காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Tuesday, March 17, 2009

வருண்காந்தி - மோடி நெ.2 ?

பிராணிகள் ஆர்வலர் என்ற வகையில் மேனகா காந்தி மீதும் எப்போதுமே பெரிய மரியாதை உண்டு. என் அசைவ உணவு பழக்கத்தை விட்டதற்கு அவரும் ஒரு காரணம். அவர் காங்கிரசை எதிர்த்தாலும் கூட குறை சொல்லும் அளவுக்கு எந்த முறைகேடுகளோ தரம் தாழ்ந்த அரசியலோ செய்ததில்லை என்றே நினைக்கிறேன். பிஜேபியில் இருக்கும் சில மரியாதைக்குரியவ்ர்களில் ஒருவர். ஆனால் அவர் மகன் வருண்காந்திக்கு திடீர் என்று இந்துத்துவ அரசியல்வாதி ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போலும். மோடியைப் பார்த்து கெட்டுப் போய்விட்டார் போல.

சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

வருண் உதிர்த்த முத்துக்கள்..
அவர்கள் (முஸ்லிம்கள்) கரிமுல்லா, நசருல்லா என பயமுறுத்தும் பெயர்களை வைத்திருக்கிறார்கள். அவர்களை இரவில் பார்க்க பயமாக இருக்கிறது. எனக்கு ஒரு உறவுக்காரப் பெண் இருக்கிறார். அனைத்து வேட்பாளர்களும் இருந்த ஒரு ஆல்பத்தை பார்த்தாள். அவள் ஏழு வயதாக இருக்கும் போது சமாஜ்வாதி வேட்பாளர் படத்தைக் காட்டி அண்ணா , உங்கள் தொகுதியிலிருந்து பின்லேடன் போட்டியிட்டது எனக்கு தெரியாதுஎன்றாள்....

முஸ்லிம் வேட்பாளார்கள் பின்லேடன் போல் இருக்கிரார்களாம். இப்படி அந்தப் பெண் சொன்னாரா அல்லது இவரே கதை அளக்கிறாரா தெரியவில்லை.

இது ”கை” இல்லை.. இது தாமரையின் சக்தி. இது முஸ்லிம்களின் தலையை வெட்டும். ஜெய் ஸ்ரீராம். யாராவது இந்துக்களை நோக்கி விரல்களை உயர்த்தினாலோ அல்லது இந்துக்கள் பலவீனமானவர்கள் அல்லது தலைவர்கள் இல்லாதவர்கள் என்று யாராவது நினைத்தாலோ, இந்தத் தலைவர்கள் வோட்டுக்காக அவர்களின் கால்களை நக்குவதாக நினைத்தாலோ நான் கீதை மீது ஆணையாக சொல்கிறேன். அவர்கள் கைகளை வெட்டிவிடுவேன்.

என்ன ஒரு ஆதிக்க மனோபாவம்.. என்ன ஒரு திமிரான பேச்சு.. இது தான் பிரிவினையைத் தூண்டும் செயல். தேர்தல் வந்தாலே பிஜேபியினருக்கு சிறுபான்மை மக்களை மிரட்டுவதே தொழிலாகிவிட்டது. இவ்வளவு நாளாக பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். குஜராத்தில் நடபெற்ற மத அழிப்பு முயற்சிக்கு பிறகு வருண்காந்தி போன்றவர்கள் நேரடியாகவே மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

6 comments:

said...

its just exaggerated news. Sonia ghandhi still has envy on Menaka and varun.

Varun is not immatured to talk like this.

said...

இது கற்பனை கதையோ சோனியாகாந்தி வருண் பத்தி சொன்னதோ இல்லை குப்பன். அவர் பேசிய விடியோவுடன் அனைத்து மீடியாவிலும் வெளி வந்தது. இதற்கு பிஜேபி தலைவர்களும் கண்டணம் தெரிவித்திருக்கிறார்கள். தினமும் செய்திகளை படிங்க குப்பன். காழ்ப்புணர்சியில் பேச வேண்டாம். எதற்கெடுத்தாலும் சோனியாவை குறை சொல்வதே பொழப்பாப் போச்சி.

said...

தெரியலே தல.

வருண் காந்தி , ராகுல் காந்தி எல்லோரும் ஒரே ஜீன் தானே?

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

said...

//குப்பன்_யாஹூ said...
its just exaggerated news. Sonia ghandhi still has envy on Menaka and varun.

Varun is not immatured to talk like this//

குப்பன்,
இது உண்மை தான். அந்த ஆளு அப்படி தான் பேசியிருக்கான்.

said...

CLICK AND READ

"click"
காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?) 2 அதிர்ச்சி விடியோக்கள்.
"CLICK"

said...

இது தேர்தல் பயத்தில் பிதற்றும் ஒரு பயித்தியக் காரனின் உளறல்.பாப்புலர் பிரன்ட் போன்ற வலுவான கட்சிகள் இருக்கும் வரை இனி சிறுபான்மையினருக்கு எந்த ஒரு பிதற்றலைக் கண்டும் பயம் இல்லை.இது மாத்திரம் இல்லாமல் வருண் காந்தி போன்ற உலக அறிவு இல்லாத மடையர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டின் நிலைமை என்ன ஆகும் என்று இந்திய மக்கள் அறிந்து கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதை சிறுபான்மை மக்களாகிய நாங்கள் கருதுகிறோம்.தமிழில் ஒரு பழமொழி உண்டல்லவா ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லைனு அது போல எத்தனை நரபலி மோடிகள் வந்தாலும் வீணாய்ப் போன வருண் காந்திகள் வந்தாலும் இஸ்லாமும் அழிந்து விட அபோவது இல்லை, இஸ்லாமியர்களையும் அளித்து விடப் போவது இல்லை.உலகமெல்லாம் இருக்கும் எங்களுக்கு ஊர் கோடியில் இருக்கும் இவர்களா எதிரிகள்?.