காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Saturday, August 14, 2010

சகோதரர் மகேந்திரனுக்கு வாழ்த்துகள்..

சமீபத்தில் நடைபெற்ற தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப் பட்ட அன்புச் சகோதரர் திரு. மகேந்திரன், தற்போது ராகுல் காந்தியால் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலராக தேர்வு செய்யப் பட்டுள்ளார். தேர்தலுக்கு பின்னர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அளிக்கப் பட்ட பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளராக மிகச் சிறப்பாக செயல்பட்டதால் ராகுல்காந்தியால் ஈர்க்கப் பட்டு தற்போது தேசிய செயலாளராக தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். அன்பு சகோதரருக்கு வாழ்த்துகள்..

Saturday, June 26, 2010

காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சனம் மறைவு


என் பெரியப்பாவின் நண்பர் , பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழக காங்கிரசின் மூத்தத் தலைவரும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான திரு. சுதர்சனம் அவர்கள் இன்று கோவையில் மரணம் அடைந்துவிட்டார்.. அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.. :(((

Saturday, June 19, 2010

Happy Birthday Mydear RahulGandhi

எங்கள் அன்புத்தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

Saturday, March 13, 2010

உலகின் சிறந்த அரசியல் தலைவராக இந்தியப் பிரதமர் தேர்வு

இந்தாண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவர் விருதுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள "அப்பீல் ஆப் கன்சைன்ஸ்' என்ற அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும், உலகின் சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இதற்கு முன், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், பிரான்சு அதிபர் சர்கோசி போன்றோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவராக, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பரில், இந்த விருது பிரதமருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, February 19, 2010

ராகுல் ரகசியங்கள்


ராகுல் ரகசியங்கள்
புது ரத்தம்... புது ரூட்!

''காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியிலும், உட்கட்சி ஜனநாயகம் இல்லை. உட்கட்சி தேர்தல் நடப்பதாகக் கூறிக் கொண்டாலும், மேலிடம் விரும்புகிறவர்தான் தலைவராகிறார்கள்! காங்கிரஸை மாற்றிய மைக்க, இளைஞர் காங்கிரஸ் தீவிரமாகச் செயலாற்றுகிறது...'' என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, நமக்குள் ஒரு ஆச்சர்யம்! இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளரும், வட கிழக்கு, கேரள மாநில பொறுப்பாளருமான எஸ்.ஜோதிமணியிடம் பேசினோம்.

''பஞ்சாப், குஜராத், புதுச்சேரி, டையு-டாமன் ஆகிய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முடிந்து, தேர்தலை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். தமிழ்நாடு, ஹரியானா, திரிபுரா, உ.பி.(சென்ட்ரல்) ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கை முடிந்திருக் கிறது. தேர்தல் ஏற்பாடுகள் நடக்கிறது...'' என்று தொடங்கியவர், தமிழக விவகாரம் பற்றி விரிவாகவே பேசினார்.

''ராகுல்ஜி, தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்தது பெரும்
எழுச்சியைத் தந்து, 17 லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸில் இணைந்துள்ளனர். தற்போது இங்கே இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து வருகிறது. அடுத்த மாதத் துக்குள் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். 'நாங்கள் நடத்துவது போன்ற ஒளிவு மறைவற்ற, நேர்மையான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம்கூட நடத்துவதில்லை' என்று உறுதியாகச் சொல்வேன். என்ன, அவர்களைப் போன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டும்தான் எங்களிடம் இல்லை!

சம்பந்தமே இல்லாத வட மாநில நிர்வாகிகளை அழைத்துவந்து, தேர்தல் அதிகாரிகளாகப் போடுகிறோம். வெளிமாநில அதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதியிடமிருந்து ஒரு டீகூட வாங்கிக் குடிப்பது கிடையாது. அதனால் நியாயமான தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவில், இளைஞர் காங்கிரஸில் ஒரு லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருப்பார்கள். அதன்பிறகு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். கட்சியின் வரலாறு, கொள்கை, சமூக பிரச்னைகளைக் கையாளுவது, திட்டமிடல் ஆகியவை அந்தப் பயிற்சியில் சொல்லித்தரப்படும்!

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்து, காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளும் விலகிவிட்டன. மீண்டும் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு செல்வதற்காக ராகுல்ஜி திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறார். மக்கள் தொண்டுக்கு அரசியல் பதவிகூட தேவையில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்ற வலுவான ஆயுதத்தை மக்கள் கையில் கொடுத்துள்ளோம். இதைவைத்து இவர்கள் மக்கள் பிரச்னைக்காகப் போராட வேண்டும்!

அதே போன்று குற்றப் பின்னணி கொண்ட யாரையும் கட்சியில் நாங்கள்வைத்துக் கொள்வ தில்லை. கட்சியில் சேர்ந்ததும், குற்றச்செயல்களில் ஈடுபட்டால் சும்மா விடமாட்டோம். புதிதாகத் தேர்ந்தெடுத்தவர்களைக் கண்காணிக்க 'பர்ஃபாமன்ஸ் மெஷர்மென்ட் ஷீட்' என்று ஒன்று வைத்துள்ளோம். அவர்கள் செயல்பாடு திருப்தியாக இல்லையெனில், பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவார்கள். இதுபோன்ற நிலை, காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளிலும் வர வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் தழைக்கும்!'' என்றார் அவர்.
அடேங்கப்பா... ராகுல் தம்பி பதினாறு அடி பாயுது. மத்த கட்சிக்காரங்களெல்லாம் கொஞ்சம் உஷாராவே இருங்கப்பா..!

நன்றி - ஜூனியர் விகடன்

Saturday, December 12, 2009

இலங்கை பிரச்சனை - மாணிக்கத் தாகூர் வேண்டுகோள்

இந்திய இளம் எம்பிக்களின், அமெரிக்கத் தூதருடனான நல்லெண்ண சந்திப்பில் விருதுநகர் எம்பி மாணிக்கத்தாகூரும் கலந்துக் கொண்டார். அப்போது அமெரிக்க தூதரிடம் பேசிய மாணிக்கத் தாகூர், இலங்கையில் போரால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களை மறு குடியேற்றம் செய்ய அமெரிக்காவும் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு “ இந்தியாவே சரியான நடவடிக்கை” எடுத்து வருவதாக அமெரிக்கத் தூதர் கூறினார்.

Sunday, November 29, 2009

நாம் கைக்கூலிகள் இயக்கத்திற்கு கண்டனம்.

"வேசி மக்கள் புகழ்” சமூகவிரோதி சீமான் என்பவனின் தலைமையில் இயங்கும் நாம் கைக்கூலிகள் என்ற இயக்கத்தின் கோழைகள் சிலர் இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து காங்கிரசின் மூத்தத் தலைவர் திரு. இளங்கோவனின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் குண்டு தயாரித்து வீசும் அளவு தமிழகத்தின் நிலை ஆகிவிட்டது வேதனை. இந்த மாதிரி வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களின் கைக்கூலிகளாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சமூக விரோதிகளின் வன்முறைக் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

Tuesday, November 10, 2009

காங்கிரசில் இணைந்தார் திருநாவுக்கரசர்.

MGR அமைச்சரவையில் பெரும் அதிகாரத்துடன் இருந்து பின் அரசியல் சூழ்நிலைகளால் தனிக்கட்சி ஆரம்பித்து அதன் பின் BJPயில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் பிஜேபியின் மதவாதப் போக்காலும் RSSன் தலையீட்டாலும் விரக்தி அடைந்த திருநாவுக்கரசர் இந்தியாவின் மிகப் பெரும் இயக்கமான காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான திரு. குலாம் நபி ஆசாத் முன்னிலையில் திருநாவுக்கரசர், தன்னை 09-11-2009 அன்று காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.

வரும் 12ஆம் தேதி தன் ஆதரவாளர்களுடன் இணையும் விழாவை திருச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

http://congressmedia.net/articles/newsandmedia/pressbriefings/09nov2009.rst

Friday, October 23, 2009

காங்கிரஸ் வெற்றி தொடர்கிறது..

இந்த மாதம் 13ஆம் தேதி ( 13.10.2009 ) நடைபெற்ற மஹாராஷ்ட்ரா, ஹரியானா மற்றும் அருணாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று ( 22.10.2009) நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மஹாராஷ்ட்ராவில் தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.

மகாராஷ்ட்ரா காங் - 82 , தேசியவாத காங் - 62 = 144

அருணாச்சல் பிரதேஷ் : காங்கிரஸ் - 40 / 60

ஹரியானா : காங் - 40 / 90

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் தனிப் பெரும் கட்சியாக வென்றுள்ளது.. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. பிரதமர் மன்மோகன் சிங் நல்லாட்சியில் அன்னை சோனியாகாந்தி மற்றும் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் வெற்றி தொடர்கிறது... காங்கிரஸில் இருப்பதே பெருமை.. காங்கிரஸை வளர்ப்பதே கடமை..ஜெய் ஹோ..

Friday, October 9, 2009

ராஜபாளையம் தேர்தல் : காங்கிரஸ் பெரும் வெற்றி

2009 அக்டோபர் 7ஆம் தேதி நடைப்பெற்ற ராஜபாளையம் நகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியிடப் பட்டன. இதில் 19 வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

முடிவுகள் விவரம்
காங்கிரஸ் : 19
திமுக : 7
அதிமுக கூட்டணி : 10
மதிமுக : 3
சுயேட்சைகள் : 3

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. ஜெய் ஹோ..!

Sunday, September 6, 2009

தலைவர் ராகுல்காந்தி தமிழக சுற்றுப் பயண விவரம்

மிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பணிக்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகிறார். செப்டம்பர் 8,9,10 ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்களை சந்திக்கிறார். சுற்றுப் பயண விவரம்.

செப்டம்பர் 8, 2009
  • காலை 10.30 நாகர்கோவிலில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11.30க்கு திருநெல்வேலியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 1 மணிக்கு விருதுநகரில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 3.30 மணிக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு இளைஞர் SC/ST மாநாட்டில் பங்கேற்கிறார்.

செப்டம்பர் 9, 2009
  • காலை 9.30 மணிக்கு தஞ்சாவூரில் இளம் விவசாயிகளுடன் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு விழுப்புரத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பகல் 12 மணிக்கு வேலூர் CMC கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களுடன் சந்திப்பு
  • பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணாப் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 6.30 மணிக்கு சென்னையில் பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் நிறுவனர்களுடன் சந்திப்பு.
செப்டம்பர் 10, 2009
  • காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11 மணிக்கு கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பு.
  • பகல் 12.30க்கு சேலத்தில் தொழிலாளர்களுடன் சந்திப்பு.
  • பகல் 1.30 மணிக்கு சேலத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • மாலை 3 மணிக்கு கோவையில் இளைஞர்களுடன் சந்திப்பு
  • மாலை 4 மணிக்கு கோவை காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 5 மணிக்கு கோவை இளம் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு.


பத்திரிக்கை செய்தி:
"கிராமங்களில் இளைஞர்களை தேடி...'கட்சியை வளர்க்க ராகுல் வியூகம் : மதுரைக்கு ராகுல் வரும் நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுவிட் டது. ஆனால் இத்தகவல் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சில நாட்களுக்கு முன் வரை தெரியாது. ஒரு மாதத்திற்கு முன்பே, டில்லியில் இருந்து வந்து சில இளைஞர் காங்., நிர்வாகிகள் மதுரை லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.உள்ளூர் காங்., தலைவர் களை இவர்கள் தொடர்பு கொள்ள வில்லை. அவர்களின் வாகனங் களை பயன்படுத் தவில்லை. ஒரு டீ கூட வாங்கிக் குடிக்கவில்லை. தனித்தனியே இரு சக்கர வாகனங்களில் பல்வேறு கிராமங்களுக்கு சென்ற இவர்கள், எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களை சந்தித் தனர். காங்.,கில் இணைந்து பணியாற்ற விரும்புவோரை தேர்வு செய்து, அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் இ-மெயில் மூலம் தினமும் ராகுலுக்குஅனுப்பினர்.

அவற்றை அன்றன்றைக்கு பார்த்த ராகுல், டில்லியில் இருந்தபடியே சில யோசனைகளை தெரிவித்தார். இப்படியே இவர்கள் இரண்டாயிரத்து 500 இளைஞர்களை தேர்வு செய்தனர். மீதி இரண்டாயிரத்து 500 பேரை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் உள்ளூர் காங்., நிர்வாகிகளுக்கு தரப்பட்டது.இப்படி, ரொம்ப கவனமாக பல நாட்கள் திட்டமிட்டு ராகுல் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது. ஒத்த கருத்துள்ள இளைஞர்களை சேர்த்து, எதிர்காலத்தில் காங்கிரசை வலுவான கட்சியாக்கும் யோசனையில் இந்நிகழ்ச்சிக்கு ராகுல் ஏற்பாடு செய்துள்ளார். சொன்னதை செய்த ராகுல்: கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சிதம்பரத்தை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்தார். காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ""தமிழகம் எனக்கு பிடிக்கும். லோக்சபா தேர்த லுக்குப் பிறகு அடிக்கடி தமிழகம் வருவேன். நிறைய இளைஞர் களை சந்தித்து கட்சியை வலுப்படுத்துவேன்,'' என்றார். சொன்னது போலவே தற்போது தமிழகத்தில் தீவிர சுற்றுப் பயணத்தை துவக்கி இளைஞர் களை சந்திக்கிறார் ராகுல்.

நன்றி : தினமலர்

Thursday, September 3, 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆந்திராவில் மிகத்திறமையாகவும் மக்களின் நன் மதிப்புடனும் ஆட்சி செய்து பலத்தப் போட்டிகளுக்கிடையே ஆந்திர மக்களால் தொடர்ந்து இரண்டாவது முறையாக மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்தவருமான முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கும் அவருடன் பயணித்து மரணம் அடைந்த விமான ஓட்டிகள், அரசு அலுவலர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.

  • பிறந்தது : ஜூலை 8, 1949
  • மருத்துவர்
  • நான்கு முறை ஆந்திர சட்ட மன்றத்திற்கும் நான்கு முறை பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
  • போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வென்றவர்.
  • இரண்டு முறை ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர்.
  • ஒரு முறை ஆந்திர சட்டசபை எதிர்கட்சித் தலைவராக இருந்தவர்.(1999-2004)
  • 2004 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 185 தொகுதி வெற்றிகளுடன் முதல்வராக இருந்தார்.
  • 2009 தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார்.
  • 2009 பாராளுமன்றத் தேர்தலில் 33 தொகுதிகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்.
  • செப்டம்பர் 2, 2009ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அகில இந்திய அளவிலும் மிகப் பெரும் இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

Thursday, July 16, 2009

காமராஜர் பிறந்தநாள் விழா

தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.
படம் : தினமணி.

விருதுநகர்
காமராஜரைப் போல் எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என காமராஜர் பிறந்த நாள் விழாவில் மத்திய தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் பேசினார். விருதுநகரில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா நடந்தது.மாணவர் காங்கிரஸ் தலைவர் நவீன் தலைமை வகித்தார். மாணிக் தாகூர் எம்.பி., முன்னிலை வகித்தார். விருதுநகர் தொகுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் முன்று இடங்கள் பெற்றவர்களுக்கு மத்திய இணைஅமைச்சர் சிங் சான்றிதழும், கேடயமும் வழங்கிப்பேசுகையில்,"காமராஜரின் எளிமையும், நேர்மையும் நாடு முழுவதும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தமிழக முதல்வராக இருந்த போது மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டமும், கிராமப்புறங்களில் சிறியஅணைகள் கட்டுவதற்கும், தொழிற்சாலைகள் உருவாவதற்கும் அடிப்படை காரணமாக இருந்தார். மாணவர்கள் காந்திய கொள்கைகளை பின்பற்றி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும். காமராஜரைப் போல் மாணவர்கள் எளிமையாக வாழவேண்டும்' என்றார். அமைச்சரின் பேச்சை விருதுநகர் எம்.பி., மாணிக் தாகூர் தமிழில் மொழி பெயர்த்தார்.

நன்றி : தினமலர்.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று(15.07.2009) கொண்டாடப் பட்டது.

Friday, June 26, 2009

பொறுமை 'ஓவர்'.. இலங்கைக்கு இந்தியா தந்த 'ஷாக்'

டெல்லி: தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும், அப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் பணியில் நீ்ங்கள் விரும்பாவிட்டாலும் நாங்கள் ஈடுபடுவோம் என்று இலங்கையிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.மேலும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி வந்த அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்களிடம் இந்தியா கூறியுள்ளது.புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை ராணுவம் முடிக்கும் வரை பொறுமை காத்த மத்திய அரசு இப்போது தமிழர்களின் உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகளை மெல்ல தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரான பாதுகாப்பு ஆலோசகர் பாசில் ராஜபக்சே, இன்னொரு சகோதரரும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே ஆகியோர் அதிபரின் செயலாளர் லலித் வீரசிங்கவுடன் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இந்த விஷயங்களை இந்தியத் தரப்பு எடுத்து வைத்தது.தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் ராணுவத்தினரின் அளவுக்கு அதிகமான நடமாட்டம்தான் என்று 'ரா' கொடுத்துள்ள தகவல்கதளை சுட்டிக் காட்டிய இந்தியத் தரப்பு உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வலியுறுத்தியது.அதே போல இந்தக் குழு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது, முகாம்களில் தமிழர்கள் போதிய உணவு, சுகாதார வசதியின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளது கவலை தருவதாகக் கூறிய அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தமிழர்கள் பாதிப்பு அடைந்து வருவதால் அனைத்து முகாம்களையும் மூடிவிட்டு அவர்கள் உடனே வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இந்தக் குழு இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சி்ங்கை சந்தித்தபோது, தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியை இலங்கை அரசு உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் கண்ணி வெடிகள் அகற்றும் பணியை இலங்கை அரசு 10 நாட்களுக்குள் தொடங்காவிட்டால் அதன் பிறகு அந்தப் பணியில் இந்தியா ஈடுபடும் என்றும் திட்டவட்டமாக இலங்கை குழுவிடம் கூறப்பட்டுள்ளது.புலிகளின் பெயரால் சீனா, பாகிஸ்தானுடன் இலங்கை நெருக்கம் காட்டியதை இந்தியா எரிச்சலுடன் பார்த்து வந்தது. இந் நிலையில் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதால் இலங்கையை மீ்ண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாகவே தமிழர் பிரச்சனையில் இனியும் மத்திய அரசு அமைதியாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மறு சீரமைப்புக்கு வேண்டிய அளவு உதவுவதாகவும் அந்தக் குழுவிடம் மத்திய அரசு உறுதி தந்துள்ளதோடு, இனியும் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் எண்ண ஓட்டங்களை புறக்கணித்துவிட்டு செயல்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழர்களுக்கு உரிய மரியாதை, அரசியல் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிங்களர்களுக்கு இணையான சம வாய்ப்பும் தரப்பட வேண்டும் என்றும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்திலிருந்து கடும் அரசியல் நெருக்குதல் தரப்பட்ட நிலையிலும் புலிகள் விஷயத்தில் இலங்கையின் ராணுவரீதியான நடவடிக்கைகளில் தலையிடாமல் இருந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் கிருஷ்ணா, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பகை நாடுகளுடன் இலங்கை அளவுக்கு அதிகமாக நெருங்குவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரித்துவிட்டார்.மேலும் கச்சத் தீவை ராணுவ கேந்திரமாக்கவோ இலங்கையில் சீனா கடற்படைத் தளம் அமைக்கவோ இந்தியா அனுமதிக்காது என்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சிங் தெரிவித்தார்.தங்களுடன் கொஞ்சிக் குலாவிய இந்திய அதிகாரிகள் திடீரென இவ்வளவு கடுமையாகப் பேசியதை இலங்கை குழு எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மகிழ்ச்சியோடு டெல்லி வந்த குழு இறுக்கத்துடன் தான் கொழும்பு திரும்பியுள்ளது.
இதையடுத்தே நேற்று இலங்கை அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் 6 மாதத்துக்குள் அவரவர் இல்லங்களுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- Courtesy : thatstamil.com

Wednesday, May 27, 2009

புலிகளின் கடைசித் தொடர்பு - லண்டன் சண்டே டைம்ஸ்

இறுதிக் கட்ட நேரத்தில் நடேசனுடன் ஒரு தொலைபேசித் தொடர்பு...: லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் விளக்கம்
வீரகேசரி இணையம் 5/26/2009 9:09:49 AM -

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளா நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் இறுதிக்கட்ட நேரத்தில் தான் கொண்டிருருந்த தொடர்பை லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் நேற்று விபரமாக எடுத்துக் கூறியுள்ளார்.

"அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு... ஆனால் சில மணி நேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஓரிடமும் இருக்கவில்லை போலும்" என சன்டே டைம்ஸ் செய்தியில் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்"- செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில், கடைசியாக நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுப் பகுதிக்குள் இருந்து, 17.05.2009 ஞாயிறு பின்னிரவு நடேசன் என்னிடம் கூறினார். பின்புறத்திலிருந்து இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்கள் தெளிவாக எனக்குக் கேட்டன.

"ஒபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானியா அரசிடம் இருந்து எங்களின் பாதுபாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். எங்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?" என்று அவர் கேட்டார்.

புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையிலான 26 வருட போரில், வெற்றிகண்டுள்ள சிறிலங்கா இராணுவத்திடம், சரணடைவது மிக அபாயமானதென்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

8 வருடங்களுக்கு முன்பிருந்தே நடேசன், புலித்தேவன் ஆகியோரை எனக்குத் தெரியும். அப்போது தீவின் 3 இல் 1 பங்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இப்போது, இவர்கள் இருவரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர்.

கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து வந்தேன். நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுடன் பறிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்:

ஆயுதங்களைக் கீழே போடுவதாக.....

தாம் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், தமது பாதுகாப்புக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உத்தரவாதம் தர வேண்டுமென்றும், தமிழர்களுக்கு மற்றுமொரு அரசியல் தீர்வு எடுக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த நடவடிக்கை சமாதானம் வருவதற்கான ஓர் அறிகுறியாகவே எனக்குத் தோன்றியது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்குக் குழிக்குள் இருந்தவாறு சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்.

கடைசி ஞாயிறு இரவில், சிறிலங்கா இராணுவம், மிக நெருங்கி வந்த போது, புலிகளிடன் இருந்து, எந்தவித அரசியல் கோரிக்கையும் புகைப்படங்களும் கிடைக்கவில்லை. முன்னர் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க நடேசன் மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது, அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்றும் கூறினார்.

நியூயோர்க்கில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஒன்றினூடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன். அப்போது அங்கே நேரம் காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன்.

வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரி...

அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலுக்கான பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகக் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார்.

சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார்.

லண்டனில் அப்போது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி எடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்புக்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன்.

தென் ஆசியத் தொடர்பிலிருந்து திங்கள் காலை 5.00 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கும் நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன் எல்லாமே முடிந்து விட்டது, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று.

சரணடைதல் பிழையானது ஏன்?

அன்று மாலை, சிறிலங்கா இராணுவம் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள். சரணடைதல் பிழையாகிப் போனது ஏன்? விரைவில் இதனை நான் கண்டுபிடிப்பேன்.

ஞாயிறு இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவையும் நடேசன் தொடர்பு கொண்டுள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். சந்திரநேரு உடனடியாக ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டதாக அறிகிறேன்.

பிந்திய மணித்தியாலங்களில் நடந்தவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

"ஜனாதிபதி தான் நடேசனுக்கும் அவர் குடும்பத்துக்கும் முழுப் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தாரே...? தன்னோடு 300 மக்கள் உள்ளார்கள் என நடேசன் கூறியிருந்தார், சிலர் காயப்பட்டும் இருந்தார்கள்.

நான் ஜனாதிபதியிடம், "நான் நேரில் போய் அவர்களது சரணடைதலை ஏற்கிறேன்" எனக் கூறினேன். அதற்கு ராஜபக்ஷ, "இல்லை, எங்கள் இராணுவம் மிகவும் பெருந்தன்மையும் கட்டுப்பாடுமுடையது. நீங்கள் போர் நடக்கும் இடத்துக்குச் சென்று உங்கள் வாழ்க்கையை இடருக்குள்ளாக்கத் தேவையில்லை" என்று கூறினார்.

பசில், ஜனாதிபதியின் சகோதரர், என்னை அழைத்து, "அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், அவர்கள் வெள்ளைக் கொடியை ஏந்த வேண்டும்" என்றவர், அவர்கள் தொடர வேண்டிய பாதையையும் கூறினார்." இப்படிச் சந்திரநேரு என்னிடம் கூறினார்.

சந்திரநேரு நடேசனை காலை 6:20 மணிக்குத் தொடர்பு கொண்டாராம். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்ததாம்.

"நாங்கள் தயார்." நடேசன் சந்திரநேருவிடம் கூறினார். "நான் வெளியே வந்து வெள்ளைக் கொடியை ஏற்றிப் பிடிக்கப்போகிறேன்" என்றார்.

சந்திரநேரு, "கொடியை உயர்த்திப்பிடி சகோதரனே-அவர்களுக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன்" என்று கூறியிருந்ததாக அறிகின்றேன்.

தப்பி வந்தவர் தந்த விபரம்

கொலையிடத்தில் இருந்து தப்பித்து கூட்டத்துடன் வந்திருந்த ஒரு தமிழர் அதன்பின் என்ன நடந்தது என்பதை விவரித்தார். இவர் பின்னர் உதவிப் பணியாளர் ஒருவரோடு கதைக்கும்போது,

"நடேசனும் புலித்தேவனும், ஆண்களும் பெண்களுமுள்ள கூட்டத்தோடு, வெள்ளைக் கொடியோடு சிறிலங்கா இராணுவத்தை நோக்கி நடந்து வந்தார்கள். இராணுவம் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது.

நடேசனின் மனைவி, ஒரு சிங்களப் பெண்மணி. அவர் சிங்களத்தில் கத்தினார். "அவர்கள் சரணடையத்தானே வந்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களைச் சுடுகிறீர்களே..." என்ற அவரது மனைவியும் சுடப்பட்டார். சரணடைய வந்த சகலருமே கொல்லப்பட்டார்கள்". விபரம் கூறிய அந்தத் தமிழ் நபர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதியாலும் அவர் சகோதரராலும் விரட்டப்பட்டதால், சந்திர நேரு இப்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரி, சரத் பொன்சேகாவுக்கு ஒரு சிறந்த இராணுவத் தலைவனின் தன்மைகள் உள்ளன என்று சரிஷ் ஒரு தடவை பாராட்டியுமுள்ளார்.

சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகள் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், நடேசனும் புலித்தேவனும், தமிழர் உரிமைப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வையே காண விரும்பியிருந்தார்கள். உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள்."

இவ்வாறு லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார்.

நன்றி : Express News.

Saturday, May 23, 2009

நீங்கள் கேட்ட எம்பி : மாணிக் தாகூர்

விருதுநகரில் வைகோவைத் தோற்கடித்த மாணிக்தாகூர் இப்போது செயலில் இறங்கிவிட்டார். இவர் ராகுல்காந்தியின் நேரடித் தொடர்பில் இருப்பவர். ராகுலின் விருப்பத்தின் பேரிலேயே விருதுநகர் வேட்பாளராகி வென்றவர். ராகுல்காந்தி நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர் பாசறையில் தீவிரமாக பங்காற்றுபவர்.

திரு.மாணிக் தாகூருக்கு விருதுநகரில் ஏற்கனவே தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள அது மட்டும் போதாது என்பதால் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்ககளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பதிவை எழுதும் நேரத்தில் கூட அதற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார். எல்லா அலுவலகங்களிலும் கட்சி சாராத பணியாளர்களை தான் நியமிக்க வேண்டும் என்பதில் மாணிக் தாகூர் உறுதியாக இருக்கிறார்.

அனைத்து அலுவலகங்களும் இணையம் மூலம் இணைக்கப் பட்டிருக்கும். தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் தங்கள் கோரிக்கைகளை அருகில் இருக்கும் அலுவலங்கங்களில் தெரிவிக்கலாம். அவைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப் படும். மாதம் ஒரு முறை அந்தந்த சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்து அவைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இன்னும் சில நாட்களில் அலுவலக பணிகள் முடிந்து விடும். பிறகு அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் ஆகிய விவரங்கள் வெளியிடப் படும். விருதுநகர் தொகுதியை சேர்ந்த பதிவர்கள் அங்கு மேற்கொள்ளப் பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளைப் பற்றிய விவரங்களை சொன்னால் அவை அனைத்தும் மாணிக் தாகூர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லப் படும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Thursday, May 21, 2009

திமுக வெளியிலிருந்து ஆதரவு

அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திமுக மத்திய அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளது. திமுக விரும்பிய எண்ணிக்கையிலும் விரும்பிய துறைகளான ரயில்வே மற்றும் சுகாதாரத்துறையை பெருவதிலும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

திமுக 5 கேபினெட் அமைச்சர் பொறுப்பும் 4 இணை அமைச்சர் பதவியும் கேட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் 7 வரை கொடுக்க சம்மத்தித்ததாக அதன் செய்தித் தொடர்பாளார் அறிவித்துள்ளார்.

நினைவஞ்சலி : ராஜிவ்காந்தி


பாரத முன்னாள் பிரதமர் உயர் திரு. ராஜிவ்காந்தி அவர்களின் 18வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது.

Wednesday, May 20, 2009

தமிழக டகால்ட்டி கட்சிகள் - 1

இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. அதில் முக்கிய்மானது தமிழகத்தில் பிலிம் காட்டிக் கொண்டிருந்தவர்களின் வண்டவாளம் தெரிய வந்ததே. காங்+திமுக கூட்டணி 12 இடங்களில் தோற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசங்கள் மிகவும் குறைவாகவே பெற்று தோற்றிருக்கிறார்கள். 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இருந்து 6 சதம் வரை குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் அதிக பட்சமாக 9 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம். ஈரோடு , திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்றப் பேரவையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டும் குறைவான வித்தியாசத்திலேயே காங்கிரஸ் கூட்டணி தோல்வி. இத்தனைக்கும் இந்த பகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கூட்டணி. விடுதல சிறுத்தைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்ற 12 இடங்களில் 2, 3 தொகுதிகள் தவிர மற்ற அனைத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகள் தான். விசியால் எந்த ஆதாயமும் இல்லை. எனவே இந்த குறைந்த வாக்கு வித்தியாச தோல்விகளை சரி செய்து விட முடியும்.

ஆனால் அதிமுக கூட்டணி தோற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள். முதலில் பாமக. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தங்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாக ஊரை ஏமாற்றுபவர்கள்.

தருமபுரி,
பாமக வாங்கிய வாக்குகள் - 29.54 % (அதிமுக+2 கம்யூனிஸ்டுகள்+மதிமுக)
திமுக வாங்கிய ஓட்டுகள் - 47 %. ( திமுக+காங்கிரஸ்+விசி)
பாமக தோல்வி வித்தியாசம் - 17% க்கு மேல்.

தருமபுரியின் அரூர் தொகுதியில் கணிசமான கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போதயை சட்ட மன்ற உறுப்பினர் கூட கம்யூனிஸ்ட் தான். இந்த 29 சதவீதத்தில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் போக பாமகவின் வாக்குகள் எவ்வளவு இருக்க முடியும்?. மிக சொற்பமாகத் தானே. இன்னும் தருமபுரியை பாமக கோட்டை என ஏமாற்ற முடியாதே. :)

அரக்கோணம்
பாமக - 26.32% - இதிலும் 4 கூட்டணி கட்சிகள் வாக்குகள் போக பாமகவின் வாக்குகள் சொற்பமாகவே இருக்கு.
திமுக - 36%
பாமக தோல்வி வித்தியாசம் - 9%க்கு மேல்.

ஸ்ரீபெரும்புதூரில் மட்டுமே குறைவான வாக்குகள் வித்தியாசம் : 3.16%

திருவண்ணாமலை
பாமக - 34%
திமுக - 52%
தோல்வி வித்தியாசம் - 18%

கள்ளக்குறிச்சி
பாமக - 34%
திமுக - 48 %
தோல்வி வித்தியாசம் - 14%

சிதம்பரம்
பாமக - 29%
விசி - 38%
தோல்வி வித்தியாசம் - 9%

புதுச்சேரி
பாமக - 36%
காங்கிரஸ் -52%
தோல்வி - 16%

பாமக வாங்கிய வாக்குகளில் , 4 கூட்டணிக் கட்சிகள் வாக்குகள் போக பாமக எவ்வளவு?. இவ்வளவு நாளா எப்படி எல்லாம் மருத்துவர் ஏமாத்தி இருக்கிறார் பாருங்க. அவர் பலம் என்னன்னே தெரியாம ஒவ்வொரு முறை அவர் தாவும் போதும் இஷ்டத்துக்கு எண்ணிக்கையை சேர்த்துக் கொடுத்திருக்காங்க. பாமகவிற்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது. ( யார்னா ஒரு வங்கி ஆரம்பிச்சிக் குடுங்கய்யா) . இவர்கள் வாங்கியதும் பெருமளவில் அதிமுகவின் வாக்குகள் மட்டுமே. இனியாவது மருத்துவர் தன் பலம் அறிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.

Monday, May 18, 2009

காங்கிரஸ் + திமுக கூட்டணி தோல்வி - ஒரு படப் பார்வை

மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தான் தோல்வி. விரைவில் சரி செய்தால் நல்லது. மின் தடை இல்லாமல் இருந்தாலே போதும். இனி எல்லாம் சுபமே. ;)