காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Thursday, March 26, 2009

திருமாவளவன் பேட்டி



'' திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொடரும்'' என்று முதல்வர் அறிவித்த பிறகும் காங்கிரஸ் தரப்பிலிருந்து உங்களுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதே ?


'' நான் தனிப்பட்ட முறையில் எந்த காங்கிரஸ் தலைவரையும் விமர்சிக்கவில்லையே ? ''பதிபக்தி இல்லாதவர்'' என்று சோனியாவின் நடத்தையை விமர்சித்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க தங்கபாலு, ஞான சேகரன் போன்றவர்கள் துடிதுடிக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் இதற்கு முன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், அதில் பல முரண்பாடுகளையும் கண்டுள்ளது. அந்தக் கட்சிகளை விட நான் எதுவும் பெரிதாகப் பேசி விடவில்லையே ?''


'' கருணாநிதி, முன்பு விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் நாம் ராஜீவ் காந்தியை இழந்தோம். இப்போது விடுதலை சிறுத்தைகளை ஆதரிப்பது சோனியாவுக்கு ஆபத்தாக முடியும்.'' என்று ஞான சேகரன் கூறியிருப்பது பற்றி ?


'' இதற்கு கலைஞர்தான் பதில் சொல்ல வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து திருமாவை வெளியேற்ற வேண்டும் என்பது காங்கிரஸின் இலக்கு அல்ல. திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு. அப்படித்தான் நான் கருதுகிறேன்.''


'' அம்பேத்கரின் கொள்கைப்படி காங்கிரஸ் கட்சியை அழிப்பதுதான் விடுதலைச்சிறுத்தைகளின் லட்சியம் '' என்று முன்பு கூறியிருந்தீர்கள். அந்த நிலைப்பாட்டில் இப்போது ஏதாவது மாற்றம் உள்ளதா ?


'' ஒரு தேர்தலுக்காக அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற முடியாது. அம்பேத்கரின் பார்வையில் அன்றைய காங்கிரஸ் கட்சி எப்படி இருந்தது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தேன். அதே நேரத்தில் இதைத் தேர்தலோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.''


வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்னைதான் முக்கியப் பிரச்னை. இதில் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி ஏற்கனவே காட்டமாக விமர்சித்த நீங்கள்,மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரம் செய்வீர்கள் ?


'' ஈழத்தமிழர்களுக்காக திமுக அரசு எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளது. அதில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ ராஜபக்ஷேவின் குரலாகவே ஈழப்பிரச்னையில் எதிரொலித்தார். ''புலிகள் ஆயுதங்களைப் போட்டு விட்டு சரணடைய வேண்டும் '' என்றும் '' போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் '' என்றும் பேசினார்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறாது என்று தெரிந்ததும் ஈழப்பிரச்னைக்காக ஜெயலலிதா தேவையில்லாமல் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அது அப்பட்டமான நாடகம் என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, ஈழப்பிரச்னை தொடர்பாக மாநில அரசு எடுத்த முயற்சிகளைச் சொல்லி நான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வேன்.''


மத்திய அரசின் சாதனை எதையாவது சொல்லித்தானே தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும் ?


'' இங்கே மத்தியில் ஆட்சியமைக்கும் தகுதியை காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே இழந்து விட்டன. மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை மாநிலக் கட்சிகள் தான் முடிவு செய்கின்றன. ஆகவே, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் போதும், மத்திய அரசின் சாதனைகளைச் சொல்லத் தேவையில்லை.


திமுக கூட்டணியில் நீங்கள் நீடிக்க விரும்புகிறீர்கள். காங்கிரஸோ உங்களை வெளியேற்ற கங்கணம் கட்டிச் செயல்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து இதற்காக சமரச முயற்சி மேற்கொள்வீர்களா ?


'' எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் அவர்களை நான் சந்திக்க மாட்டேன். இங்குள்ள காங்கிரஸ் கட்சியினரும் தமிழர்கள்தான். அவர்கள் ஒன்றும் மார்வாடிகளோ, குஜராத்திகளோ கிடையாது.''


”கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் பாமகவுக்கு சீட் பங்கீட்டில் உங்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ததால், ''எச்சில் இலைச் சோறு வேண்டாம்'' என்று ரோஷத்துடன் திமுக கூட்டணியில் இருந்து விலகினீர்கள். இப்போது நீங்கள் நீடிக்கக் கூடாது என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கும் நிலையில் உங்கள் ரோஷம் எங்கே போனது ?


'' தமிழகத்தில் நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அல்ல''


உங்களது இந்தப் பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தீர்வு காண முயல்வீர்களா ?


'' எங்கள் கொள்கையோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒத்துப் போகிறது'' என்று முதல்வர் அறிவித்த பிறகுதான் நான் அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன். நாங்கள் கூட்டணியில் நீடிப்பதாக அவரே அறிவித்து விட்டார். எனவே, என்னை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கேள்விக்கும் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்''.


உங்கள் பிரச்னை இப்படியே நீடித்தால் நீங்கள் அணி மாற வாய்ப்பு உண்டா ?


'' நாங்கள் இன்னும் தொகுதிப் பங்கீடு பற்றிகூட பேசவில்லை.''


நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

படங்கள் : இணையத்தில் இருந்து

6 comments:

said...

நன்னா தேறிட்டார் போங்கோ...

said...

பரமசிவன் கழுத்திலிருந்த பம்பு கேட்டது...பாட்டுத்தான் நெனப்புல வருது...(பாம்புக்கு கால் இல்லியோன்னோ)

said...

சஞ்சய்! எனக்கு திருமா பேட்டியில் தப்பில்லன்னு தான் தோனுது!அழகான பதில்கள்! நீங்க இந்தஃ விஷயத்தை தொங்கபாலுவா தொங்க வேண்டாம். நமக்கு தேவை 40\40 தான் இப்போதைக்கு!

said...

நாற்காலிக்காரர்கள்!
நாசமாக போகட்டும்!

said...

\\
'' திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொடரும்'' என்று முதல்வர் அறிவித்த பிறகும் காங்கிரஸ் தரப்பிலிருந்து உங்களுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதே ?




'' நான் தனிப்பட்ட முறையில் எந்த காங்கிரஸ் தலைவரையும் விமர்சிக்கவில்லையே ? ''பதிபக்தி இல்லாதவர்'' என்று சோனியாவின் நடத்தையை விமர்சித்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க தங்கபாலு, ஞான சேகரன் போன்றவர்கள் துடிதுடிக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் இதற்கு முன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், அதில் பல முரண்பாடுகளையும் கண்டுள்ளது. அந்தக் கட்சிகளை விட நான் எதுவும் பெரிதாகப் பேசி விடவில்லையே ?''




'' கருணாநிதி, முன்பு விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் நாம் ராஜீவ் காந்தியை இழந்தோம். இப்போது விடுதலை சிறுத்தைகளை ஆதரிப்பது சோனியாவுக்கு ஆபத்தாக முடியும்.'' என்று ஞான சேகரன் கூறியிருப்பது பற்றி ?




'' இதற்கு கலைஞர்தான் பதில் சொல்ல வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து திருமாவை வெளியேற்ற வேண்டும் என்பது காங்கிரஸின் இலக்கு அல்ல. திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு. அப்படித்தான் நான் கருதுகிறேன்.''




'' அம்பேத்கரின் கொள்கைப்படி காங்கிரஸ் கட்சியை அழிப்பதுதான் விடுதலைச்சிறுத்தைகளின் லட்சியம் '' என்று முன்பு கூறியிருந்தீர்கள். அந்த நிலைப்பாட்டில் இப்போது ஏதாவது மாற்றம் உள்ளதா ?




'' ஒரு தேர்தலுக்காக அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற முடியாது. அம்பேத்கரின் பார்வையில் அன்றைய காங்கிரஸ் கட்சி எப்படி இருந்தது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தேன். அதே நேரத்தில் இதைத் தேர்தலோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.''




வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்னைதான் முக்கியப் பிரச்னை. இதில் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி ஏற்கனவே காட்டமாக விமர்சித்த நீங்கள்,மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரம் செய்வீர்கள் ?




'' ஈழத்தமிழர்களுக்காக திமுக அரசு எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளது. அதில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ ராஜபக்ஷேவின் குரலாகவே ஈழப்பிரச்னையில் எதிரொலித்தார். ''புலிகள் ஆயுதங்களைப் போட்டு விட்டு சரணடைய வேண்டும் '' என்றும் '' போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் '' என்றும் பேசினார்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறாது என்று தெரிந்ததும் ஈழப்பிரச்னைக்காக ஜெயலலிதா தேவையில்லாமல் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அது அப்பட்டமான நாடகம் என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, ஈழப்பிரச்னை தொடர்பாக மாநில அரசு எடுத்த முயற்சிகளைச் சொல்லி நான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வேன்.''




மத்திய அரசின் சாதனை எதையாவது சொல்லித்தானே தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும் ?




'' இங்கே மத்தியில் ஆட்சியமைக்கும் தகுதியை காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே இழந்து விட்டன. மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை மாநிலக் கட்சிகள் தான் முடிவு செய்கின்றன. ஆகவே, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் போதும், மத்திய அரசின் சாதனைகளைச் சொல்லத் தேவையில்லை.




திமுக கூட்டணியில் நீங்கள் நீடிக்க விரும்புகிறீர்கள். காங்கிரஸோ உங்களை வெளியேற்ற கங்கணம் கட்டிச் செயல்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து இதற்காக சமரச முயற்சி மேற்கொள்வீர்களா ?




'' எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் அவர்களை நான் சந்திக்க மாட்டேன். இங்குள்ள காங்கிரஸ் கட்சியினரும் தமிழர்கள்தான். அவர்கள் ஒன்றும் மார்வாடிகளோ, குஜராத்திகளோ கிடையாது.''




”கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் பாமகவுக்கு சீட் பங்கீட்டில் உங்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ததால், ''எச்சில் இலைச் சோறு வேண்டாம்'' என்று ரோஷத்துடன் திமுக கூட்டணியில் இருந்து விலகினீர்கள். இப்போது நீங்கள் நீடிக்கக் கூடாது என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கும் நிலையில் உங்கள் ரோஷம் எங்கே போனது ?




'' தமிழகத்தில் நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அல்ல''




உங்களது இந்தப் பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தீர்வு காண முயல்வீர்களா ?




'' எங்கள் கொள்கையோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒத்துப் போகிறது'' என்று முதல்வர் அறிவித்த பிறகுதான் நான் அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன். நாங்கள் கூட்டணியில் நீடிப்பதாக அவரே அறிவித்து விட்டார். எனவே, என்னை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கேள்விக்கும் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்''.




உங்கள் பிரச்னை இப்படியே நீடித்தால் நீங்கள் அணி மாற வாய்ப்பு உண்டா ?




'' நாங்கள் இன்னும் தொகுதிப் பங்கீடு பற்றிகூட பேசவில்லை.''

\\

kalakkal kelvi padhil thala

said...

படம் சூப்பர்.