காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Thursday, July 16, 2009

காமராஜர் பிறந்தநாள் விழா

தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.
படம் : தினமணி.

விருதுநகர்
காமராஜரைப் போல் எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என காமராஜர் பிறந்த நாள் விழாவில் மத்திய தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் பேசினார். விருதுநகரில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா நடந்தது.மாணவர் காங்கிரஸ் தலைவர் நவீன் தலைமை வகித்தார். மாணிக் தாகூர் எம்.பி., முன்னிலை வகித்தார். விருதுநகர் தொகுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் முன்று இடங்கள் பெற்றவர்களுக்கு மத்திய இணைஅமைச்சர் சிங் சான்றிதழும், கேடயமும் வழங்கிப்பேசுகையில்,"காமராஜரின் எளிமையும், நேர்மையும் நாடு முழுவதும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தமிழக முதல்வராக இருந்த போது மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டமும், கிராமப்புறங்களில் சிறியஅணைகள் கட்டுவதற்கும், தொழிற்சாலைகள் உருவாவதற்கும் அடிப்படை காரணமாக இருந்தார். மாணவர்கள் காந்திய கொள்கைகளை பின்பற்றி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும். காமராஜரைப் போல் மாணவர்கள் எளிமையாக வாழவேண்டும்' என்றார். அமைச்சரின் பேச்சை விருதுநகர் எம்.பி., மாணிக் தாகூர் தமிழில் மொழி பெயர்த்தார்.

நன்றி : தினமலர்.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று(15.07.2009) கொண்டாடப் பட்டது.

1 comments:

said...

நன்று நன்று இன்னும் நல்லதை உள்ளதை உண்மையாய் உறுதியாய் எழுதுங்கள் .உரக்கச் சொன்னால் ஒருநாள் அம்பலம் ஏறும்
-முதல்மனிதன்-