காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Showing posts with label அத்வானி. Show all posts
Showing posts with label அத்வானி. Show all posts

Tuesday, March 31, 2009

பாவம் அத்வாணியா? இந்தியாவா?

NDTVயின் walk the Talk நிகழ்ச்சியில் சேகர் குப்தாவுடன் அத்வாணி பேசியது.
கடைசி 2 கேள்வி - பதில்கள் தான் முக்கியமானது.

Advani defends Kandahar case handling
Shekhar Gupta (Walk The Talk)
Saturday, March 22, 2008, (New Delhi)

Nine years after the Kandahar hijack drama, BJP leader LK Advani has said that he had no idea that the then Foreign Minister Jaswant Singh was accompanying the terrorists on the flight to Kandahar.

The NDA government had to release militants in exchange of the Indians held hostage on board the IC 814 airline.

Advani spoke to Editor-in-Chief of The Indian Express Shekhar Gupta on NDTV's Walk The Talk programme.

Advani said the decision was taken in consultation with Vajpayee.

Shekhar Gupta: But going on plane was his (Jaswant Singh) own decision?
Advani: I wouldn't say it I would know that. He must have consulted Vajpayeeji, but it was not an issue at all and this issue was also raised by many others many months later.

Shekhar Gupta: But in this country, would an External Affairs Minister himself escort militants?
Advani: He is not escorting, he is trying to bring back the passengers. But I don't think that I am answerable for that, if the security committee on security had taken a decision.

Shekhar Gupta: You were not consulted on this?
Advani: I don't know about it.

Shekhar Gupta: So when did you get to know he went on the plane?
Advani: I came to know when he was going.

உள்துறை அமைச்சராக இருந்த அத்வாணிக்கு தெரியாமல் ஜஸ்வந்த் சிங் 3 தீவிரவாதிகளையும் கந்தகாருக்கு அழைத்து சென்றாராம். தீவிரவாதிகளுடன் ஜஸ்வண்ட்சிங் போகும் போது தான் அத்வாணிக்கு தெரியுமாம். வாஜ்பாய் அவர்களை கேட்டு அழைத்து சென்றிருப்பார் என்கிறார் அத்வாணி. ஒரு முக்கியமான விஷயத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரை நெ2 அமைச்சரை கலந்தாலோசிக்காமல் அமைச்சரவை செயல்பட்டிருக்கிறது. நாளை அத்வாணி பிரதமரானால் இந்தியா இவர் கட்டுபாட்டில் இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

இந்த லட்சணத்தில் இவர் மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் எங்கிறார். அந்த பலவீனமான பிரதமர் தான் பல தடைகளைத் தாண்டி அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வெங்கய்யா நாயுடு, அத்வாணி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, சுஸ்மா சுவராஜ், ஜெஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஷி என பல அதிகார மையங்கள் செயல்படும்.

பிஜேபியில் அருண் ஜேட்லிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் ஏற்பட்ட பூசலையே தடுத்து நிறுத்த முடியாமல் அப்பாவியாய் இருந்த அத்வாணி எபப்டி இந்த நாட்டின் பிரச்சனைகளை தைரியமாக தீர்ப்பார். ஆட்சியின் குறைபாடுகளை திசை திருப்ப தினம் ஒரு மதக் கலவரத்திற்கு தான் ஏற்பாடு செய்வார்.


http://ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080044709&ch=3/22/2008%209:22:00%20PM

Tuesday, August 12, 2008

அத்வானி ஐயா இது தேவையா உங்களுக்கு?

பாசமிகு அத்வானி ஐயா அவர்களுக்கு,

ரொம்ப நாளா எழுதனும்னு நினைத்தது. இபோது தான் நேரம் வந்திருக்கு. வேற என்ன ஆறிபோன அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சமாச்சாரம் தான். அணு ஒப்பந்தம் போட்டே ஆகனும்னு கங்கிரஸ் கட்சி அடம் புடிச்சது. அதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம் என்று காம்ரேடுகள் கழண்டுட்டு வந்து ஆதரவை வாபஸ் வாங்கினாங்க. அவங்க பிரச்சனை அணு ஒப்பந்தம் இல்லை. அந்த ஒப்பந்தம் அமெரிக்காவுடன் என்பது தான். ஆனா நீங்க அணு ஒப்பந்தத்துக்கும் எதிரி இல்ல. அமெரிக்காவுக்கும் எதிரி இல்ல. நீங்க எதுக்கு சாமி இந்த ஆட்டத்துல சேர்ந்திங்க. எதிர்க் கட்சி என்றால் ஆளுங்கட்சியை எல்லா நேரத்துலையும் எதிர்த்துகிட்டே இருக்கனும்னு தானே.

அட அரசியல்ல இதெல்லம் சகஜம் தானுங்கோ. ஆனா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போதுமான ஆதரவை பெறுவதற்கு ஆளுங்கட்சி( அது உங்க கட்சியாவே இருந்தாலும்) என்ன வேளை எல்லாம் செய்யும்னு உங்களுக்கு தெரியாதா?. அது தெரிஞ்சும் நீங்க இந்த விளயாட்டுல கலந்துக்கலாமா?. தாரளமா கலந்துக்கலாம். ஒருவேளை உங்க கட்சி கட்டுகோப்பகவும் பேராசை குறிப்பாக பணத்தாசையும் இல்லாதவர்களின் கட்சியாக இருந்தால்.

உங்க ஆளுங்க தான் பொட்டிய பாத்தாலே போதுமே பொட்டி பாம்பா அடங்கிடுவாங்களே. WestEnd என்ற பெயரில் ஒரு கம்பனி இருக்கா? அபப்டியே இருந்தாலும் தன்னை சந்திப்பவர்கள் உண்மையில் அதன் பிரதிநிதிகளா என்பது பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைபடாமல் இளித்துக் கொண்டே கையை நீட்டி காசு வாங்கிய ஒருவரை தலைவராக கொண்டிருந்த கட்சியல்லவா உங்க கட்சி. இதை எல்லாம் எப்படி மறந்து போனிங்க? எங்க புரட்சி தலைவி அம்மா செலக்டிவ் அம்னீஷியா அப்டினு ஒரு மேட்டர் கண்டுபிடிச்சி சொன்னது நெசம் தான் போல.

நம்பிக்கை வாக்கெடுப்புல கலந்துகிட்டு அரசுக்கு எதிரா வாக்களிக்க நீங்க முடிவு பண்ணது எவ்ளோ பெரிய தப்புனு உங்களுக்கு புரிய வைக்க தான் சாமி இந்த மெயில்தாசியே.

உங்க கட்சிகாரர்களின் பணத்தாசை பட்டியல்
1.தெகல்காவின் ஆபரேஷன் வெஸ்ட் எண்ட்.
2001ல் உங்க கட்சி தலைவரா இருந்த திரு. பங்காரு லட்சுமணன் இல்லாத ஒரு ஆயுத நிறுவனத்தின் போலி பிரதிநிதிகளிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். ( அவ்ளோ பெரிய கட்சியின் தலைவர் வெரும் 1 லட்சம். கொஞ்சம் பெரிசா வாங்கி இருக்கலாம். :))

2.ஆபரேஷன் துரியோதன்:
2005ல் பாராளுமன்றத்தில் கேள்வி கேக்க பணம் வாங்கிய 11 எம்பிக்களில் 7 பேர் பிஜேபியினர்.

3. ஆபரேஷன் சக்கரவியூக் :
2005ல் எம்.பி.எல்.ஏ.டி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப் பட்ட 6 எம்பிக்களில் 3 பேர் பாஜகவினர் தான்.

இந்த வீர வரலாறுகளை எல்லம் நினைத்து நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?. கவுரவமாக வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். இப்போ பாருங்க.. வழக்கம் போல உங்க ஆளுங்க வேலையை காட்டிட்டாங்க.

4 பேர் காசு வாங்கிகிட்டு ஓட்டு மாத்தி குட்டிட்டாங்க. 5 பேர் நாடாளுமன்றம் பக்கமே தலை வச்சி படுக்காம போய்ட்டாங்க. இதுல 3 பேர் காமெடி தான் பெரும் காமெடி. கேண்டின்ல டீ குடிச்சிட்டு இருந்தாங்களாம். வாக்கெடுப்பு நடந்தது அவங்களுக்கு தெரியாதாம். ஹாஹாஹா..

இவங்கள வச்சிகிட்டு வாக்கெடுப்புல கலந்துகிட்டிங்களே .. இந்த அவமானம் உங்களுக்கு தேவையா? இனியாவது கொஞ்சம் சூதானமா இருந்துக்கோங்க. முரளிமனோகர் ஜோஷி, ஜெஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் என்று உங்க இடத்தை பிடிக்க ஒரு பட்டாளமே இருக்கு. தூக்கி சாப்ட்ருவாய்ங்க. ஏன் .. உங்க சிஷ்ய புள்ளை மோடி கூட எப்போ குஜராத் விட்டு வெளிய வருவார்னு சொல்ல முடியாது. அவருக்கும் டில்லியில குடி இருக்க ஆசை இருக்கும்ல. என்ன சொல்றிங்க?..

அன்புடனும் அக்கறையுடன்
ஒரு காங்கிரஸ்காரனுங்க.

...Its Too Late தலைவரே.. :))