காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Monday, February 23, 2009

இதைப் படிங்க மொதல்ல


ராஜபக்‌ஷே ஒரு ஜனநாயகவாதியே இல்லை. மனிதத் தன்மை துளியும் இல்லாமல் ஈழத் தமிழர் பிரச்சனையை கையாள்கிறார்.
- கார்த்தி சிதம்பரம்

( காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் மனநிலையும் இது தான்)



ராஜபக்‌ஷே சிறந்தவர், வல்லவர், நல்லவர் என்றும் அவருடைய நடவடிக்கைகள் சரியானவை என்றும் நான் பேசி இருப்பதாக யாராவது நிரூபித்தால் எனது பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.
- ஹசன் அலி , MLA , காங்கிரஸ் கட்சி
(இதற்கு முன்பு ஒருவேளை அப்படி பேசி இருந்தாலும் இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறாது )

Monday, December 29, 2008

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் - தங்கபாலு

சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பல விஷயங்களை பற்றி பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கேவி. தங்கபாலு, இலங்கை விவகாரம் பற்றி பேசிய போது,

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். வடக்கு, கிழக்கு மாநிலங்கள் உருவாகி, அங்கு தமிழன் முதல்வராக வேண்டும். எல்லா எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக்கு பிரணாப் முகர்ஜி செல்வார். அங்குள்ள பிரச்னையை தீர்த்து வைத்து, வெற்றியோடு அவர் தாயகம் திரும்புவார்.” என் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி என்பதை சில விஷமிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர் ஆதரவு வேறு விடுதலைப் புலிகள் எதிர்ப்பு வேறு என்பதை மக்கள் புரிந்துக் கொண்டாலும் சில விஷமிகள் தான் திசை திருப்பும் விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள்.