காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Showing posts with label Election09. Show all posts
Showing posts with label Election09. Show all posts

Thursday, May 21, 2009

திமுக வெளியிலிருந்து ஆதரவு

அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திமுக மத்திய அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளது. திமுக விரும்பிய எண்ணிக்கையிலும் விரும்பிய துறைகளான ரயில்வே மற்றும் சுகாதாரத்துறையை பெருவதிலும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

திமுக 5 கேபினெட் அமைச்சர் பொறுப்பும் 4 இணை அமைச்சர் பதவியும் கேட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் 7 வரை கொடுக்க சம்மத்தித்ததாக அதன் செய்தித் தொடர்பாளார் அறிவித்துள்ளார்.

Wednesday, May 20, 2009

தமிழக டகால்ட்டி கட்சிகள் - 1

இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. அதில் முக்கிய்மானது தமிழகத்தில் பிலிம் காட்டிக் கொண்டிருந்தவர்களின் வண்டவாளம் தெரிய வந்ததே. காங்+திமுக கூட்டணி 12 இடங்களில் தோற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசங்கள் மிகவும் குறைவாகவே பெற்று தோற்றிருக்கிறார்கள். 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இருந்து 6 சதம் வரை குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் அதிக பட்சமாக 9 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம். ஈரோடு , திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்றப் பேரவையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டும் குறைவான வித்தியாசத்திலேயே காங்கிரஸ் கூட்டணி தோல்வி. இத்தனைக்கும் இந்த பகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கூட்டணி. விடுதல சிறுத்தைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்ற 12 இடங்களில் 2, 3 தொகுதிகள் தவிர மற்ற அனைத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகள் தான். விசியால் எந்த ஆதாயமும் இல்லை. எனவே இந்த குறைந்த வாக்கு வித்தியாச தோல்விகளை சரி செய்து விட முடியும்.

ஆனால் அதிமுக கூட்டணி தோற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள். முதலில் பாமக. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தங்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாக ஊரை ஏமாற்றுபவர்கள்.

தருமபுரி,
பாமக வாங்கிய வாக்குகள் - 29.54 % (அதிமுக+2 கம்யூனிஸ்டுகள்+மதிமுக)
திமுக வாங்கிய ஓட்டுகள் - 47 %. ( திமுக+காங்கிரஸ்+விசி)
பாமக தோல்வி வித்தியாசம் - 17% க்கு மேல்.

தருமபுரியின் அரூர் தொகுதியில் கணிசமான கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போதயை சட்ட மன்ற உறுப்பினர் கூட கம்யூனிஸ்ட் தான். இந்த 29 சதவீதத்தில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் போக பாமகவின் வாக்குகள் எவ்வளவு இருக்க முடியும்?. மிக சொற்பமாகத் தானே. இன்னும் தருமபுரியை பாமக கோட்டை என ஏமாற்ற முடியாதே. :)

அரக்கோணம்
பாமக - 26.32% - இதிலும் 4 கூட்டணி கட்சிகள் வாக்குகள் போக பாமகவின் வாக்குகள் சொற்பமாகவே இருக்கு.
திமுக - 36%
பாமக தோல்வி வித்தியாசம் - 9%க்கு மேல்.

ஸ்ரீபெரும்புதூரில் மட்டுமே குறைவான வாக்குகள் வித்தியாசம் : 3.16%

திருவண்ணாமலை
பாமக - 34%
திமுக - 52%
தோல்வி வித்தியாசம் - 18%

கள்ளக்குறிச்சி
பாமக - 34%
திமுக - 48 %
தோல்வி வித்தியாசம் - 14%

சிதம்பரம்
பாமக - 29%
விசி - 38%
தோல்வி வித்தியாசம் - 9%

புதுச்சேரி
பாமக - 36%
காங்கிரஸ் -52%
தோல்வி - 16%

பாமக வாங்கிய வாக்குகளில் , 4 கூட்டணிக் கட்சிகள் வாக்குகள் போக பாமக எவ்வளவு?. இவ்வளவு நாளா எப்படி எல்லாம் மருத்துவர் ஏமாத்தி இருக்கிறார் பாருங்க. அவர் பலம் என்னன்னே தெரியாம ஒவ்வொரு முறை அவர் தாவும் போதும் இஷ்டத்துக்கு எண்ணிக்கையை சேர்த்துக் கொடுத்திருக்காங்க. பாமகவிற்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது. ( யார்னா ஒரு வங்கி ஆரம்பிச்சிக் குடுங்கய்யா) . இவர்கள் வாங்கியதும் பெருமளவில் அதிமுகவின் வாக்குகள் மட்டுமே. இனியாவது மருத்துவர் தன் பலம் அறிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.

Monday, May 18, 2009

காங்கிரஸ் + திமுக கூட்டணி தோல்வி - ஒரு படப் பார்வை

மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தான் தோல்வி. விரைவில் சரி செய்தால் நல்லது. மின் தடை இல்லாமல் இருந்தாலே போதும். இனி எல்லாம் சுபமே. ;)

Sunday, May 17, 2009

காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி - ஈழப் பிரச்சனைக் காரணமில்லை

தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர் இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டார்கள். அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தோல்விக்கும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இணையத்தில் எழுதும் சில டைம்பாஸ் அரசியல் நிபுணர்கள் , காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்குக் காரணம் ஈழத் தமிழர் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் காரணம் காங்கிரஸ் என்ற பித்தலாட்ட பிரச்சாரமும் அதனை செய்த பாரதிராஜா, சீமான் போன்ற வேஷதாரிகளும் தான் என அளந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அறிவைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் தான் இந்த பதிவைப் போட வேண்டியதாகிவிட்டது.

தங்கபாலு 50,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி.
சேலம் மாநகரம் திமுகவின் கோட்டை. ஆனால் மொத்த மாவட்டமும் பார்த்தால் அதிமுக செல்வாக்கு அதிகம். சென்ற முறை வெற்றிக்குக் காரணம் பாமக, மதிமுக, 2 கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் வாக்குகளும் கிடைத்ததால் தங்கபாலு வெற்றி பெற்றார். இப்போது இவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணி. நிச்சயம் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து 50000 வாக்குகளுக்கு மேல் வாக்கு வங்கி இருக்கு. எனவே ஈழப் பிரச்சனைக்கும் தங்கபாலு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஈரோட்டில் இளங்கோவன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
இதற்கு முதல் காரணம் இவர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தான். திமுக மற்றும் காங்கிரசில் இருக்கும் ஒரு பகுதி கவுண்டர்கள் கூட மதிமுகவின் கணேச மூர்த்திக்கு வாக்களித்தார்கள். எல்லாம் சாதிப் பாசம். கூடவே கொமுபே வேட்பாளர் வாங்கிய 1 லட்சம் ஓட்டுகள். இந்த ஓட்டுகளில் பெரும்பாலானவை காங்கிரஸ்+திமுக கூட்டணிக்கு வர வேண்டியவை. காரணம் கடைசியில். மிக முக்கியமாக மின் தடை. ஈரோடு மாவட்டம் முழுதும் விசைத்தறிகள் தான் மிகப் பெரிய தொழில். மின் தடையால் வேலை இழந்தவர்கள் மிக மிக அதிகம். அவர்களின் கோபம் திமுக கூட்டணிக்கு எதிராக திரும்பியது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் இளங்கோவன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

திருப்பூரில் கார்வேந்தன் 90000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் இளங்கோவனுக்கு பாதகமாக அமைந்த அதே விஷயங்கள் தான். மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 95000 வாக்குகள். பெரிய வாக்கு வித்தியாசம் எற்படக் காரணம், கம்யூனிஸ்டுகள் ஓரளவு செல்வாக்குள்ள தொகுதி தான் திருப்பூர். எனவே அதிமுகவிற்கு அது பெரிய பலம். எனவே ஈழப் பிரச்சனைக்கும் கார்வேந்தன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கோவை பிரபு 40,000 வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 1,28,000 வாக்குகள் தான் தோல்விக்க்குக் காரணம். மின்தடையால் தொழிற்சாலைகளில் 3 ஷிப்டுகள் 2 ஷிப்டுகளாக குறைக்கப் பட்டது. இதனால் வேலை இழப்பும் வருமான இழப்பும் மிகப் பெரிய அளவில் இருக்கு. லக்ஷ்மி மில்ஸ் மாதிரி மிகப் பெரிய குழுமத்தில் சில யூனிட்கள் கூட மூடப் பட்டு ஆயிரக் கணக்கானவர்கள் வேலை இழந்தார்கள். இதனால் திமுகவினரே ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தார்கள். அவர்களின் வாக்குகள் கொமுபேக்கு போனது. இது என் நேரடியாக பார்த்த அனுபவம். மேலும் கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணிக்கு பலம். வெற்றி பெற்றவரும் கம்யூனிஸ்டு தான். அதோடு சேர்த்து கோவையில் பலமான சக்திகளாக இருக்கும் காங்கிரசின் ஒரு பிரிவினைரை பிரபு கண்டுகொள்ளவே இல்லை. அவர் இஷ்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்தல் சமயத்தில் மாற்றி அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். இதை செய்யாமல் இருந்தாலே வென்றிருப்பார். எனவே ஈழப் பிரச்சனைக்கும் பிரபு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மணிஷங்கர் ஐயர் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மணிசங்கர் ஐயர் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டிருப்பதாக சொன்னாலும் கூட பெரும்பாலும் தொகுதியில் இல்லாமல் டில்லியிலேயே இருந்திருக்கிறார். அந்த அதிருப்தி மற்றும் ஜவஹிருல்லா பிரித்த முஸ்லிம் ஓட்டுகள் மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் 4 கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து 30000 வாக்குகளாவது இருக்கும். ஜவாஹிருல்லா 20000+ அதிமுக கூட்டணியின் 30000 வாக்குகள் சேர்ந்தாலே 50000 வாக்குகளுக்கு மேல் அதிமுகவிற்கு கிடைக்கிறது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் மணிசங்கரின் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.


கொங்கு மண்டலத்தில் கொமுபே வாங்கிய ஓட்டுகள் ஏன் காங்+திமுக கூட்டணியை பாதித்திருக்கிறது என்று சொல்கிறேன் என்றால், அவர்கள் பலமில்லாத மற்ற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேமுதிக பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை. ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, கரூர் ஆகியத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தான் வென்றிருக்கிறது. எனவே கொமுபே ஓட்டுகளுக்கும் அதிமுக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. ஆகவே கொமுபே பிரித்த ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டியது தான். பொதுவாக கவுண்டர்கள் ஓட்டுகள் அதிமுகவிற்கு தான் என்ற கருத்து உண்டு. ஆனால் அது பொய் என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கூட்டணிகளின் தயவால் தான் இந்தப் பகுதிகளின் அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பகுதிகளுக்காக அடுத்து வரும் தேர்தல்களில் கொமுபே க்கு டிமாண்ட் அதிகரிக்கலாம். ஹ்ம்ம்.. அடுத்த பாமக ரெடி . :(

சிலர் புலம்புவது, காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. இதைக் கேட்டால் சிரிப்பு தன் வருகிறது. அதிமுகவிடம் காசு இல்லையா? பாமகவிடம் காசு இல்லையா? அவர்கள் எல்லாம் காசே கொடுக்கவில்லையா? காசு தான் ஓட்டு வாங்கும் என்றால் கரூரில் கேசி.பழனிச்சாமி தான் வென்றிருப்பார். அவர் செய்யாத செலவா?.ஆனால் தம்பிதுரை தான் ஜெயிச்சார். காரணம், அங்கும் மின் தடை மிகப் பெரிய பிரச்சனை. கரூரும் தொழில்வளம் மிக்க மாவட்டம். மின் தடையால் வேலை இழந்தவர்கள் அங்கும் அதிகம். எனவே காங்கிரஸ் மற்றும் திமுகவில் சில வேட்பாளர்களின் தோல்விக்கும் ஈழப் பிரச்சனைக்கும் பாரதிராஜா, சீமான் போன்ற நச்சுப் பாம்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சினிமாக் காரர்களின் முகத்தில் மக்கள் மலத்தைப் பூசி இருக்கிறார்கள் என்பதே நிஜம். இவர்கள் பரப்பிய பொய்யை மக்கள் நம்பி இருந்தால் அதிமுக போட்டியிட்ட 23 தொகுதிகளின் வெறும் 9 தொகுதிகள் தான் ஜெயித்திருக்குமா? காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 16 . வென்றவை 9 தொகுதிகள். அதிமுக போட்டியிட்டது 23 இடங்கள். வென்றவை 9 மட்டுமே. மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஆகவே இணையத்து டைம்பாஸ் அரசியல் நிபுணர்களே , குய்யோ முறையோன்னு கத்தாம எதார்த்தத்தை கொஞ்சம் யோசிங்க. சினிமாக் காரனுங்க பின்னாடி சுத்தாதிங்க. அவனுங்க கோடி கோடியா சம்பாதிக்கிறானுங்க. கொஞ்ச நாள் சீன் போட்டு சுத்தறதால அவனுங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்கு அப்படியா? சொல்லுங்க.

ஈழப் பிரச்சனை தான் முக்கியம்னு மக்கள் நினைச்சிருந்தா, அதை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்த கம்யூனிஸ்டுகள் ஏன் தோற்றார்கள்? ஈழத்து நாயகனாக நினைத்து உதார் விட்டு திரிஞ்ச வைகோ ஏன் தோற்றார்? ஈழம் தான் உயிர் மூச்சென்று நாடகம் போட்ட பச்சோந்தி ராமதாஸ் கட்சி ஏன் தோற்றது? ஈழம் வாங்கித் தருவேன் என்று தேர்தலுக்காக நாக்கைத் திருப்பிய “ ராஜபக்‌ஷேவின் பெண் குரல்” ஜெயலலிதா கட்சிக்கு ஏன் இவ்வளவுப் பெரிய தோல்வி?.

தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள்...!

பாமகவின் ராஜதந்திரம் அடுத்த பதிவு...

Monday, May 4, 2009

உங்கள் ஓட்டு ”இலங்கைத் தமிழர்” நலன் காக்கும் புரட்சித் தலைவிக்கே.

தனி ஈழம் அமைய வேண்டுமானால் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கே ஓட்டுப் போடுங்கன்னு ”உணர்வாளர்கள்” எல்லாம் கூவிக் கூவி ஓட்டுக் கேக்கறாங்க. ஏனுங்கணா இப்டி கூவறிங்கன்னு கேட்டா, அவங்க தான் தனி ஈழம் பெற்றுத் தருவாங்களாம். பாவமா இருக்கு இவங்களைப் பார்த்தால்.

ஜெயலலிதாவோட குரலில் அலைபேசிகள் வழியாகவும் பண்பலை ரேடியோக்கள் வழியாகவும் நிமிடத்துக்கு ஒரு முறை ஓட்டுக் கேட்கும் விளம்பரம் வருகிறது. அதில் “இலங்கைத் தமிழர் நலன் காக்க” என்று தான் சொல்கிறார். ஈழத் தமிழர் நலன் என்று சொல்லவில்லை. பேச்சுக்குக் கூட ஈழம் என்ற வார்த்தையை உபயோகிக்க மறுப்பவர் ஈழம் பெற்றுத் தருவாராம். தேர்தல் முடியட்டும். அப்புறம் பாருங்க அம்மாவோட அருள் வாக்குகள் எப்டி இருக்குன்னு. போட்ட கையெழுத்தையே இல்லை என்று சொன்னவர் தன் பெயரில் வந்த காசோலையை பணமாக்கிவிட்டு அனுப்பியவர் யார் என்று தெரியாது என்று சொன்னவர் ஈழம் அமைந்தால் இலங்கையின் ஒருமைப் பாடு பாதிக்கும் என்று மீண்டும் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?. என்னவோ போங்க.

Thursday, April 30, 2009

ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா...



In an exclusively interview with TIMES NOW, BJP president Rajnath Singh ducked the question of Narendra Modi being as the future Prime Minister। BJP leaders Arun Jaitley, Arun Shourie as well as former party president Venkaiya Naidu has vouched for Modi for the PM's post. However, when questioned by TIMES NOW correspondent in Lucknow, Rajnath Singh avoided the questioned and walked off.

--http://www.timesnow.tv/videoshow/4315016.cms

Sunday, April 12, 2009

கலகக்காரர்களை வெளியேற்றுங்கள்

தேர்தல் வந்துவிட்டாலே கட்சியில் கலகக்காரர்கள் முளைத்துவிடுகிறார்கள். உட்கட்சித் தேர்தலாகட்டும் உள்ளாட்சி, சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தலாகட்டும். கட்சிக்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போடாதவர்களெல்லாம் டில்லிக்கு பைபாஸ் ரூட்டில் சென்றுவிடுகிறார்கள். பதவிக் கேட்கும் முன் கட்சிக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் தாங்கள் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. பொதுக்கூட்டம், போராட்டம் என்று எதுவும் செய்து கட்சியை வளர்க்க முன்வருவதில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட மட்டும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லை எனில் கலகம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இவர்களை எலலாம் கட்சியை விட்டே நீக்க வேண்டும்.

இந்தத் தேர்தலிலும் சிலர் அந்த வேலைகளை செய்வதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லாம் கட்சிக்காக இதுவரை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். கட்சியின் ”மேலிடத்தில் மட்டும்” தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு வார்டு மெம்பர் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சீட் வாங்கிடுவாங்க. குறிப்பிட்ட சிலருக்கே எல்லா தேர்தல்களிலும் வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தால் கட்சிக்காக பாடுபடும் மற்றவர்கள் எப்படி மேலும் கட்சி வளர்க்க பாடுபடுவார்கள்.

  • மாவட்டத் தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது. அல்லது அவர்கள் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் வாய்ப்பு கேட்க வேண்டும். அப்போது தான் மக்கள் செல்வாக்கு பெற்ற மற்றொருவருக்கும் பொறுப்பு கிடைக்கும்.
  • ஏற்கனவே ஏதேனும் ஒரு தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருப்பவருக்கு அந்த பதவிக் காலம் முடியும் வரை வேறுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • உள்ளாட்சி அமைபுகளிலோ, சட்ட மன்றத்திலோ தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • தற்போது உள்ளாட்சி அமைப்புகளிலோ சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இருப்பவர்களின் தொகுதியில் அவர்களுக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு அடுத்த வாய்ப்பை வழங்க வேண்டும்.
  • அதில் தேறாதவர்களுக்கு அடுத்து வாய்ப்புகள் வழங்கக் கூடாது.
  • ஒரு முறை தோற்பவருக்கு குறைந்த பட்சம் அடுத்த ஒரு தேர்தலிலாவது போடியிட அனுமதிக்கக் கூடாது. வாக்கு வித்தியாசம் 25 சதவீதத்திற்குள் இருந்தால் மட்டும் அடுத்த தேர்தலில் வாய்ப்பளிக்கலாம்.
  • இப்போது தமிழகத்தில் இருக்கும் நம் கட்சியின் 10 எம்பிக்கள் 35 எம்எல்ஏக்கள் பெயர் எத்தனை கட்சித் தொண்டனுக்கு முழுதாகத் தெரியும்?. 10 சதவீதம் தொண்டனுக்குக் கூடத் தெரியாது. காரணம், கட்சியின் செயல்பாடு அந்த அளவுக்குத் தான் இருக்கிறது. நேற்று முளைத்த கட்சிகள் கூட பொதுக் கூட்டம், மாநாடு, பேரணிகள் என்று எப்போதும் தொண்டர்களை உற்சாமகாக வைத்திருக்கின்றன.
  • நூற்றாண்டு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு, இருக்கும் தொண்டர்களை எல்லாம் திராவிடக் கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.
  • உடனடித் தேவை உட்கட்சித் தேர்தல். தொண்டர்களிடம் செல்வாக்கு இருப்பவர்களே கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும்.
  • இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும். மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் பணி சிறப்பாகவே இருக்கின்றன. அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
  • தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம் அந்த தொகுதியில் கட்சியில் மாணவர், இளைஞர் அணி, சேவாதளம் நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார , மாவட்ட நிர்வாகிகளின் பெயர்களைக் கேட்க வேண்டும். அவர்களை எல்லாம் எப்போதாவது சந்தித்திருக்கிறார்களா என்பதை எல்லாம் ஆராய வேண்டும். அதன் பின்பே அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
இந்த பாராளுமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கவே கூடாது. தற்போது எம்பியாக இருப்பவர்களிலும் தொகுதியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். இவைகள் எல்லாம் விரைவில் ராகுல்காந்திக்கு அனுப்பி வைக்கப் படும்.

Tuesday, March 31, 2009

பாவம் அத்வாணியா? இந்தியாவா?

NDTVயின் walk the Talk நிகழ்ச்சியில் சேகர் குப்தாவுடன் அத்வாணி பேசியது.
கடைசி 2 கேள்வி - பதில்கள் தான் முக்கியமானது.

Advani defends Kandahar case handling
Shekhar Gupta (Walk The Talk)
Saturday, March 22, 2008, (New Delhi)

Nine years after the Kandahar hijack drama, BJP leader LK Advani has said that he had no idea that the then Foreign Minister Jaswant Singh was accompanying the terrorists on the flight to Kandahar.

The NDA government had to release militants in exchange of the Indians held hostage on board the IC 814 airline.

Advani spoke to Editor-in-Chief of The Indian Express Shekhar Gupta on NDTV's Walk The Talk programme.

Advani said the decision was taken in consultation with Vajpayee.

Shekhar Gupta: But going on plane was his (Jaswant Singh) own decision?
Advani: I wouldn't say it I would know that. He must have consulted Vajpayeeji, but it was not an issue at all and this issue was also raised by many others many months later.

Shekhar Gupta: But in this country, would an External Affairs Minister himself escort militants?
Advani: He is not escorting, he is trying to bring back the passengers. But I don't think that I am answerable for that, if the security committee on security had taken a decision.

Shekhar Gupta: You were not consulted on this?
Advani: I don't know about it.

Shekhar Gupta: So when did you get to know he went on the plane?
Advani: I came to know when he was going.

உள்துறை அமைச்சராக இருந்த அத்வாணிக்கு தெரியாமல் ஜஸ்வந்த் சிங் 3 தீவிரவாதிகளையும் கந்தகாருக்கு அழைத்து சென்றாராம். தீவிரவாதிகளுடன் ஜஸ்வண்ட்சிங் போகும் போது தான் அத்வாணிக்கு தெரியுமாம். வாஜ்பாய் அவர்களை கேட்டு அழைத்து சென்றிருப்பார் என்கிறார் அத்வாணி. ஒரு முக்கியமான விஷயத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரை நெ2 அமைச்சரை கலந்தாலோசிக்காமல் அமைச்சரவை செயல்பட்டிருக்கிறது. நாளை அத்வாணி பிரதமரானால் இந்தியா இவர் கட்டுபாட்டில் இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

இந்த லட்சணத்தில் இவர் மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் எங்கிறார். அந்த பலவீனமான பிரதமர் தான் பல தடைகளைத் தாண்டி அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வெங்கய்யா நாயுடு, அத்வாணி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, சுஸ்மா சுவராஜ், ஜெஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஷி என பல அதிகார மையங்கள் செயல்படும்.

பிஜேபியில் அருண் ஜேட்லிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் ஏற்பட்ட பூசலையே தடுத்து நிறுத்த முடியாமல் அப்பாவியாய் இருந்த அத்வாணி எபப்டி இந்த நாட்டின் பிரச்சனைகளை தைரியமாக தீர்ப்பார். ஆட்சியின் குறைபாடுகளை திசை திருப்ப தினம் ஒரு மதக் கலவரத்திற்கு தான் ஏற்பாடு செய்வார்.


http://ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080044709&ch=3/22/2008%209:22:00%20PM

Friday, March 27, 2009

ராமதாஸ் காமெடி


ராமதாஸ் நேத்து ஒரு ட்ராமா நடத்தினது எல்லாருக்குமே தெரியும். அதெப்டிங்க மருத்துவரே... நீங்க பொதுக் குழுவை கூட்டுவிங்க. அதுல அதிமுகவா, திமுகாவா என்று கேட்டு ஒரு அட்டையை எல்லார்கிட்டயும் குடுப்பிங்க. அவங்க எந்தக் கூட்டணின்னு சொல்வாங்க. அப்பால அந்தக் கூட்டணியில நீங்க சேருவிங்க. உங்களுக்கே இதெல்லாம் சிரிப்பு வரலை? :))

சரி.. எல்லாரும் அதிமுகன்னு சொல்லிட்டாங்க. இப்போ அதிமுக உங்களை சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னா என்னா செய்விங்க? :))
(ஒரு பத்திரிக்கையாளர் கூட இதைக் கேட்கலை.. யாரும் சீரியசா எடுத்துக்கலையோ? :)) )

போறதுன்னா வழக்கம் போல வேட்டியை இறக்கிவிட்டு துண்டை இடுப்புல கட்டிகிட்டு தலையைக் குனிஞ்சி கை கூப்பிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே. அதான் இரண்டு பக்கமும் ஆள்விட்டுப் பேசி எங்க வெயிட்டா கெடைக்கிதோ அங்க சேருவதுன்னு முடிவு பண்ணியாச்சி இல்ல.

அதென்னா மருத்துவரே பூவாத் தலையா போடற மாதிரி ஒரு வாக்கெடுப்பு? . உங்களுக்குன்னு கொள்கை தான் ஒன்னும் இல்லை. இப்போதைய சூழல்ல யாரோட செயல்பாடு நல்லா இருக்குன்னு பார்த்து போறதா சொல்லி இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும். அதை விட்டு பள்ளிக் கூட பசங்களை மாதிரி சரியான விடையை தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிங்க. நல்லா இருங்கய்யா..

அன்புச்சகோதரி கிட்ட ஏற்கனவே பேசி ஒப்பந்தம் எல்லாம் போட்டாச்சி இல்ல. அதை நேரடியாக அமல்படுத்த வேண்டியது தானே. எதுக்கு பொதுக் குழு ட்ராமா?. ஒருவேளை உங்க கட்சிக்காரங்க திமுக கூட்டணிதான்னு சொல்லி இருந்தா என்ன செஞ்சிருபிங்க? அவங்க தான் ஒரு மாவட்ட செயலாளர் அல்லது மந்திரிக் கூட உங்க கிட்ட வந்து பேசலையே.

ஆனா ஒன்னு மருத்துவரே.. இந்த தேர்தல் முடியறதுக்குள்ள நீங்க அனுபவிக்கப் போறதை எல்லாம் நினைச்சா உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுங்க.. :(

அதிக அளவில் பல்டி அடிச்சது நீங்க தான்னு தினமலர்ல நியூஸ் போட்டிருக்காங்க. அவிங்க கெடக்கறாய்ங்க. குடும்பத்துல இருந்து யார்னா அரசியலுக்கு வந்தா முச்சந்தியில வச்சி சவுக்கால அடிக்க சொன்ன கொள்கை வீரர் நீங்க. இதுக்கெல்லாம் கவலைப் படாதிங்க.

சரி சரி.. போனோமா.. 6 சீட்டு வாங்கினோமா 2 எடம் ஜெயிச்சோமான்னு சட்டு புட்டுன்னு கிளம்பி வாங்க. அங்கயே ரொம்ப நாள் இருந்துடாதிங்க. அன்புமணிக்கு மந்திரிப் பதவி தொடரனும்ல.

தேர்தல் முடிந்த கையோடு உங்கள் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்கும்
ஒரு காங்கிரஸ் தொண்டன்.

Wednesday, March 25, 2009

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை- பொதுத் தேர்தல் 2009


தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

மதச்சார்பின்மை, தேசியவாதம், சமூகநீதி மற்றும் அனைவருக்கும் குறிப்பாக சாமான்ய மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சி என்பதே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தாரக மந்திரமாக உள்ளது.

இந்திய தேசிய கட்சி மட்டுமே அனுபவசாலிகள் மற்றும் இளைஞர்கள், சாதனை மற்றும் லட்சியத்தைக் கொண்டவர்களுக்காக செயலாற்றுகிறது.

ஒற்றுமையான இந்தியாவால் மட்டுமே பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட முடியும்.

இந்தியாவின் பாதுகாப்பும், ஒருமைப்பாடும் மிக முக்கியமானதாகும். இந்தியா உட்பட பல நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு மத மற்றும் அரசியல் எல்லைகள் கிடையாது. அப்பாவி மக்களுக்கு எதிராக மிகக் கொடிய முறையில் வன்முறையை ஏவி விடுவதே பயங்கரவாத சக்திகளின் நோக்கமாகும்.

எனவே பயங்கரவாதத்தை தீவிரமாகவும், அறிவுப்பர்வமாகவும், அச்சம் ஏதுமின்றியும் முறியடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது.

பயங்கரவாதத்தை ஒற்றுமையுடன் இருக்கும் மக்களால் மட்டுமே முறியடிக்க முடியும். மதத்தால் பிரிந்துள்ள மக்களால் முடியடிக்க முடியாது. இந்த கொடூரத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முறியடித்து, சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.

நம் நாட்டு எல்லைக்கு அப்பால் இருந்து ஏவப்படும் பயங்கரவாதத்தை ஒற்றுமையுடன் செயல்பட்டு முறியடித்தல் அவசியம்.

தவிர இந்தியாவிற்கு அறிவுப்பூர்வமான வெளியுறவுக் கொள்கை அவசியம். நமது பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையால், ஒற்றுமையுடன் பலமும் கிடைக்க வேண்டும். பொதுவான நோக்கத்துடன் நம்பிக்கையும் உருவாக வேண்டும்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலிமையான ராஜ்யரீதியிலான பிரசாரத்தை முன்வைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் முதல்முறையாக மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்ததை ஒப்புக் கொண்டது. இது நமது வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

உலக அளவில் பொருளாதார தேக்கநிலை நீடித்த போதிலும், இந்தியாவில் அதன் பாதிப்புகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியடையும் 2ஆவது நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

இதன்மூலம் நாடு நடுநிலையான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது.

பொதுத்துறை மற்றும் தனியார் துறையினருக்கு இடையேயும், கூட்டுறவு மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு இடையேயும் நடுநிலையான பங்கு உள்ளது.

நவீன பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய தொழில்களுக்கு இடையே புதிய உத்வேகம் பிறந்துள்ளது.

அமைப்புரீதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் நடுநிலையான போக்கு.

கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நடுநிலையைக் கடைபிடித்தல்.

கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சாதனைகளில் சாமான்ய மற்றும் ஏழை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடரும்.

நலிவடைந்த பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கல்வி, பொருளாதார வளர்ச்சியை நோக்கிய வேலைவாய்ப்புகள்.

லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றுள்ள தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

பாரத் நிர்மாண் திட்டம் : கிராமப்புறங்களில் வேளாண் சாகுபடி பரப்புகளைப் பராமரித்தல், சாலை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.

விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்தல்.

சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவி அளித்தல்.

சர்வ சிக்சா அபியான் எனப்படும் அனைவருக்கு கல்வித் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் திறம்பட செயல்படுத்துதல்.

கடந்த 5 ஆண்டுகால பொருளாதார சாதனைகள் தொடர வழிவகை செய்தல்.

ஜவஹர்லால் நேரு தேசிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம்.

அனைத்து மாநிலங்களுக்கும் போதிய நிதி ஆதாரம் அளித்தல்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி என்ன உறுதி அளித்ததோ, அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் வேகமான அதிக வளர்ச்சியை நோக்கி பயணிக்க காங்கிரஸ் உறுதி.

கடந்த 2008-09 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு அளித்தல்.

உயரிய பாதுகாப்புத் துறையை உருவாக்குவதுடன், பாதுகாப்புப் படையினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் போதிய நல உதவிகளுக்கு நடவடிக்கை.

காவல்துறை சீர்திருத்தத்தை விரைவுபடுத்துதல்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும்.

அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளிக்கப்படும்.

சிறப்புப் பிரிவின் கீழ் வருவோருக்கு ஒருங்கிணைந்த சமூகப்பாதுகாப்பு அளிக்கப்படும்.

அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தரமான கல்வி அளித்தல்.

தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்படும்.

விவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மேம்பாட்டிற்கான திட்டங்கள் கொண்டுவரப்படும்.

கூட்டுறவு அமைப்புகளை ஜனநாயக அடிப்படையில் மாற்றியமைத்தல்.

சமுதாயத்தில் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும்.

நெசவாளர்கள், மீனவர்கள், மீனவப் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கொண்டுவரப்படும்.

தோல் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்களுக்கும் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

மதவாதத்தை அனைத்துப் பிரிவுகளிலும் எதிர்க்கவும், ஜாதியக் கொடுமைகளை உறுதியுடன் எதிர்க்கவும் காங்கிரஸ் உத்தரவாதம்.

குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளின் மேம்பாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி ஆதாரம் அளித்து வலுப்படுத்த உறுதி.

3 ஆண்டுகளுக்கும் அனைத்துக் கிராமங்களும் பிராட்பேண்ட் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படும்.

சிறு தொழில்முனைவோரில் இருந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

மிகக் குறைந்த பணவீக்கத்தை கடைபிடிப்பதுடன் அதிக வளர்ச்சி விகிதத்தை கடைபிடிக்க முடிவு.

இந்தியாவின் இயற்கைவள சுற்றுச்சூழலை பாதுகாத்த, அவற்றை புத்துணர்வு பெறச் செய்தல்.

அறிவியல் - தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் புத்துணர்வு அடையச் செய்தல்.

நீதிமன்றத்தில் வழக்குகள் தாமதமாவதைத் தடுக்க நீதித்துறை சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

சுயேச்சையான, உள்நாட்டிற்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கை தொடரும்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி எடுக்கும்.

எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர, நிலையான நீடித்த, ஒருமைப்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை ஆதரியுங்கள்

நன்றி : வெப்துனியா.

Tuesday, March 17, 2009

வருண்காந்தி - மோடி நெ.2 ?

பிராணிகள் ஆர்வலர் என்ற வகையில் மேனகா காந்தி மீதும் எப்போதுமே பெரிய மரியாதை உண்டு. என் அசைவ உணவு பழக்கத்தை விட்டதற்கு அவரும் ஒரு காரணம். அவர் காங்கிரசை எதிர்த்தாலும் கூட குறை சொல்லும் அளவுக்கு எந்த முறைகேடுகளோ தரம் தாழ்ந்த அரசியலோ செய்ததில்லை என்றே நினைக்கிறேன். பிஜேபியில் இருக்கும் சில மரியாதைக்குரியவ்ர்களில் ஒருவர். ஆனால் அவர் மகன் வருண்காந்திக்கு திடீர் என்று இந்துத்துவ அரசியல்வாதி ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போலும். மோடியைப் பார்த்து கெட்டுப் போய்விட்டார் போல.

சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

வருண் உதிர்த்த முத்துக்கள்..
அவர்கள் (முஸ்லிம்கள்) கரிமுல்லா, நசருல்லா என பயமுறுத்தும் பெயர்களை வைத்திருக்கிறார்கள். அவர்களை இரவில் பார்க்க பயமாக இருக்கிறது. எனக்கு ஒரு உறவுக்காரப் பெண் இருக்கிறார். அனைத்து வேட்பாளர்களும் இருந்த ஒரு ஆல்பத்தை பார்த்தாள். அவள் ஏழு வயதாக இருக்கும் போது சமாஜ்வாதி வேட்பாளர் படத்தைக் காட்டி அண்ணா , உங்கள் தொகுதியிலிருந்து பின்லேடன் போட்டியிட்டது எனக்கு தெரியாதுஎன்றாள்....

முஸ்லிம் வேட்பாளார்கள் பின்லேடன் போல் இருக்கிரார்களாம். இப்படி அந்தப் பெண் சொன்னாரா அல்லது இவரே கதை அளக்கிறாரா தெரியவில்லை.

இது ”கை” இல்லை.. இது தாமரையின் சக்தி. இது முஸ்லிம்களின் தலையை வெட்டும். ஜெய் ஸ்ரீராம். யாராவது இந்துக்களை நோக்கி விரல்களை உயர்த்தினாலோ அல்லது இந்துக்கள் பலவீனமானவர்கள் அல்லது தலைவர்கள் இல்லாதவர்கள் என்று யாராவது நினைத்தாலோ, இந்தத் தலைவர்கள் வோட்டுக்காக அவர்களின் கால்களை நக்குவதாக நினைத்தாலோ நான் கீதை மீது ஆணையாக சொல்கிறேன். அவர்கள் கைகளை வெட்டிவிடுவேன்.

என்ன ஒரு ஆதிக்க மனோபாவம்.. என்ன ஒரு திமிரான பேச்சு.. இது தான் பிரிவினையைத் தூண்டும் செயல். தேர்தல் வந்தாலே பிஜேபியினருக்கு சிறுபான்மை மக்களை மிரட்டுவதே தொழிலாகிவிட்டது. இவ்வளவு நாளாக பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். குஜராத்தில் நடபெற்ற மத அழிப்பு முயற்சிக்கு பிறகு வருண்காந்தி போன்றவர்கள் நேரடியாகவே மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

Sunday, March 15, 2009

Think India.. Vote for UPA..

Friday, March 13, 2009

குஜராத் காங்கிரஸ் வேட்பாளர்கள்

குஜராத்
Sl.No.No & name of ConstituencySelected Candidate
11 KACHCHH (SC)DANICHA VALJIBHAI
24 MEHSANAJIVBHAI AMBALAL PATEL
35 SABARKANTHAMADHUSUDHAN MISTRY
411 PORBANDARVITTALBHAI RADADIA
516 ANANDBHARAT BHAI M. SOLANKI
617 KHEDADINSHA PATEL
718 PANCHMAHALSHANKARSINH VAGHELA
819 DAHOD (ST)SMT. PRABHA TAVIYAD
920 VADODHARASATYAJIT GAEKWAD
1021 CHHOTA UDAIPUR (ST)NARANBHAI J. RATHWA
1123 BARDOLI (ST)TUSHAR A CHAUDHARY
1226 VALSAD (ST)KISHANBHAI V PATEL


பொறுப்பாளர் 
திரு. ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ்

சட்டிஷ்கர் காங்கிரஸ் வேட்பாளர்கள்

LOK SABHA ELECTIONS 2009 - CHHATTISGARH

Press Release Monday, 9th Mar 2009

The candidates selected by the CEC for the ensuing Elections to the Lok Sabha from Chhattisgarh.

Sl.No.No & name of ConstituencySelected Candidate
11 SARGUJA (ST)BHANU PRATAP SINGH
23 JANGIR-CHAMPA (SC)DR. SHIV KUMAR DEHARIYA
34 KORBADR. CHARAN DAS MAHANT
46 RAJNANDGAONDEWRAT SINGH
510 BASTAR (ST)SHANKAR SINGH SODI
611 KANKER (ST)SMT. PHULO DEVI NETAM

OSCAR FERNANDES

Incharge, CEC

காங்கிரஸ் - திருணாமுல் காங்கிரஸ் தொகுதி பங்கீடு

                                                       

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இணைத்து பொதுத் தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 14 மற்றும் திருணாமுல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டி இடுகின்றன. இரண்டு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப் படுவார்கள்.

மேற்கு வங்கத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஏப்ரல் 30 - 14 தொகுதிகள்
மே 7 - 17 தொகுதிகள்
மே 13 - 11 தொகுதிகள்