்துவிட்டார்.மேலும் கச்சத் தீவை ராணுவ கேந்திரமாக்கவோ இலங்கையில் சீனா கடற்படைத் தளம் அமைக்கவோ இந்தியா அனுமதிக்காது என்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சிங் தெரிவித்தார்.தங்களுடன் கொஞ்சிக் குலாவிய இந்திய அதிகாரிகள் திடீரென இவ்வளவு கடுமையாகப் பேசியதை இலங்கை குழு எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மகிழ்ச்சியோடு டெல்லி வந்த குழு இறுக்கத்துடன் தான் கொழும்பு திரும்பியுள்ளது.
இதையடுத்தே நேற்று இலங்கை அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் 6 மாதத்துக்குள் அவரவர் இல்லங்களுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- Courtesy : thatstamil.com

Wednesday, May 27, 2009

புலிகளின் கடைசித் தொடர்பு - லண்டன் சண்டே டைம்ஸ்

இறுதிக் கட்ட நேரத்தில் நடேசனுடன் ஒரு தொலைபேசித் தொடர்பு...: லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் விளக்கம்
வீரகேசரி இணையம் 5/26/2009 9:09:49 AM -

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளா நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் இறுதிக்கட்ட நேரத்தில் தான் கொண்டிருருந்த தொடர்பை லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் நேற்று விபரமாக எடுத்துக் கூறியுள்ளார்.

"அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு... ஆனால் சில மணி நேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஓரிடமும் இருக்கவில்லை போலும்" என சன்டே டைம்ஸ் செய்தியில் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்"- செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில், கடைசியாக நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுப் பகுதிக்குள் இருந்து, 17.05.2009 ஞாயிறு பின்னிரவு நடேசன் என்னிடம் கூறினார். பின்புறத்திலிருந்து இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்கள் தெளிவாக எனக்குக் கேட்டன.

"ஒபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானியா அரசிடம் இருந்து எங்களின் பாதுபாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். எங்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?" என்று அவர் கேட்டார்.

புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையிலான 26 வருட போரில், வெற்றிகண்டுள்ள சிறிலங்கா இராணுவத்திடம், சரணடைவது மிக அபாயமானதென்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

8 வருடங்களுக்கு முன்பிருந்தே நடேசன், புலித்தேவன் ஆகியோரை எனக்குத் தெரியும். அப்போது தீவின் 3 இல் 1 பங்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இப்போது, இவர்கள் இருவரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர்.

கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து வந்தேன். நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுடன் பறிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்:

ஆயுதங்களைக் கீழே போடுவதாக.....

தாம் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், தமது பாதுகாப்புக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உத்தரவாதம் தர வேண்டுமென்றும், தமிழர்களுக்கு மற்றுமொரு அரசியல் தீர்வு எடுக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த நடவடிக்கை சமாதானம் வருவதற்கான ஓர் அறிகுறியாகவே எனக்குத் தோன்றியது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்குக் குழிக்குள் இருந்தவாறு சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்.

கடைசி ஞாயிறு இரவில், சிறிலங்கா இராணுவம், மிக நெருங்கி வந்த போது, புலிகளிடன் இருந்து, எந்தவித அரசியல் கோரிக்கையும் புகைப்படங்களும் கிடைக்கவில்லை. முன்னர் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க நடேசன் மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது, அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்றும் கூறினார்.

நியூயோர்க்கில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஒன்றினூடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன். அப்போது அங்கே நேரம் காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன்.

வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரி...

அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலுக்கான பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகக் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார்.

சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார்.

லண்டனில் அப்போது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி எடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்புக்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன்.

தென் ஆசியத் தொடர்பிலிருந்து திங்கள் காலை 5.00 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கும் நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன் எல்லாமே முடிந்து விட்டது, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று.

சரணடைதல் பிழையானது ஏன்?

அன்று மாலை, சிறிலங்கா இராணுவம் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள். சரணடைதல் பிழையாகிப் போனது ஏன்? விரைவில் இதனை நான் கண்டுபிடிப்பேன்.

ஞாயிறு இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவையும் நடேசன் தொடர்பு கொண்டுள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். சந்திரநேரு உடனடியாக ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டதாக அறிகிறேன்.

பிந்திய மணித்தியாலங்களில் நடந்தவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

"ஜனாதிபதி தான் நடேசனுக்கும் அவர் குடும்பத்துக்கும் முழுப் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தாரே...? தன்னோடு 300 மக்கள் உள்ளார்கள் என நடேசன் கூறியிருந்தார், சிலர் காயப்பட்டும் இருந்தார்கள்.

நான் ஜனாதிபதியிடம், "நான் நேரில் போய் அவர்களது சரணடைதலை ஏற்கிறேன்" எனக் கூறினேன். அதற்கு ராஜபக்ஷ, "இல்லை, எங்கள் இராணுவம் மிகவும் பெருந்தன்மையும் கட்டுப்பாடுமுடையது. நீங்கள் போர் நடக்கும் இடத்துக்குச் சென்று உங்கள் வாழ்க்கையை இடருக்குள்ளாக்கத் தேவையில்லை" என்று கூறினார்.

பசில், ஜனாதிபதியின் சகோதரர், என்னை அழைத்து, "அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், அவர்கள் வெள்ளைக் கொடியை ஏந்த வேண்டும்" என்றவர், அவர்கள் தொடர வேண்டிய பாதையையும் கூறினார்." இப்படிச் சந்திரநேரு என்னிடம் கூறினார்.

சந்திரநேரு நடேசனை காலை 6:20 மணிக்குத் தொடர்பு கொண்டாராம். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்ததாம்.

"நாங்கள் தயார்." நடேசன் சந்திரநேருவிடம் கூறினார். "நான் வெளியே வந்து வெள்ளைக் கொடியை ஏற்றிப் பிடிக்கப்போகிறேன்" என்றார்.

சந்திரநேரு, "கொடியை உயர்த்திப்பிடி சகோதரனே-அவர்களுக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன்" என்று கூறியிருந்ததாக அறிகின்றேன்.

தப்பி வந்தவர் தந்த விபரம்

கொலையிடத்தில் இருந்து தப்பித்து கூட்டத்துடன் வந்திருந்த ஒரு தமிழர் அதன்பின் என்ன நடந்தது என்பதை விவரித்தார். இவர் பின்னர் உதவிப் பணியாளர் ஒருவரோடு கதைக்கும்போது,

"நடேசனும் புலித்தேவனும், ஆண்களும் பெண்களுமுள்ள கூட்டத்தோடு, வெள்ளைக் கொடியோடு சிறிலங்கா இராணுவத்தை நோக்கி நடந்து வந்தார்கள். இராணுவம் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது.

நடேசனின் மனைவி, ஒரு சிங்களப் பெண்மணி. அவர் சிங்களத்தில் கத்தினார். "அவர்கள் சரணடையத்தானே வந்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களைச் சுடுகிறீர்களே..." என்ற அவரது மனைவியும் சுடப்பட்டார். சரணடைய வந்த சகலருமே கொல்லப்பட்டார்கள்". விபரம் கூறிய அந்தத் தமிழ் நபர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதியாலும் அவர் சகோதரராலும் விரட்டப்பட்டதால், சந்திர நேரு இப்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரி, சரத் பொன்சேகாவுக்கு ஒரு சிறந்த இராணுவத் தலைவனின் தன்மைகள் உள்ளன என்று சரிஷ் ஒரு தடவை பாராட்டியுமுள்ளார்.

சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகள் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், நடேசனும் புலித்தேவனும், தமிழர் உரிமைப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வையே காண விரும்பியிருந்தார்கள். உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள்."

இவ்வாறு லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார்.

நன்றி : Express News.

Saturday, May 23, 2009

நீங்கள் கேட்ட எம்பி : மாணிக் தாகூர்

விருதுநகரில் வைகோவைத் தோற்கடித்த மாணிக்தாகூர் இப்போது செயலில் இறங்கிவிட்டார். இவர் ராகுல்காந்தியின் நேரடித் தொடர்பில் இருப்பவர். ராகுலின் விருப்பத்தின் பேரிலேயே விருதுநகர் வேட்பாளராகி வென்றவர். ராகுல்காந்தி நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர் பாசறையில் தீவிரமாக பங்காற்றுபவர்.

திரு.மாணிக் தாகூருக்கு விருதுநகரில் ஏற்கனவே தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள அது மட்டும் போதாது என்பதால் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்ககளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பதிவை எழுதும் நேரத்தில் கூட அதற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார். எல்லா அலுவலகங்களிலும் கட்சி சாராத பணியாளர்களை தான் நியமிக்க வேண்டும் என்பதில் மாணிக் தாகூர் உறுதியாக இருக்கிறார்.

அனைத்து அலுவலகங்களும் இணையம் மூலம் இணைக்கப் பட்டிருக்கும். தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் தங்கள் கோரிக்கைகளை அருகில் இருக்கும் அலுவலங்கங்களில் தெரிவிக்கலாம். அவைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப் படும். மாதம் ஒரு முறை அந்தந்த சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்து அவைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இன்னும் சில நாட்களில் அலுவலக பணிகள் முடிந்து விடும். பிறகு அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் ஆகிய விவரங்கள் வெளியிடப் படும். விருதுநகர் தொகுதியை சேர்ந்த பதிவர்கள் அங்கு மேற்கொள்ளப் பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளைப் பற்றிய விவரங்களை சொன்னால் அவை அனைத்தும் மாணிக் தாகூர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லப் படும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Thursday, May 21, 2009

திமுக வெளியிலிருந்து ஆதரவு

அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திமுக மத்திய அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளது. திமுக விரும்பிய எண்ணிக்கையிலும் விரும்பிய துறைகளான ரயில்வே மற்றும் சுகாதாரத்துறையை பெருவதிலும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

திமுக 5 கேபினெட் அமைச்சர் பொறுப்பும் 4 இணை அமைச்சர் பதவியும் கேட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் 7 வரை கொடுக்க சம்மத்தித்ததாக அதன் செய்தித் தொடர்பாளார் அறிவித்துள்ளார்.

நினைவஞ்சலி : ராஜிவ்காந்தி


பாரத முன்னாள் பிரதமர் உயர் திரு. ராஜிவ்காந்தி அவர்களின் 18வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது.

Wednesday, May 20, 2009

தமிழக டகால்ட்டி கட்சிகள் - 1

இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. அதில் முக்கிய்மானது தமிழகத்தில் பிலிம் காட்டிக் கொண்டிருந்தவர்களின் வண்டவாளம் தெரிய வந்ததே. காங்+திமுக கூட்டணி 12 இடங்களில் தோற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசங்கள் மிகவும் குறைவாகவே பெற்று தோற்றிருக்கிறார்கள். 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இருந்து 6 சதம் வரை குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் அதிக பட்சமாக 9 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம். ஈரோடு , திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்றப் பேரவையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டும் குறைவான வித்தியாசத்திலேயே காங்கிரஸ் கூட்டணி தோல்வி. இத்தனைக்கும் இந்த பகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கூட்டணி. விடுதல சிறுத்தைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்ற 12 இடங்களில் 2, 3 தொகுதிகள் தவிர மற்ற அனைத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகள் தான். விசியால் எந்த ஆதாயமும் இல்லை. எனவே இந்த குறைந்த வாக்கு வித்தியாச தோல்விகளை சரி செய்து விட முடியும்.

ஆனால் அதிமுக கூட்டணி தோற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள். முதலில் பாமக. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தங்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாக ஊரை ஏமாற்றுபவர்கள்.

தருமபுரி,
பாமக வாங்கிய வாக்குகள் - 29.54 % (அதிமுக+2 கம்யூனிஸ்டுகள்+மதிமுக)
திமுக வாங்கிய ஓட்டுகள் - 47 %. ( திமுக+காங்கிரஸ்+விசி)
பாமக தோல்வி வித்தியாசம் - 17% க்கு மேல்.

தருமபுரியின் அரூர் தொகுதியில் கணிசமான கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போதயை சட்ட மன்ற உறுப்பினர் கூட கம்யூனிஸ்ட் தான். இந்த 29 சதவீதத்தில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் போக பாமகவின் வாக்குகள் எவ்வளவு இருக்க முடியும்?. மிக சொற்பமாகத் தானே. இன்னும் தருமபுரியை பாமக கோட்டை என ஏமாற்ற முடியாதே. :)

அரக்கோணம்
பாமக - 26.32% - இதிலும் 4 கூட்டணி கட்சிகள் வாக்குகள் போக பாமகவின் வாக்குகள் சொற்பமாகவே இருக்கு.
திமுக - 36%
பாமக தோல்வி வித்தியாசம் - 9%க்கு மேல்.

ஸ்ரீபெரும்புதூரில் மட்டுமே குறைவான வாக்குகள் வித்தியாசம் : 3.16%

திருவண்ணாமலை
பாமக - 34%
திமுக - 52%
தோல்வி வித்தியாசம் - 18%

கள்ளக்குறிச்சி
பாமக - 34%
திமுக - 48 %
தோல்வி வித்தியாசம் - 14%

சிதம்பரம்
பாமக - 29%
விசி - 38%
தோல்வி வித்தியாசம் - 9%

புதுச்சேரி
பாமக - 36%
காங்கிரஸ் -52%
தோல்வி - 16%

பாமக வாங்கிய வாக்குகளில் , 4 கூட்டணிக் கட்சிகள் வாக்குகள் போக பாமக எவ்வளவு?. இவ்வளவு நாளா எப்படி எல்லாம் மருத்துவர் ஏமாத்தி இருக்கிறார் பாருங்க. அவர் பலம் என்னன்னே தெரியாம ஒவ்வொரு முறை அவர் தாவும் போதும் இஷ்டத்துக்கு எண்ணிக்கையை சேர்த்துக் கொடுத்திருக்காங்க. பாமகவிற்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது. ( யார்னா ஒரு வங்கி ஆரம்பிச்சிக் குடுங்கய்யா) . இவர்கள் வாங்கியதும் பெருமளவில் அதிமுகவின் வாக்குகள் மட்டுமே. இனியாவது மருத்துவர் தன் பலம் அறிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.

Monday, May 18, 2009

காங்கிரஸ் + திமுக கூட்டணி தோல்வி - ஒரு படப் பார்வை

மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தான் தோல்வி. விரைவில் சரி செய்தால் நல்லது. மின் தடை இல்லாமல் இருந்தாலே போதும். இனி எல்லாம் சுபமே. ;)

Sunday, May 17, 2009

காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி - ஈழப் பிரச்சனைக் காரணமில்லை

தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர் இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டார்கள். அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தோல்விக்கும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இணையத்தில் எழுதும் சில டைம்பாஸ் அரசியல் நிபுணர்கள் , காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்குக் காரணம் ஈழத் தமிழர் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் காரணம் காங்கிரஸ் என்ற பித்தலாட்ட பிரச்சாரமும் அதனை செய்த பாரதிராஜா, சீமான் போன்ற வேஷதாரிகளும் தான் என அளந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அறிவைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் தான் இந்த பதிவைப் போட வேண்டியதாகிவிட்டது.

தங்கபாலு 50,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி.
சேலம் மாநகரம் திமுகவின் கோட்டை. ஆனால் மொத்த மாவட்டமும் பார்த்தால் அதிமுக செல்வாக்கு அதிகம். சென்ற முறை வெற்றிக்குக் காரணம் பாமக, மதிமுக, 2 கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் வாக்குகளும் கிடைத்ததால் தங்கபாலு வெற்றி பெற்றார். இப்போது இவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணி. நிச்சயம் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து 50000 வாக்குகளுக்கு மேல் வாக்கு வங்கி இருக்கு. எனவே ஈழப் பிரச்சனைக்கும் தங்கபாலு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஈரோட்டில் இளங்கோவன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
இதற்கு முதல் காரணம் இவர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தான். திமுக மற்றும் காங்கிரசில் இருக்கும் ஒரு பகுதி கவுண்டர்கள் கூட மதிமுகவின் கணேச மூர்த்திக்கு வாக்களித்தார்கள். எல்லாம் சாதிப் பாசம். கூடவே கொமுபே வேட்பாளர் வாங்கிய 1 லட்சம் ஓட்டுகள். இந்த ஓட்டுகளில் பெரும்பாலானவை காங்கிரஸ்+திமுக கூட்டணிக்கு வர வேண்டியவை. காரணம் கடைசியில். மிக முக்கியமாக மின் தடை. ஈரோடு மாவட்டம் முழுதும் விசைத்தறிகள் தான் மிகப் பெரிய தொழில். மின் தடையால் வேலை இழந்தவர்கள் மிக மிக அதிகம். அவர்களின் கோபம் திமுக கூட்டணிக்கு எதிராக திரும்பியது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் இளங்கோவன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

திருப்பூரில் கார்வேந்தன் 90000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் இளங்கோவனுக்கு பாதகமாக அமைந்த அதே விஷயங்கள் தான். மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 95000 வாக்குகள். பெரிய வாக்கு வித்தியாசம் எற்படக் காரணம், கம்யூனிஸ்டுகள் ஓரளவு செல்வாக்குள்ள தொகுதி தான் திருப்பூர். எனவே அதிமுகவிற்கு அது பெரிய பலம். எனவே ஈழப் பிரச்சனைக்கும் கார்வேந்தன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கோவை பிரபு 40,000 வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 1,28,000 வாக்குகள் தான் தோல்விக்க்குக் காரணம். மின்தடையால் தொழிற்சாலைகளில் 3 ஷிப்டுகள் 2 ஷிப்டுகளாக குறைக்கப் பட்டது. இதனால் வேலை இழப்பும் வருமான இழப்பும் மிகப் பெரிய அளவில் இருக்கு. லக்ஷ்மி மில்ஸ் மாதிரி மிகப் பெரிய குழுமத்தில் சில யூனிட்கள் கூட மூடப் பட்டு ஆயிரக் கணக்கானவர்கள் வேலை இழந்தார்கள். இதனால் திமுகவினரே ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தார்கள். அவர்களின் வாக்குகள் கொமுபேக்கு போனது. இது என் நேரடியாக பார்த்த அனுபவம். மேலும் கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணிக்கு பலம். வெற்றி பெற்றவரும் கம்யூனிஸ்டு தான். அதோடு சேர்த்து கோவையில் பலமான சக்திகளாக இருக்கும் காங்கிரசின் ஒரு பிரிவினைரை பிரபு கண்டுகொள்ளவே இல்லை. அவர் இஷ்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்தல் சமயத்தில் மாற்றி அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். இதை செய்யாமல் இருந்தாலே வென்றிருப்பார். எனவே ஈழப் பிரச்சனைக்கும் பிரபு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மணிஷங்கர் ஐயர் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மணிசங்கர் ஐயர் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டிருப்பதாக சொன்னாலும் கூட பெரும்பாலும் தொகுதியில் இல்லாமல் டில்லியிலேயே இருந்திருக்கிறார். அந்த அதிருப்தி மற்றும் ஜவஹிருல்லா பிரித்த முஸ்லிம் ஓட்டுகள் மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் 4 கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து 30000 வாக்குகளாவது இருக்கும். ஜவாஹிருல்லா 20000+ அதிமுக கூட்டணியின் 30000 வாக்குகள் சேர்ந்தாலே 50000 வாக்குகளுக்கு மேல் அதிமுகவிற்கு கிடைக்கிறது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் மணிசங்கரின் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.


கொங்கு மண்டலத்தில் கொமுபே வாங்கிய ஓட்டுகள் ஏன் காங்+திமுக கூட்டணியை பாதித்திருக்கிறது என்று சொல்கிறேன் என்றால், அவர்கள் பலமில்லாத மற்ற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேமுதிக பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை. ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, கரூர் ஆகியத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தான் வென்றிருக்கிறது. எனவே கொமுபே ஓட்டுகளுக்கும் அதிமுக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. ஆகவே கொமுபே பிரித்த ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டியது தான். பொதுவாக கவுண்டர்கள் ஓட்டுகள் அதிமுகவிற்கு தான் என்ற கருத்து உண்டு. ஆனால் அது பொய் என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கூட்டணிகளின் தயவால் தான் இந்தப் பகுதிகளின் அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பகுதிகளுக்காக அடுத்து வரும் தேர்தல்களில் கொமுபே க்கு டிமாண்ட் அதிகரிக்கலாம். ஹ்ம்ம்.. அடுத்த பாமக ரெடி . :(

சிலர் புலம்புவது, காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. இதைக் கேட்டால் சிரிப்பு தன் வருகிறது. அதிமுகவிடம் காசு இல்லையா? பாமகவிடம் காசு இல்லையா? அவர்கள் எல்லாம் காசே கொடுக்கவில்லையா? காசு தான் ஓட்டு வாங்கும் என்றால் கரூரில் கேசி.பழனிச்சாமி தான் வென்றிருப்பார். அவர் செய்யாத செலவா?.ஆனால் தம்பிதுரை தான் ஜெயிச்சார். காரணம், அங்கும் மின் தடை மிகப் பெரிய பிரச்சனை. கரூரும் தொழில்வளம் மிக்க மாவட்டம். மின் தடையால் வேலை இழந்தவர்கள் அங்கும் அதிகம். எனவே காங்கிரஸ் மற்றும் திமுகவில் சில வேட்பாளர்களின் தோல்விக்கும் ஈழப் பிரச்சனைக்கும் பாரதிராஜா, சீமான் போன்ற நச்சுப் பாம்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சினிமாக் காரர்களின் முகத்தில் மக்கள் மலத்தைப் பூசி இருக்கிறார்கள் என்பதே நிஜம். இவர்கள் பரப்பிய பொய்யை மக்கள் நம்பி இருந்தால் அதிமுக போட்டியிட்ட 23 தொகுதிகளின் வெறும் 9 தொகுதிகள் தான் ஜெயித்திருக்குமா? காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 16 . வென்றவை 9 தொகுதிகள். அதிமுக போட்டியிட்டது 23 இடங்கள். வென்றவை 9 மட்டுமே. மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஆகவே இணையத்து டைம்பாஸ் அரசியல் நிபுணர்களே , குய்யோ முறையோன்னு கத்தாம எதார்த்தத்தை கொஞ்சம் யோசிங்க. சினிமாக் காரனுங்க பின்னாடி சுத்தாதிங்க. அவனுங்க கோடி கோடியா சம்பாதிக்கிறானுங்க. கொஞ்ச நாள் சீன் போட்டு சுத்தறதால அவனுங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்கு அப்படியா? சொல்லுங்க.

ஈழப் பிரச்சனை தான் முக்கியம்னு மக்கள் நினைச்சிருந்தா, அதை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்த கம்யூனிஸ்டுகள் ஏன் தோற்றார்கள்? ஈழத்து நாயகனாக நினைத்து உதார் விட்டு திரிஞ்ச வைகோ ஏன் தோற்றார்? ஈழம் தான் உயிர் மூச்சென்று நாடகம் போட்ட பச்சோந்தி ராமதாஸ் கட்சி ஏன் தோற்றது? ஈழம் வாங்கித் தருவேன் என்று தேர்தலுக்காக நாக்கைத் திருப்பிய “ ராஜபக்‌ஷேவின் பெண் குரல்” ஜெயலலிதா கட்சிக்கு ஏன் இவ்வளவுப் பெரிய தோல்வி?.

தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள்...!

பாமகவின் ராஜதந்திரம் அடுத்த பதிவு...

Monday, May 4, 2009

உங்கள் ஓட்டு ”இலங்கைத் தமிழர்” நலன் காக்கும் புரட்சித் தலைவிக்கே.

தனி ஈழம் அமைய வேண்டுமானால் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கே ஓட்டுப் போடுங்கன்னு ”உணர்வாளர்கள்” எல்லாம் கூவிக் கூவி ஓட்டுக் கேக்கறாங்க. ஏனுங்கணா இப்டி கூவறிங்கன்னு கேட்டா, அவங்க தான் தனி ஈழம் பெற்றுத் தருவாங்களாம். பாவமா இருக்கு இவங்களைப் பார்த்தால்.

ஜெயலலிதாவோட குரலில் அலைபேசிகள் வழியாகவும் பண்பலை ரேடியோக்கள் வழியாகவும் நிமிடத்துக்கு ஒரு முறை ஓட்டுக் கேட்கும் விளம்பரம் வருகிறது. அதில் “இலங்கைத் தமிழர் நலன் காக்க” என்று தான் சொல்கிறார். ஈழத் தமிழர் நலன் என்று சொல்லவில்லை. பேச்சுக்குக் கூட ஈழம் என்ற வார்த்தையை உபயோகிக்க மறுப்பவர் ஈழம் பெற்றுத் தருவாராம். தேர்தல் முடியட்டும். அப்புறம் பாருங்க அம்மாவோட அருள் வாக்குகள் எப்டி இருக்குன்னு. போட்ட கையெழுத்தையே இல்லை என்று சொன்னவர் தன் பெயரில் வந்த காசோலையை பணமாக்கிவிட்டு அனுப்பியவர் யார் என்று தெரியாது என்று சொன்னவர் ஈழம் அமைந்தால் இலங்கையின் ஒருமைப் பாடு பாதிக்கும் என்று மீண்டும் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?. என்னவோ போங்க.

Thursday, April 30, 2009

மணிசங்கர் அய்யர் இணையதளம் - தலைப்பே கலக்குது போங்க.. :)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான திரு,மனிஷங்கர் அய்யர் அவர்கள் தனக்கான அதிகாரப் பூர்வ இணையதளத்தை துவக்கி இருக்கிறார். அதில் அவர் வாழ்க்கை வரலாறு, பங்கேற்ற நிகழ்ச்சிகளின் விடியோ தொகுப்புகள், மயிலை தொகுதியில் நிறைவேற்றப் பட்ட நலத் திட்டங்கள், சாதனைகள் ஆகியவை மயிலாடுதுறை பாராளுமன்றத்துக்குட்பட்ட சட்ட மன்றத் தொகுதிகள் வாரியாகவும் பட்டியலிட்டிருக்கிறார். தொகுதியில் இருக்கும் அவர் அலுவலகங்களின் முகவரிகள், நிர்வாகிகள் முகவரிகள் , தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் கொடுத்திருக்கிறார்.

தலைப்புக்கு ஐடியா குடுத்தது யாருங்க? :)). சும்மா கும்முன்னு இருக்குல்ல. மணி என்பது காங்கிரஸ் கொடி வண்ணத்திலும் சங்கர் என்பது திமுக கொடி வண்ணத்திலும் அய்யர் என்பது விசி கொடி வண்ணத்திலும் உறுவாக்கி இருக்கிறார்கள். மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் படமும் முகப்பில் போட்டிருக்கிறார்.

தமிழ் ஆங்கிலம் 2 மொழிகளிலும் தகவல்கள் இருக்கின்றன.

இணையதள முகவரி : http://www.manishankaraiyar.com/

ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா...



In an exclusively interview with TIMES NOW, BJP president Rajnath Singh ducked the question of Narendra Modi being as the future Prime Minister। BJP leaders Arun Jaitley, Arun Shourie as well as former party president Venkaiya Naidu has vouched for Modi for the PM's post. However, when questioned by TIMES NOW correspondent in Lucknow, Rajnath Singh avoided the questioned and walked off.

--http://www.timesnow.tv/videoshow/4315016.cms

Monday, April 27, 2009

இலங்கையில் போர் நிறுத்தம்

தமிழக முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத்தத்தால், இந்திய அரசின் அழுத்தத்தால் இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்திறுக்கிறது. கலைஞரின் உண்ணாவிரதம் வெற்றி. வாழ்த்துகள்.


இப்பகூட போர் நிறுத்தப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு கலைஞ்ர் உண்ணாவிரம் இருந்தாருன்னு சொன்னாலும் சொல்வீங்க.
நன்றி : புதுகை அப்துல்லா.

Saturday, April 25, 2009

My Life.. My Politics - பிரியங்கா காந்தி



பிரியங்கா காந்தி NDTVக்கு அளித்த பேட்டி.

Monday, April 13, 2009

நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான் - திருமா

சிதம்பரம்: நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாது.

இடையில் காங்கிரசுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அரசியல் களத்தை தொடங்கிய நான் அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யவில்லை. நான் நன்றி மறந்தவன் இல்லை.

அங்கு வழியில் சென்ற போராட்டக்காரர்களுக்கும், தோழர்களுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பில் முடிவுற்றது. அது திட்டமிட்ட செயல் அல்ல. சில தீய நிகழ்வுகள் தூக்கிப் பிடிக்கப்பட்டன. ஊடகங்கள் அதை பெரிதாக்கிவிட்டன.

நான் பழிவாங்கும் நோக்கம் உடையவன் அல்ல. இதுகுறித்து நாங்கள் தவறு செய்யவில்லை என சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சனம், தங்கபாலு, வாசன், சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவேன்...

தற்போது இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கட்சியான திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். மிகப்பெரிய கூட்டணியில் போட்டியிடுவது இதுதான் முதன்முறை.

அதிமுக அணியில் நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் நான். உங்களுடன் தான் இருப்பேன் என கருணாநிதியிடம் கூறினேன். ஈழத்தமிழர் பிரச்னைக்காக யார் போராடினாலும் அவர்களுடன் நிற்பேன். அது வேறு. அரசியல் வேறு.

திருமாவளவன் திசை மாறிப் போய்விடுவான் என எதிர்பார்த்தார்கள். திமுக அணி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம் என்றேன். ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

எங்களுக்கு தேர்தல் அனுபவம் கிடையாது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் களப்பணியாற்ற வேண்டும் என்றார் திருமாவளவன்.


நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

Sunday, April 12, 2009

கலகக்காரர்களை வெளியேற்றுங்கள்

தேர்தல் வந்துவிட்டாலே கட்சியில் கலகக்காரர்கள் முளைத்துவிடுகிறார்கள். உட்கட்சித் தேர்தலாகட்டும் உள்ளாட்சி, சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தலாகட்டும். கட்சிக்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போடாதவர்களெல்லாம் டில்லிக்கு பைபாஸ் ரூட்டில் சென்றுவிடுகிறார்கள். பதவிக் கேட்கும் முன் கட்சிக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் தாங்கள் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. பொதுக்கூட்டம், போராட்டம் என்று எதுவும் செய்து கட்சியை வளர்க்க முன்வருவதில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட மட்டும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லை எனில் கலகம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இவர்களை எலலாம் கட்சியை விட்டே நீக்க வேண்டும்.

இந்தத் தேர்தலிலும் சிலர் அந்த வேலைகளை செய்வதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லாம் கட்சிக்காக இதுவரை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். கட்சியின் ”மேலிடத்தில் மட்டும்” தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு வார்டு மெம்பர் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சீட் வாங்கிடுவாங்க. குறிப்பிட்ட சிலருக்கே எல்லா தேர்தல்களிலும் வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தால் கட்சிக்காக பாடுபடும் மற்றவர்கள் எப்படி மேலும் கட்சி வளர்க்க பாடுபடுவார்கள்.

  • மாவட்டத் தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது. அல்லது அவர்கள் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் வாய்ப்பு கேட்க வேண்டும். அப்போது தான் மக்கள் செல்வாக்கு பெற்ற மற்றொருவருக்கும் பொறுப்பு கிடைக்கும்.
  • ஏற்கனவே ஏதேனும் ஒரு தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருப்பவருக்கு அந்த பதவிக் காலம் முடியும் வரை வேறுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • உள்ளாட்சி அமைபுகளிலோ, சட்ட மன்றத்திலோ தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • தற்போது உள்ளாட்சி அமைப்புகளிலோ சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இருப்பவர்களின் தொகுதியில் அவர்களுக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு அடுத்த வாய்ப்பை வழங்க வேண்டும்.
  • அதில் தேறாதவர்களுக்கு அடுத்து வாய்ப்புகள் வழங்கக் கூடாது.
  • ஒரு முறை தோற்பவருக்கு குறைந்த பட்சம் அடுத்த ஒரு தேர்தலிலாவது போடியிட அனுமதிக்கக் கூடாது. வாக்கு வித்தியாசம் 25 சதவீதத்திற்குள் இருந்தால் மட்டும் அடுத்த தேர்தலில் வாய்ப்பளிக்கலாம்.
  • இப்போது தமிழகத்தில் இருக்கும் நம் கட்சியின் 10 எம்பிக்கள் 35 எம்எல்ஏக்கள் பெயர் எத்தனை கட்சித் தொண்டனுக்கு முழுதாகத் தெரியும்?. 10 சதவீதம் தொண்டனுக்குக் கூடத் தெரியாது. காரணம், கட்சியின் செயல்பாடு அந்த அளவுக்குத் தான் இருக்கிறது. நேற்று முளைத்த கட்சிகள் கூட பொதுக் கூட்டம், மாநாடு, பேரணிகள் என்று எப்போதும் தொண்டர்களை உற்சாமகாக வைத்திருக்கின்றன.
  • நூற்றாண்டு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு, இருக்கும் தொண்டர்களை எல்லாம் திராவிடக் கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.
  • உடனடித் தேவை உட்கட்சித் தேர்தல். தொண்டர்களிடம் செல்வாக்கு இருப்பவர்களே கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும்.
  • இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும். மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் பணி சிறப்பாகவே இருக்கின்றன. அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
  • தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம் அந்த தொகுதியில் கட்சியில் மாணவர், இளைஞர் அணி, சேவாதளம் நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார , மாவட்ட நிர்வாகிகளின் பெயர்களைக் கேட்க வேண்டும். அவர்களை எல்லாம் எப்போதாவது சந்தித்திருக்கிறார்களா என்பதை எல்லாம் ஆராய வேண்டும். அதன் பின்பே அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
இந்த பாராளுமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கவே கூடாது. தற்போது எம்பியாக இருப்பவர்களிலும் தொகுதியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். இவைகள் எல்லாம் விரைவில் ராகுல்காந்திக்கு அனுப்பி வைக்கப் படும்.

Tuesday, March 31, 2009

பாவம் அத்வாணியா? இந்தியாவா?

NDTVயின் walk the Talk நிகழ்ச்சியில் சேகர் குப்தாவுடன் அத்வாணி பேசியது.
கடைசி 2 கேள்வி - பதில்கள் தான் முக்கியமானது.

Advani defends Kandahar case handling
Shekhar Gupta (Walk The Talk)
Saturday, March 22, 2008, (New Delhi)

Nine years after the Kandahar hijack drama, BJP leader LK Advani has said that he had no idea that the then Foreign Minister Jaswant Singh was accompanying the terrorists on the flight to Kandahar.

The NDA government had to release militants in exchange of the Indians held hostage on board the IC 814 airline.

Advani spoke to Editor-in-Chief of The Indian Express Shekhar Gupta on NDTV's Walk The Talk programme.

Advani said the decision was taken in consultation with Vajpayee.

Shekhar Gupta: But going on plane was his (Jaswant Singh) own decision?
Advani: I wouldn't say it I would know that. He must have consulted Vajpayeeji, but it was not an issue at all and this issue was also raised by many others many months later.

Shekhar Gupta: But in this country, would an External Affairs Minister himself escort militants?
Advani: He is not escorting, he is trying to bring back the passengers. But I don't think that I am answerable for that, if the security committee on security had taken a decision.

Shekhar Gupta: You were not consulted on this?
Advani: I don't know about it.

Shekhar Gupta: So when did you get to know he went on the plane?
Advani: I came to know when he was going.

உள்துறை அமைச்சராக இருந்த அத்வாணிக்கு தெரியாமல் ஜஸ்வந்த் சிங் 3 தீவிரவாதிகளையும் கந்தகாருக்கு அழைத்து சென்றாராம். தீவிரவாதிகளுடன் ஜஸ்வண்ட்சிங் போகும் போது தான் அத்வாணிக்கு தெரியுமாம். வாஜ்பாய் அவர்களை கேட்டு அழைத்து சென்றிருப்பார் என்கிறார் அத்வாணி. ஒரு முக்கியமான விஷயத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரை நெ2 அமைச்சரை கலந்தாலோசிக்காமல் அமைச்சரவை செயல்பட்டிருக்கிறது. நாளை அத்வாணி பிரதமரானால் இந்தியா இவர் கட்டுபாட்டில் இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

இந்த லட்சணத்தில் இவர் மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் எங்கிறார். அந்த பலவீனமான பிரதமர் தான் பல தடைகளைத் தாண்டி அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வெங்கய்யா நாயுடு, அத்வாணி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, சுஸ்மா சுவராஜ், ஜெஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஷி என பல அதிகார மையங்கள் செயல்படும்.

பிஜேபியில் அருண் ஜேட்லிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் ஏற்பட்ட பூசலையே தடுத்து நிறுத்த முடியாமல் அப்பாவியாய் இருந்த அத்வாணி எபப்டி இந்த நாட்டின் பிரச்சனைகளை தைரியமாக தீர்ப்பார். ஆட்சியின் குறைபாடுகளை திசை திருப்ப தினம் ஒரு மதக் கலவரத்திற்கு தான் ஏற்பாடு செய்வார்.


http://ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080044709&ch=3/22/2008%209:22:00%20PM

Monday, March 30, 2009

யாரிந்த வைகோ @ வைகோயபல்ஸ்

யாரிந்த வைகோ? எவ்வளவு நல்லவர்? எந்த அளவு உண்மையானவர்? எந்த அளவு மற்ற அரசியல்வாதிகளை விட மேன்மையானவர்? பார்த்துவிடுவோம்.

இப்போது ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் மீது பொய்க் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறாரே , இவர் 2007 வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் அங்கம் வகித்தார். அப்போது ஈழப் பிரச்சனை இல்லையா? இவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஈழத்தமிழருக்கு செய்தது என்ன? துரோகத்தைத் தவிர. அப்போது இவர் கட்சிக்கு 4 எம்பிக்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பேபினட் மந்திரி பதவியும் இன்னொருவருக்கு இணை மந்திரிப் பதவியும் கொடுக்க காங்கிரஸ் தயாராய் இருந்தது. ஆனால் இவர் என்ன செய்தார்?. அமைச்சரவையில் இடம் வேண்டாம். வெளியிலிருந்தே ஆதரவு தருகிறோம் என்று சொன்னார்.

ஏன்?

தனக்கு கிடைக்காத அந்த அமைச்சர் பதவிகள் தன் கட்சியின் இரண்டாம் மட்டத் தலவர்களுக்குக் கிடைத்தால் தேசிய அளவில் அவர்கள் செல்வாக்குத் தன்னைவிட உயர்ந்துவிடும் என்ற பொறாமையும் வயித்தெரிச்சலும் தான். இந்த சரிவாதிகார மனப்பான்மை தான் செஞ்சி ராமச்சந்திரன், கணேசனில் ஆரம்பித்து இப்போது கண்ணப்பன் , கம்பம் ராமகிருஷ்ணன் என்று தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நட்களில் அவர் மட்டுமே கட்சியில் இருப்பார். இது இவர் கட்சிக்கு?! ஏற்பட்ட இழப்பு. இதை விடுவோம்.

ஆனால் ஈழத் தமிழருக்காக தான் மட்டுமே போராடுவதாக ஊரை ஏமாற்றுகிறாரே. அந்த ஈழ மக்களுக்கு இவர் செயலால் என்ன இழப்பு என்று பார்ப்போம்.

அன்று காங்கிரஸ் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும். அப்போது வெளியுறவு அல்லது பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றை கேட்டிருக்கலாம். குறைந்த பட்சம் இவைகளின் இணை அமைச்சர் பதவியாவது கிடைத்திருக்கும். அல்லது வேறு துறையின் அமைச்சர் பதவிகள் கிடைத்திருந்தாலும் அதை வைத்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக்களில் இடம் கிடைத்திருக்கும். அதை வைத்து அமைச்சரவைக் கூட்டங்களின் போதெல்லாம் ஈழப் பிரச்சனையை அந்த மக்கள் சிங்கள இன வெறி அரசால் படும் துயரங்களை எழுப்பி இருக்கலாம். அமைச்சரவையின் மற்ற சகாக்களுக்கும் புரியவைத்து இது விடுதலைப் புலிகள் பிரச்சனை மட்டுமில்லை அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களும் அடங்கி இருக்கு என புரிய வைத்திருக்கலாம். இவர்கள் தானே ஈழ மக்களின் ஒரே பாதுகாவலன் என்பது போல் நடிக்கிறார்கள் . அதனால் இவர்களை சொல்கிறேன்.

இந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் வேண்டுமென்றே விட்டுவிட்டு இப்போது காங்கிரஸ் அரசாங்கத்தை குறை சொல்லிக் கொண்டிருக்கிரார்.

இவர் கட்சி எம்பிக்களையும் காட்டி திமுக அமைச்சர் பதவிகள் பெற்றுக் கொண்டது என சொல்லி அகில இந்தியாவையும் சிரிப்பு மூட்டினார். :)) . இவர் கட்சி எம்பிக்கள் என்ன பெட்டியில் அடைத்து வைத்த ஆப்பிளா? லேபிள் மாத்தி ஒட்டிக் கொள்ள? :)

சரி , இவர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தாரே .. அதற்கு காரணம் என்ன? ஈழத் தமிழரை அழிக்க காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுக்கிறது என்று பொய்க் குற்றசாட்டு சுமத்தியா? இல்லவே இல்லை. கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் இறுதியாகக் கேட்ட 23 தொகுதிகளை( முதலில் 25 கேட்டார்) தரமுடியாது என்று சொல்லி திமுக அவருக்கு 22 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இதனால் காலையில் திமுகவுடன் பேரம் பேசிவிட்டு அந்த ஒரு சீட்டுக்காக அன்று மாலையே அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆகவே அவர் அப்போதும் காங்கிரஸ் மீது எந்த பொய்க் குற்றச்சாட்டும் சுமத்தவில்லை. அவர் பிரச்சனை வெறும் ஒரு தொகுதி தான். அவ்வளவு பெரிய கொள்கை திலகம் இந்த வைகோ.

இது வரை தாவல் ஸ்பெஷலிஸ்டான பாமக கூட காலையில் பேரம் பேசிவிட்டு படியாமல் மாலையில் எதிர் முகாம் போனதில்லை. முன் கூட்டியே அதற்கான வேலைகளை எல்லாம் செய்துவிட்டு தான் எதிர் முகாம் போவார் மருத்துவர் ஐயா. ஆனால் இந்த கொளகைப் புயல் வைகோ ஒரு சீட்டுக்காம 10 மணி நேரத்தில் கூட்டணி மாறியவர். அப்போதெல்லாம் அவர் ஈழ மக்களைப் பற்றி யோசித்ததே இல்லை.

பிறகு தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தான் கடந்த ஓராண்டாக தான் மத்திய அரசின் மீது குறைகள் எதுவும் இல்லாததால் காங்கிரஸ் மீது பொய்க் குற்றசாட்டு சுமத்திக் கொண்டிருக்கிறார். அதென்ன பொய்க் குற்றசாட்டு?

பின்னே? கொடுக்காத ஆயுதத்தை இலங்கைக்கு கொடுபப்தாக சொல்வது பொய் தானே. ப்ரணாப் முகர்ஜி, அந்தோணி மற்றும் சிதம்பரம் என சொல்ல வேண்டிய அனைவரும் சொல்லிவிட்டார்கள், இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் வழங்கவில்லை என்று. அப்போதும் நம்பாமல் குற்றம் சுமத்துவது பொய் தானே. சமீபத்தில் கடர்படைத் தளபதியும் சொல்லி இருக்கிறார் ஆயுத உதவி எதுவும் செய்யவில்லை என்று. அப்படி செய்தால் யாருக்கு பயந்து மறைக்க வேண்டும். இதில் இந்திய ராணுவத்தினர் இலங்கைப் போரில் பங்கேற்பதாக தகவல்கள் என்று தினமும் பித்தலாட்ட பதிவுகள் வேறு. இதுவரை யாரும் அதற்கு ஆதாரம் தரவில்லை. உண்மை இருந்தால் தானே. யாரிடமோ எதையோ வாங்கிக் கொண்டு இப்படி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் இணையத்தில்.

கீழே இருக்கும் படத்தை பெரிது பண்ணி பார்க்கவும்..( தி சண்டே இண்டியன் இந்த வார இதழ்)
இலங்கை ராணுவம் பயன்படுத்துவது சீனாவின் டி56 ரக துப்பாக்கிகள் தான். இந்தியா தன் ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவில்லை என்பது இதில் தெரிகிறது.

புலிகளின் தாக்குதலில் இந்திய ராடார் தொழில்நுட்ப இஞ்சினியர்கள் காயம் பட்டார்களே என்கிறார் வைகோ. ”ராடார்” என்பது ஆயுதம் இல்லை என்பதை யாராவது அவருக்கு புரியவைத்தால் நல்லது. அது ஒரு கண்காணிப்புக் கருவி. விடுதலை புலிகள் விமானத்தாக்குதலுக்கு வாய்ப்புகள் இருப்பதால் இலங்கைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதை வைத்து தமிழர்களை ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் சொல்லப் போனால் அது தற்காப்பிற்கே.

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தின் மீது என்ன கரிசனம்? எதற்கு ராடார் தர வேண்டும்? என்று கேட்கலாம்.

எல்லாம் சுயநலம் தான். இதைக் கொடுத்தால் ராடாரை வைத்து தமிழ்மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது ஒரு காரணம். இன்னொன்று இந்தியப் பாதுகாப்பு தொடர்புடையது. நாம் கொடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அல்லது சீனா கொடுத்திருக்கும். டயலாகை மாத்துடா டேய்ன்னு சொல்றது புரியுது. ஆனால் இது வெறும் டயலாக் இல்லை. பாகிஸ்தானோ சீனாவோ ராடார் வழங்கி இருந்தால் அதை பயன்படுத்தவும் பயிற்சிக் கொடுக்கவும் கூடவே ஆட்களை அனுப்பி இருப்பார்கள். அதை வைத்து இந்தியாவைக் கண்காணித்திருப்பார்கள். மும்பை தாஜ் மற்றும் ட்ரைடண்டில் நடந்த தாக்குதல் சென்னையின் கன்னிமாராவிலோ, லீ மெரிடியனிலோ நடந்திருக்கும். ஆகவே ராடார்கள்க் கொடுத்ததால் ஈழத் தமிழருக்கும் பாதிப்பில்லை. இந்தியாவுக்கும் புதிய பகுதியிலிருந்து ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.

மேலும், சண்டைன்னா சட்டை கிழியத் தான் செய்யும். சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குன்னு வடிவேலு காமெடி பண்ண மாதிரி , போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள். இது எல்லா இடத்திலும் இருப்பது தான் என்று ஈழத் தமிழரின் படுகொலைகளை காங்கிரஸ் கொச்சைப் படுத்தவில்லை. அப்படி சொன்ன புரட்சித்தலைவியுடன் தான் ஈழ மக்களின் தோழனாக நடிக்கும் வைகோ ஓட்டுககாக கூட்டு வைத்திருக்கிறார்.

இவர் தான் வைகோ என்று நியூமராலஜி பார்த்து பெயர் வைத்துக் கொண்ட பகுத்தறிவுவாதி வையாபுரி கோபால்சாமி. 2 எம்பிக்களும் 2 எம்எல்ஏக்களும் இவரை விட்டுப் போனதும் இன்றி தன் உரிமையான திருமங்கலைத்தையும் அம்மாவிடம் இழந்து கூனி குறுகி நின்ற தன்மானச் சிங்கம் வைகோ அவர்கள்.

இவர் போன்ற வேஷதாரிகளை மக்கள் நிச்சயம் அடையாளம் கொள்வர். காங்கிரஸ் + திமுக கூட்டணி ஈழத் தமிழருக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும் புரிந்துக் கொள்வர். அப்படி எதிரானவர்களாக இருந்தால் திருமாவளவன் சேர்ந்திருக்க மாட்டாரே.

படம் நன்றி : தி சண்டே இண்டியன் மின்னிதழ்.

Friday, March 27, 2009

ராமதாஸ் காமெடி


ராமதாஸ் நேத்து ஒரு ட்ராமா நடத்தினது எல்லாருக்குமே தெரியும். அதெப்டிங்க மருத்துவரே... நீங்க பொதுக் குழுவை கூட்டுவிங்க. அதுல அதிமுகவா, திமுகாவா என்று கேட்டு ஒரு அட்டையை எல்லார்கிட்டயும் குடுப்பிங்க. அவங்க எந்தக் கூட்டணின்னு சொல்வாங்க. அப்பால அந்தக் கூட்டணியில நீங்க சேருவிங்க. உங்களுக்கே இதெல்லாம் சிரிப்பு வரலை? :))

சரி.. எல்லாரும் அதிமுகன்னு சொல்லிட்டாங்க. இப்போ அதிமுக உங்களை சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னா என்னா செய்விங்க? :))
(ஒரு பத்திரிக்கையாளர் கூட இதைக் கேட்கலை.. யாரும் சீரியசா எடுத்துக்கலையோ? :)) )

போறதுன்னா வழக்கம் போல வேட்டியை இறக்கிவிட்டு துண்டை இடுப்புல கட்டிகிட்டு தலையைக் குனிஞ்சி கை கூப்பிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே. அதான் இரண்டு பக்கமும் ஆள்விட்டுப் பேசி எங்க வெயிட்டா கெடைக்கிதோ அங்க சேருவதுன்னு முடிவு பண்ணியாச்சி இல்ல.

அதென்னா மருத்துவரே பூவாத் தலையா போடற மாதிரி ஒரு வாக்கெடுப்பு? . உங்களுக்குன்னு கொள்கை தான் ஒன்னும் இல்லை. இப்போதைய சூழல்ல யாரோட செயல்பாடு நல்லா இருக்குன்னு பார்த்து போறதா சொல்லி இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும். அதை விட்டு பள்ளிக் கூட பசங்களை மாதிரி சரியான விடையை தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிங்க. நல்லா இருங்கய்யா..

அன்புச்சகோதரி கிட்ட ஏற்கனவே பேசி ஒப்பந்தம் எல்லாம் போட்டாச்சி இல்ல. அதை நேரடியாக அமல்படுத்த வேண்டியது தானே. எதுக்கு பொதுக் குழு ட்ராமா?. ஒருவேளை உங்க கட்சிக்காரங்க திமுக கூட்டணிதான்னு சொல்லி இருந்தா என்ன செஞ்சிருபிங்க? அவங்க தான் ஒரு மாவட்ட செயலாளர் அல்லது மந்திரிக் கூட உங்க கிட்ட வந்து பேசலையே.

ஆனா ஒன்னு மருத்துவரே.. இந்த தேர்தல் முடியறதுக்குள்ள நீங்க அனுபவிக்கப் போறதை எல்லாம் நினைச்சா உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுங்க.. :(

அதிக அளவில் பல்டி அடிச்சது நீங்க தான்னு தினமலர்ல நியூஸ் போட்டிருக்காங்க. அவிங்க கெடக்கறாய்ங்க. குடும்பத்துல இருந்து யார்னா அரசியலுக்கு வந்தா முச்சந்தியில வச்சி சவுக்கால அடிக்க சொன்ன கொள்கை வீரர் நீங்க. இதுக்கெல்லாம் கவலைப் படாதிங்க.

சரி சரி.. போனோமா.. 6 சீட்டு வாங்கினோமா 2 எடம் ஜெயிச்சோமான்னு சட்டு புட்டுன்னு கிளம்பி வாங்க. அங்கயே ரொம்ப நாள் இருந்துடாதிங்க. அன்புமணிக்கு மந்திரிப் பதவி தொடரனும்ல.

தேர்தல் முடிந்த கையோடு உங்கள் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்கும்
ஒரு காங்கிரஸ் தொண்டன்.

Thursday, March 26, 2009

திருமாவளவன் பேட்டி



'' திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொடரும்'' என்று முதல்வர் அறிவித்த பிறகும் காங்கிரஸ் தரப்பிலிருந்து உங்களுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதே ?


'' நான் தனிப்பட்ட முறையில் எந்த காங்கிரஸ் தலைவரையும் விமர்சிக்கவில்லையே ? ''பதிபக்தி இல்லாதவர்'' என்று சோனியாவின் நடத்தையை விமர்சித்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க தங்கபாலு, ஞான சேகரன் போன்றவர்கள் துடிதுடிக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் இதற்கு முன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், அதில் பல முரண்பாடுகளையும் கண்டுள்ளது. அந்தக் கட்சிகளை விட நான் எதுவும் பெரிதாகப் பேசி விடவில்லையே ?''


'' கருணாநிதி, முன்பு விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் நாம் ராஜீவ் காந்தியை இழந்தோம். இப்போது விடுதலை சிறுத்தைகளை ஆதரிப்பது சோனியாவுக்கு ஆபத்தாக முடியும்.'' என்று ஞான சேகரன் கூறியிருப்பது பற்றி ?


'' இதற்கு கலைஞர்தான் பதில் சொல்ல வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து திருமாவை வெளியேற்ற வேண்டும் என்பது காங்கிரஸின் இலக்கு அல்ல. திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு. அப்படித்தான் நான் கருதுகிறேன்.''


'' அம்பேத்கரின் கொள்கைப்படி காங்கிரஸ் கட்சியை அழிப்பதுதான் விடுதலைச்சிறுத்தைகளின் லட்சியம் '' என்று முன்பு கூறியிருந்தீர்கள். அந்த நிலைப்பாட்டில் இப்போது ஏதாவது மாற்றம் உள்ளதா ?


'' ஒரு தேர்தலுக்காக அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற முடியாது. அம்பேத்கரின் பார்வையில் அன்றைய காங்கிரஸ் கட்சி எப்படி இருந்தது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தேன். அதே நேரத்தில் இதைத் தேர்தலோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.''


வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்னைதான் முக்கியப் பிரச்னை. இதில் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி ஏற்கனவே காட்டமாக விமர்சித்த நீங்கள்,மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரம் செய்வீர்கள் ?


'' ஈழத்தமிழர்களுக்காக திமுக அரசு எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளது. அதில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ ராஜபக்ஷேவின் குரலாகவே ஈழப்பிரச்னையில் எதிரொலித்தார். ''புலிகள் ஆயுதங்களைப் போட்டு விட்டு சரணடைய வேண்டும் '' என்றும் '' போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் '' என்றும் பேசினார்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறாது என்று தெரிந்ததும் ஈழப்பிரச்னைக்காக ஜெயலலிதா தேவையில்லாமல் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அது அப்பட்டமான நாடகம் என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, ஈழப்பிரச்னை தொடர்பாக மாநில அரசு எடுத்த முயற்சிகளைச் சொல்லி நான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வேன்.''


மத்திய அரசின் சாதனை எதையாவது சொல்லித்தானே தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும் ?


'' இங்கே மத்தியில் ஆட்சியமைக்கும் தகுதியை காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே இழந்து விட்டன. மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை மாநிலக் கட்சிகள் தான் முடிவு செய்கின்றன. ஆகவே, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் போதும், மத்திய அரசின் சாதனைகளைச் சொல்லத் தேவையில்லை.


திமுக கூட்டணியில் நீங்கள் நீடிக்க விரும்புகிறீர்கள். காங்கிரஸோ உங்களை வெளியேற்ற கங்கணம் கட்டிச் செயல்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து இதற்காக சமரச முயற்சி மேற்கொள்வீர்களா ?


'' எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் அவர்களை நான் சந்திக்க மாட்டேன். இங்குள்ள காங்கிரஸ் கட்சியினரும் தமிழர்கள்தான். அவர்கள் ஒன்றும் மார்வாடிகளோ, குஜராத்திகளோ கிடையாது.''


”கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் பாமகவுக்கு சீட் பங்கீட்டில் உங்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ததால், ''எச்சில் இலைச் சோறு வேண்டாம்'' என்று ரோஷத்துடன் திமுக கூட்டணியில் இருந்து விலகினீர்கள். இப்போது நீங்கள் நீடிக்கக் கூடாது என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கும் நிலையில் உங்கள் ரோஷம் எங்கே போனது ?


'' தமிழகத்தில் நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அல்ல''


உங்களது இந்தப் பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தீர்வு காண முயல்வீர்களா ?


'' எங்கள் கொள்கையோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒத்துப் போகிறது'' என்று முதல்வர் அறிவித்த பிறகுதான் நான் அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன். நாங்கள் கூட்டணியில் நீடிப்பதாக அவரே அறிவித்து விட்டார். எனவே, என்னை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கேள்விக்கும் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்''.


உங்கள் பிரச்னை இப்படியே நீடித்தால் நீங்கள் அணி மாற வாய்ப்பு உண்டா ?


'' நாங்கள் இன்னும் தொகுதிப் பங்கீடு பற்றிகூட பேசவில்லை.''


நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

படங்கள் : இணையத்தில் இருந்து

Wednesday, March 25, 2009

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை- பொதுத் தேர்தல் 2009


தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

மதச்சார்பின்மை, தேசியவாதம், சமூகநீதி மற்றும் அனைவருக்கும் குறிப்பாக சாமான்ய மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சி என்பதே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தாரக மந்திரமாக உள்ளது.

இந்திய தேசிய கட்சி மட்டுமே அனுபவசாலிகள் மற்றும் இளைஞர்கள், சாதனை மற்றும் லட்சியத்தைக் கொண்டவர்களுக்காக செயலாற்றுகிறது.

ஒற்றுமையான இந்தியாவால் மட்டுமே பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட முடியும்.

இந்தியாவின் பாதுகாப்பும், ஒருமைப்பாடும் மிக முக்கியமானதாகும். இந்தியா உட்பட பல நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு மத மற்றும் அரசியல் எல்லைகள் கிடையாது. அப்பாவி மக்களுக்கு எதிராக மிகக் கொடிய முறையில் வன்முறையை ஏவி விடுவதே பயங்கரவாத சக்திகளின் நோக்கமாகும்.

எனவே பயங்கரவாதத்தை தீவிரமாகவும், அறிவுப்பர்வமாகவும், அச்சம் ஏதுமின்றியும் முறியடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது.

பயங்கரவாதத்தை ஒற்றுமையுடன் இருக்கும் மக்களால் மட்டுமே முறியடிக்க முடியும். மதத்தால் பிரிந்துள்ள மக்களால் முடியடிக்க முடியாது. இந்த கொடூரத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முறியடித்து, சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.

நம் நாட்டு எல்லைக்கு அப்பால் இருந்து ஏவப்படும் பயங்கரவாதத்தை ஒற்றுமையுடன் செயல்பட்டு முறியடித்தல் அவசியம்.

தவிர இந்தியாவிற்கு அறிவுப்பூர்வமான வெளியுறவுக் கொள்கை அவசியம். நமது பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையால், ஒற்றுமையுடன் பலமும் கிடைக்க வேண்டும். பொதுவான நோக்கத்துடன் நம்பிக்கையும் உருவாக வேண்டும்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலிமையான ராஜ்யரீதியிலான பிரசாரத்தை முன்வைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் முதல்முறையாக மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்ததை ஒப்புக் கொண்டது. இது நமது வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

உலக அளவில் பொருளாதார தேக்கநிலை நீடித்த போதிலும், இந்தியாவில் அதன் பாதிப்புகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியடையும் 2ஆவது நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

இதன்மூலம் நாடு நடுநிலையான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது.

பொதுத்துறை மற்றும் தனியார் துறையினருக்கு இடையேயும், கூட்டுறவு மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு இடையேயும் நடுநிலையான பங்கு உள்ளது.

நவீன பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய தொழில்களுக்கு இடையே புதிய உத்வேகம் பிறந்துள்ளது.

அமைப்புரீதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் நடுநிலையான போக்கு.

கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நடுநிலையைக் கடைபிடித்தல்.

கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சாதனைகளில் சாமான்ய மற்றும் ஏழை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடரும்.

நலிவடைந்த பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கல்வி, பொருளாதார வளர்ச்சியை நோக்கிய வேலைவாய்ப்புகள்.

லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றுள்ள தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

பாரத் நிர்மாண் திட்டம் : கிராமப்புறங்களில் வேளாண் சாகுபடி பரப்புகளைப் பராமரித்தல், சாலை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.

விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்தல்.

சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவி அளித்தல்.

சர்வ சிக்சா அபியான் எனப்படும் அனைவருக்கு கல்வித் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் திறம்பட செயல்படுத்துதல்.

கடந்த 5 ஆண்டுகால பொருளாதார சாதனைகள் தொடர வழிவகை செய்தல்.

ஜவஹர்லால் நேரு தேசிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம்.

அனைத்து மாநிலங்களுக்கும் போதிய நிதி ஆதாரம் அளித்தல்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி என்ன உறுதி அளித்ததோ, அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் வேகமான அதிக வளர்ச்சியை நோக்கி பயணிக்க காங்கிரஸ் உறுதி.

கடந்த 2008-09 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு அளித்தல்.

உயரிய பாதுகாப்புத் துறையை உருவாக்குவதுடன், பாதுகாப்புப் படையினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் போதிய நல உதவிகளுக்கு நடவடிக்கை.

காவல்துறை சீர்திருத்தத்தை விரைவுபடுத்துதல்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும்.

அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளிக்கப்படும்.

சிறப்புப் பிரிவின் கீழ் வருவோருக்கு ஒருங்கிணைந்த சமூகப்பாதுகாப்பு அளிக்கப்படும்.

அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தரமான கல்வி அளித்தல்.

தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்படும்.

விவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மேம்பாட்டிற்கான திட்டங்கள் கொண்டுவரப்படும்.

கூட்டுறவு அமைப்புகளை ஜனநாயக அடிப்படையில் மாற்றியமைத்தல்.

சமுதாயத்தில் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும்.

நெசவாளர்கள், மீனவர்கள், மீனவப் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கொண்டுவரப்படும்.

தோல் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்களுக்கும் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

மதவாதத்தை அனைத்துப் பிரிவுகளிலும் எதிர்க்கவும், ஜாதியக் கொடுமைகளை உறுதியுடன் எதிர்க்கவும் காங்கிரஸ் உத்தரவாதம்.

குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளின் மேம்பாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி ஆதாரம் அளித்து வலுப்படுத்த உறுதி.

3 ஆண்டுகளுக்கும் அனைத்துக் கிராமங்களும் பிராட்பேண்ட் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படும்.

சிறு தொழில்முனைவோரில் இருந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

மிகக் குறைந்த பணவீக்கத்தை கடைபிடிப்பதுடன் அதிக வளர்ச்சி விகிதத்தை கடைபிடிக்க முடிவு.

இந்தியாவின் இயற்கைவள சுற்றுச்சூழலை பாதுகாத்த, அவற்றை புத்துணர்வு பெறச் செய்தல்.

அறிவியல் - தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் புத்துணர்வு அடையச் செய்தல்.

நீதிமன்றத்தில் வழக்குகள் தாமதமாவதைத் தடுக்க நீதித்துறை சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

சுயேச்சையான, உள்நாட்டிற்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கை தொடரும்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி எடுக்கும்.

எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர, நிலையான நீடித்த, ஒருமைப்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை ஆதரியுங்கள்

நன்றி : வெப்துனியா.