காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Showing posts with label தமிழக காங்கிரஸ். Show all posts
Showing posts with label தமிழக காங்கிரஸ். Show all posts

Tuesday, November 10, 2009

காங்கிரசில் இணைந்தார் திருநாவுக்கரசர்.

MGR அமைச்சரவையில் பெரும் அதிகாரத்துடன் இருந்து பின் அரசியல் சூழ்நிலைகளால் தனிக்கட்சி ஆரம்பித்து அதன் பின் BJPயில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் பிஜேபியின் மதவாதப் போக்காலும் RSSன் தலையீட்டாலும் விரக்தி அடைந்த திருநாவுக்கரசர் இந்தியாவின் மிகப் பெரும் இயக்கமான காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான திரு. குலாம் நபி ஆசாத் முன்னிலையில் திருநாவுக்கரசர், தன்னை 09-11-2009 அன்று காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.

வரும் 12ஆம் தேதி தன் ஆதரவாளர்களுடன் இணையும் விழாவை திருச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

http://congressmedia.net/articles/newsandmedia/pressbriefings/09nov2009.rst

Friday, October 9, 2009

ராஜபாளையம் தேர்தல் : காங்கிரஸ் பெரும் வெற்றி

2009 அக்டோபர் 7ஆம் தேதி நடைப்பெற்ற ராஜபாளையம் நகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியிடப் பட்டன. இதில் 19 வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

முடிவுகள் விவரம்
காங்கிரஸ் : 19
திமுக : 7
அதிமுக கூட்டணி : 10
மதிமுக : 3
சுயேட்சைகள் : 3

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. ஜெய் ஹோ..!

Sunday, September 6, 2009

தலைவர் ராகுல்காந்தி தமிழக சுற்றுப் பயண விவரம்

மிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பணிக்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகிறார். செப்டம்பர் 8,9,10 ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்களை சந்திக்கிறார். சுற்றுப் பயண விவரம்.

செப்டம்பர் 8, 2009
  • காலை 10.30 நாகர்கோவிலில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11.30க்கு திருநெல்வேலியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 1 மணிக்கு விருதுநகரில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 3.30 மணிக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு இளைஞர் SC/ST மாநாட்டில் பங்கேற்கிறார்.

செப்டம்பர் 9, 2009
  • காலை 9.30 மணிக்கு தஞ்சாவூரில் இளம் விவசாயிகளுடன் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு விழுப்புரத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பகல் 12 மணிக்கு வேலூர் CMC கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களுடன் சந்திப்பு
  • பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணாப் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 6.30 மணிக்கு சென்னையில் பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் நிறுவனர்களுடன் சந்திப்பு.
செப்டம்பர் 10, 2009
  • காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11 மணிக்கு கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பு.
  • பகல் 12.30க்கு சேலத்தில் தொழிலாளர்களுடன் சந்திப்பு.
  • பகல் 1.30 மணிக்கு சேலத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • மாலை 3 மணிக்கு கோவையில் இளைஞர்களுடன் சந்திப்பு
  • மாலை 4 மணிக்கு கோவை காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 5 மணிக்கு கோவை இளம் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு.


பத்திரிக்கை செய்தி:
"கிராமங்களில் இளைஞர்களை தேடி...'கட்சியை வளர்க்க ராகுல் வியூகம் : மதுரைக்கு ராகுல் வரும் நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுவிட் டது. ஆனால் இத்தகவல் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சில நாட்களுக்கு முன் வரை தெரியாது. ஒரு மாதத்திற்கு முன்பே, டில்லியில் இருந்து வந்து சில இளைஞர் காங்., நிர்வாகிகள் மதுரை லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.உள்ளூர் காங்., தலைவர் களை இவர்கள் தொடர்பு கொள்ள வில்லை. அவர்களின் வாகனங் களை பயன்படுத் தவில்லை. ஒரு டீ கூட வாங்கிக் குடிக்கவில்லை. தனித்தனியே இரு சக்கர வாகனங்களில் பல்வேறு கிராமங்களுக்கு சென்ற இவர்கள், எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களை சந்தித் தனர். காங்.,கில் இணைந்து பணியாற்ற விரும்புவோரை தேர்வு செய்து, அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் இ-மெயில் மூலம் தினமும் ராகுலுக்குஅனுப்பினர்.

அவற்றை அன்றன்றைக்கு பார்த்த ராகுல், டில்லியில் இருந்தபடியே சில யோசனைகளை தெரிவித்தார். இப்படியே இவர்கள் இரண்டாயிரத்து 500 இளைஞர்களை தேர்வு செய்தனர். மீதி இரண்டாயிரத்து 500 பேரை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் உள்ளூர் காங்., நிர்வாகிகளுக்கு தரப்பட்டது.இப்படி, ரொம்ப கவனமாக பல நாட்கள் திட்டமிட்டு ராகுல் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது. ஒத்த கருத்துள்ள இளைஞர்களை சேர்த்து, எதிர்காலத்தில் காங்கிரசை வலுவான கட்சியாக்கும் யோசனையில் இந்நிகழ்ச்சிக்கு ராகுல் ஏற்பாடு செய்துள்ளார். சொன்னதை செய்த ராகுல்: கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சிதம்பரத்தை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்தார். காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ""தமிழகம் எனக்கு பிடிக்கும். லோக்சபா தேர்த லுக்குப் பிறகு அடிக்கடி தமிழகம் வருவேன். நிறைய இளைஞர் களை சந்தித்து கட்சியை வலுப்படுத்துவேன்,'' என்றார். சொன்னது போலவே தற்போது தமிழகத்தில் தீவிர சுற்றுப் பயணத்தை துவக்கி இளைஞர் களை சந்திக்கிறார் ராகுல்.

நன்றி : தினமலர்

Sunday, April 12, 2009

கலகக்காரர்களை வெளியேற்றுங்கள்

தேர்தல் வந்துவிட்டாலே கட்சியில் கலகக்காரர்கள் முளைத்துவிடுகிறார்கள். உட்கட்சித் தேர்தலாகட்டும் உள்ளாட்சி, சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தலாகட்டும். கட்சிக்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போடாதவர்களெல்லாம் டில்லிக்கு பைபாஸ் ரூட்டில் சென்றுவிடுகிறார்கள். பதவிக் கேட்கும் முன் கட்சிக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் தாங்கள் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. பொதுக்கூட்டம், போராட்டம் என்று எதுவும் செய்து கட்சியை வளர்க்க முன்வருவதில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட மட்டும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லை எனில் கலகம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இவர்களை எலலாம் கட்சியை விட்டே நீக்க வேண்டும்.

இந்தத் தேர்தலிலும் சிலர் அந்த வேலைகளை செய்வதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லாம் கட்சிக்காக இதுவரை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். கட்சியின் ”மேலிடத்தில் மட்டும்” தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு வார்டு மெம்பர் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சீட் வாங்கிடுவாங்க. குறிப்பிட்ட சிலருக்கே எல்லா தேர்தல்களிலும் வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தால் கட்சிக்காக பாடுபடும் மற்றவர்கள் எப்படி மேலும் கட்சி வளர்க்க பாடுபடுவார்கள்.

  • மாவட்டத் தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது. அல்லது அவர்கள் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் வாய்ப்பு கேட்க வேண்டும். அப்போது தான் மக்கள் செல்வாக்கு பெற்ற மற்றொருவருக்கும் பொறுப்பு கிடைக்கும்.
  • ஏற்கனவே ஏதேனும் ஒரு தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருப்பவருக்கு அந்த பதவிக் காலம் முடியும் வரை வேறுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • உள்ளாட்சி அமைபுகளிலோ, சட்ட மன்றத்திலோ தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • தற்போது உள்ளாட்சி அமைப்புகளிலோ சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இருப்பவர்களின் தொகுதியில் அவர்களுக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு அடுத்த வாய்ப்பை வழங்க வேண்டும்.
  • அதில் தேறாதவர்களுக்கு அடுத்து வாய்ப்புகள் வழங்கக் கூடாது.
  • ஒரு முறை தோற்பவருக்கு குறைந்த பட்சம் அடுத்த ஒரு தேர்தலிலாவது போடியிட அனுமதிக்கக் கூடாது. வாக்கு வித்தியாசம் 25 சதவீதத்திற்குள் இருந்தால் மட்டும் அடுத்த தேர்தலில் வாய்ப்பளிக்கலாம்.
  • இப்போது தமிழகத்தில் இருக்கும் நம் கட்சியின் 10 எம்பிக்கள் 35 எம்எல்ஏக்கள் பெயர் எத்தனை கட்சித் தொண்டனுக்கு முழுதாகத் தெரியும்?. 10 சதவீதம் தொண்டனுக்குக் கூடத் தெரியாது. காரணம், கட்சியின் செயல்பாடு அந்த அளவுக்குத் தான் இருக்கிறது. நேற்று முளைத்த கட்சிகள் கூட பொதுக் கூட்டம், மாநாடு, பேரணிகள் என்று எப்போதும் தொண்டர்களை உற்சாமகாக வைத்திருக்கின்றன.
  • நூற்றாண்டு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு, இருக்கும் தொண்டர்களை எல்லாம் திராவிடக் கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.
  • உடனடித் தேவை உட்கட்சித் தேர்தல். தொண்டர்களிடம் செல்வாக்கு இருப்பவர்களே கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும்.
  • இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும். மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் பணி சிறப்பாகவே இருக்கின்றன. அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
  • தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம் அந்த தொகுதியில் கட்சியில் மாணவர், இளைஞர் அணி, சேவாதளம் நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார , மாவட்ட நிர்வாகிகளின் பெயர்களைக் கேட்க வேண்டும். அவர்களை எல்லாம் எப்போதாவது சந்தித்திருக்கிறார்களா என்பதை எல்லாம் ஆராய வேண்டும். அதன் பின்பே அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
இந்த பாராளுமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கவே கூடாது. தற்போது எம்பியாக இருப்பவர்களிலும் தொகுதியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். இவைகள் எல்லாம் விரைவில் ராகுல்காந்திக்கு அனுப்பி வைக்கப் படும்.