காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Friday, October 23, 2009

காங்கிரஸ் வெற்றி தொடர்கிறது..

இந்த மாதம் 13ஆம் தேதி ( 13.10.2009 ) நடைபெற்ற மஹாராஷ்ட்ரா, ஹரியானா மற்றும் அருணாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று ( 22.10.2009) நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மஹாராஷ்ட்ராவில் தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.

மகாராஷ்ட்ரா காங் - 82 , தேசியவாத காங் - 62 = 144

அருணாச்சல் பிரதேஷ் : காங்கிரஸ் - 40 / 60

ஹரியானா : காங் - 40 / 90

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் தனிப் பெரும் கட்சியாக வென்றுள்ளது.. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. பிரதமர் மன்மோகன் சிங் நல்லாட்சியில் அன்னை சோனியாகாந்தி மற்றும் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் வெற்றி தொடர்கிறது... காங்கிரஸில் இருப்பதே பெருமை.. காங்கிரஸை வளர்ப்பதே கடமை..ஜெய் ஹோ..

Friday, October 9, 2009

ராஜபாளையம் தேர்தல் : காங்கிரஸ் பெரும் வெற்றி

2009 அக்டோபர் 7ஆம் தேதி நடைப்பெற்ற ராஜபாளையம் நகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியிடப் பட்டன. இதில் 19 வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

முடிவுகள் விவரம்
காங்கிரஸ் : 19
திமுக : 7
அதிமுக கூட்டணி : 10
மதிமுக : 3
சுயேட்சைகள் : 3

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. ஜெய் ஹோ..!

Sunday, September 6, 2009

தலைவர் ராகுல்காந்தி தமிழக சுற்றுப் பயண விவரம்

மிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பணிக்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகிறார். செப்டம்பர் 8,9,10 ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்களை சந்திக்கிறார். சுற்றுப் பயண விவரம்.

செப்டம்பர் 8, 2009
  • காலை 10.30 நாகர்கோவிலில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11.30க்கு திருநெல்வேலியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 1 மணிக்கு விருதுநகரில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 3.30 மணிக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு இளைஞர் SC/ST மாநாட்டில் பங்கேற்கிறார்.

செப்டம்பர் 9, 2009
  • காலை 9.30 மணிக்கு தஞ்சாவூரில் இளம் விவசாயிகளுடன் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு விழுப்புரத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பகல் 12 மணிக்கு வேலூர் CMC கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களுடன் சந்திப்பு
  • பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணாப் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 6.30 மணிக்கு சென்னையில் பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் நிறுவனர்களுடன் சந்திப்பு.
செப்டம்பர் 10, 2009
  • காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11 மணிக்கு கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பு.
  • பகல் 12.30க்கு சேலத்தில் தொழிலாளர்களுடன் சந்திப்பு.
  • பகல் 1.30 மணிக்கு சேலத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • மாலை 3 மணிக்கு கோவையில் இளைஞர்களுடன் சந்திப்பு
  • மாலை 4 மணிக்கு கோவை காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 5 மணிக்கு கோவை இளம் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு.


பத்திரிக்கை செய்தி:
"கிராமங்களில் இளைஞர்களை தேடி...'கட்சியை வளர்க்க ராகுல் வியூகம் : மதுரைக்கு ராகுல் வரும் நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுவிட் டது. ஆனால் இத்தகவல் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சில நாட்களுக்கு முன் வரை தெரியாது. ஒரு மாதத்திற்கு முன்பே, டில்லியில் இருந்து வந்து சில இளைஞர் காங்., நிர்வாகிகள் மதுரை லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.உள்ளூர் காங்., தலைவர் களை இவர்கள் தொடர்பு கொள்ள வில்லை. அவர்களின் வாகனங் களை பயன்படுத் தவில்லை. ஒரு டீ கூட வாங்கிக் குடிக்கவில்லை. தனித்தனியே இரு சக்கர வாகனங்களில் பல்வேறு கிராமங்களுக்கு சென்ற இவர்கள், எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களை சந்தித் தனர். காங்.,கில் இணைந்து பணியாற்ற விரும்புவோரை தேர்வு செய்து, அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் இ-மெயில் மூலம் தினமும் ராகுலுக்குஅனுப்பினர்.

அவற்றை அன்றன்றைக்கு பார்த்த ராகுல், டில்லியில் இருந்தபடியே சில யோசனைகளை தெரிவித்தார். இப்படியே இவர்கள் இரண்டாயிரத்து 500 இளைஞர்களை தேர்வு செய்தனர். மீதி இரண்டாயிரத்து 500 பேரை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் உள்ளூர் காங்., நிர்வாகிகளுக்கு தரப்பட்டது.இப்படி, ரொம்ப கவனமாக பல நாட்கள் திட்டமிட்டு ராகுல் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது. ஒத்த கருத்துள்ள இளைஞர்களை சேர்த்து, எதிர்காலத்தில் காங்கிரசை வலுவான கட்சியாக்கும் யோசனையில் இந்நிகழ்ச்சிக்கு ராகுல் ஏற்பாடு செய்துள்ளார். சொன்னதை செய்த ராகுல்: கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சிதம்பரத்தை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்தார். காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ""தமிழகம் எனக்கு பிடிக்கும். லோக்சபா தேர்த லுக்குப் பிறகு அடிக்கடி தமிழகம் வருவேன். நிறைய இளைஞர் களை சந்தித்து கட்சியை வலுப்படுத்துவேன்,'' என்றார். சொன்னது போலவே தற்போது தமிழகத்தில் தீவிர சுற்றுப் பயணத்தை துவக்கி இளைஞர் களை சந்திக்கிறார் ராகுல்.

நன்றி : தினமலர்

Thursday, May 21, 2009

திமுக வெளியிலிருந்து ஆதரவு

அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திமுக மத்திய அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளது. திமுக விரும்பிய எண்ணிக்கையிலும் விரும்பிய துறைகளான ரயில்வே மற்றும் சுகாதாரத்துறையை பெருவதிலும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

திமுக 5 கேபினெட் அமைச்சர் பொறுப்பும் 4 இணை அமைச்சர் பதவியும் கேட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் 7 வரை கொடுக்க சம்மத்தித்ததாக அதன் செய்தித் தொடர்பாளார் அறிவித்துள்ளார்.

Wednesday, May 20, 2009

தமிழக டகால்ட்டி கட்சிகள் - 1

இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. அதில் முக்கிய்மானது தமிழகத்தில் பிலிம் காட்டிக் கொண்டிருந்தவர்களின் வண்டவாளம் தெரிய வந்ததே. காங்+திமுக கூட்டணி 12 இடங்களில் தோற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசங்கள் மிகவும் குறைவாகவே பெற்று தோற்றிருக்கிறார்கள். 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இருந்து 6 சதம் வரை குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் அதிக பட்சமாக 9 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம். ஈரோடு , திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்றப் பேரவையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டும் குறைவான வித்தியாசத்திலேயே காங்கிரஸ் கூட்டணி தோல்வி. இத்தனைக்கும் இந்த பகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கூட்டணி. விடுதல சிறுத்தைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்ற 12 இடங்களில் 2, 3 தொகுதிகள் தவிர மற்ற அனைத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகள் தான். விசியால் எந்த ஆதாயமும் இல்லை. எனவே இந்த குறைந்த வாக்கு வித்தியாச தோல்விகளை சரி செய்து விட முடியும்.

ஆனால் அதிமுக கூட்டணி தோற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள். முதலில் பாமக. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தங்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாக ஊரை ஏமாற்றுபவர்கள்.

தருமபுரி,
பாமக வாங்கிய வாக்குகள் - 29.54 % (அதிமுக+2 கம்யூனிஸ்டுகள்+மதிமுக)
திமுக வாங்கிய ஓட்டுகள் - 47 %. ( திமுக+காங்கிரஸ்+விசி)
பாமக தோல்வி வித்தியாசம் - 17% க்கு மேல்.

தருமபுரியின் அரூர் தொகுதியில் கணிசமான கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போதயை சட்ட மன்ற உறுப்பினர் கூட கம்யூனிஸ்ட் தான். இந்த 29 சதவீதத்தில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் போக பாமகவின் வாக்குகள் எவ்வளவு இருக்க முடியும்?. மிக சொற்பமாகத் தானே. இன்னும் தருமபுரியை பாமக கோட்டை என ஏமாற்ற முடியாதே. :)

அரக்கோணம்
பாமக - 26.32% - இதிலும் 4 கூட்டணி கட்சிகள் வாக்குகள் போக பாமகவின் வாக்குகள் சொற்பமாகவே இருக்கு.
திமுக - 36%
பாமக தோல்வி வித்தியாசம் - 9%க்கு மேல்.

ஸ்ரீபெரும்புதூரில் மட்டுமே குறைவான வாக்குகள் வித்தியாசம் : 3.16%

திருவண்ணாமலை
பாமக - 34%
திமுக - 52%
தோல்வி வித்தியாசம் - 18%

கள்ளக்குறிச்சி
பாமக - 34%
திமுக - 48 %
தோல்வி வித்தியாசம் - 14%

சிதம்பரம்
பாமக - 29%
விசி - 38%
தோல்வி வித்தியாசம் - 9%

புதுச்சேரி
பாமக - 36%
காங்கிரஸ் -52%
தோல்வி - 16%

பாமக வாங்கிய வாக்குகளில் , 4 கூட்டணிக் கட்சிகள் வாக்குகள் போக பாமக எவ்வளவு?. இவ்வளவு நாளா எப்படி எல்லாம் மருத்துவர் ஏமாத்தி இருக்கிறார் பாருங்க. அவர் பலம் என்னன்னே தெரியாம ஒவ்வொரு முறை அவர் தாவும் போதும் இஷ்டத்துக்கு எண்ணிக்கையை சேர்த்துக் கொடுத்திருக்காங்க. பாமகவிற்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது. ( யார்னா ஒரு வங்கி ஆரம்பிச்சிக் குடுங்கய்யா) . இவர்கள் வாங்கியதும் பெருமளவில் அதிமுகவின் வாக்குகள் மட்டுமே. இனியாவது மருத்துவர் தன் பலம் அறிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.

Sunday, May 17, 2009

காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி - ஈழப் பிரச்சனைக் காரணமில்லை

தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர் இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டார்கள். அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தோல்விக்கும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இணையத்தில் எழுதும் சில டைம்பாஸ் அரசியல் நிபுணர்கள் , காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்குக் காரணம் ஈழத் தமிழர் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் காரணம் காங்கிரஸ் என்ற பித்தலாட்ட பிரச்சாரமும் அதனை செய்த பாரதிராஜா, சீமான் போன்ற வேஷதாரிகளும் தான் என அளந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அறிவைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் தான் இந்த பதிவைப் போட வேண்டியதாகிவிட்டது.

தங்கபாலு 50,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி.
சேலம் மாநகரம் திமுகவின் கோட்டை. ஆனால் மொத்த மாவட்டமும் பார்த்தால் அதிமுக செல்வாக்கு அதிகம். சென்ற முறை வெற்றிக்குக் காரணம் பாமக, மதிமுக, 2 கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் வாக்குகளும் கிடைத்ததால் தங்கபாலு வெற்றி பெற்றார். இப்போது இவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணி. நிச்சயம் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து 50000 வாக்குகளுக்கு மேல் வாக்கு வங்கி இருக்கு. எனவே ஈழப் பிரச்சனைக்கும் தங்கபாலு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஈரோட்டில் இளங்கோவன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
இதற்கு முதல் காரணம் இவர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தான். திமுக மற்றும் காங்கிரசில் இருக்கும் ஒரு பகுதி கவுண்டர்கள் கூட மதிமுகவின் கணேச மூர்த்திக்கு வாக்களித்தார்கள். எல்லாம் சாதிப் பாசம். கூடவே கொமுபே வேட்பாளர் வாங்கிய 1 லட்சம் ஓட்டுகள். இந்த ஓட்டுகளில் பெரும்பாலானவை காங்கிரஸ்+திமுக கூட்டணிக்கு வர வேண்டியவை. காரணம் கடைசியில். மிக முக்கியமாக மின் தடை. ஈரோடு மாவட்டம் முழுதும் விசைத்தறிகள் தான் மிகப் பெரிய தொழில். மின் தடையால் வேலை இழந்தவர்கள் மிக மிக அதிகம். அவர்களின் கோபம் திமுக கூட்டணிக்கு எதிராக திரும்பியது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் இளங்கோவன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

திருப்பூரில் கார்வேந்தன் 90000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் இளங்கோவனுக்கு பாதகமாக அமைந்த அதே விஷயங்கள் தான். மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 95000 வாக்குகள். பெரிய வாக்கு வித்தியாசம் எற்படக் காரணம், கம்யூனிஸ்டுகள் ஓரளவு செல்வாக்குள்ள தொகுதி தான் திருப்பூர். எனவே அதிமுகவிற்கு அது பெரிய பலம். எனவே ஈழப் பிரச்சனைக்கும் கார்வேந்தன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கோவை பிரபு 40,000 வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 1,28,000 வாக்குகள் தான் தோல்விக்க்குக் காரணம். மின்தடையால் தொழிற்சாலைகளில் 3 ஷிப்டுகள் 2 ஷிப்டுகளாக குறைக்கப் பட்டது. இதனால் வேலை இழப்பும் வருமான இழப்பும் மிகப் பெரிய அளவில் இருக்கு. லக்ஷ்மி மில்ஸ் மாதிரி மிகப் பெரிய குழுமத்தில் சில யூனிட்கள் கூட மூடப் பட்டு ஆயிரக் கணக்கானவர்கள் வேலை இழந்தார்கள். இதனால் திமுகவினரே ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தார்கள். அவர்களின் வாக்குகள் கொமுபேக்கு போனது. இது என் நேரடியாக பார்த்த அனுபவம். மேலும் கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணிக்கு பலம். வெற்றி பெற்றவரும் கம்யூனிஸ்டு தான். அதோடு சேர்த்து கோவையில் பலமான சக்திகளாக இருக்கும் காங்கிரசின் ஒரு பிரிவினைரை பிரபு கண்டுகொள்ளவே இல்லை. அவர் இஷ்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்தல் சமயத்தில் மாற்றி அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். இதை செய்யாமல் இருந்தாலே வென்றிருப்பார். எனவே ஈழப் பிரச்சனைக்கும் பிரபு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மணிஷங்கர் ஐயர் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மணிசங்கர் ஐயர் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டிருப்பதாக சொன்னாலும் கூட பெரும்பாலும் தொகுதியில் இல்லாமல் டில்லியிலேயே இருந்திருக்கிறார். அந்த அதிருப்தி மற்றும் ஜவஹிருல்லா பிரித்த முஸ்லிம் ஓட்டுகள் மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் 4 கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து 30000 வாக்குகளாவது இருக்கும். ஜவாஹிருல்லா 20000+ அதிமுக கூட்டணியின் 30000 வாக்குகள் சேர்ந்தாலே 50000 வாக்குகளுக்கு மேல் அதிமுகவிற்கு கிடைக்கிறது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் மணிசங்கரின் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.


கொங்கு மண்டலத்தில் கொமுபே வாங்கிய ஓட்டுகள் ஏன் காங்+திமுக கூட்டணியை பாதித்திருக்கிறது என்று சொல்கிறேன் என்றால், அவர்கள் பலமில்லாத மற்ற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேமுதிக பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை. ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, கரூர் ஆகியத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தான் வென்றிருக்கிறது. எனவே கொமுபே ஓட்டுகளுக்கும் அதிமுக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. ஆகவே கொமுபே பிரித்த ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டியது தான். பொதுவாக கவுண்டர்கள் ஓட்டுகள் அதிமுகவிற்கு தான் என்ற கருத்து உண்டு. ஆனால் அது பொய் என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கூட்டணிகளின் தயவால் தான் இந்தப் பகுதிகளின் அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பகுதிகளுக்காக அடுத்து வரும் தேர்தல்களில் கொமுபே க்கு டிமாண்ட் அதிகரிக்கலாம். ஹ்ம்ம்.. அடுத்த பாமக ரெடி . :(

சிலர் புலம்புவது, காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. இதைக் கேட்டால் சிரிப்பு தன் வருகிறது. அதிமுகவிடம் காசு இல்லையா? பாமகவிடம் காசு இல்லையா? அவர்கள் எல்லாம் காசே கொடுக்கவில்லையா? காசு தான் ஓட்டு வாங்கும் என்றால் கரூரில் கேசி.பழனிச்சாமி தான் வென்றிருப்பார். அவர் செய்யாத செலவா?.ஆனால் தம்பிதுரை தான் ஜெயிச்சார். காரணம், அங்கும் மின் தடை மிகப் பெரிய பிரச்சனை. கரூரும் தொழில்வளம் மிக்க மாவட்டம். மின் தடையால் வேலை இழந்தவர்கள் அங்கும் அதிகம். எனவே காங்கிரஸ் மற்றும் திமுகவில் சில வேட்பாளர்களின் தோல்விக்கும் ஈழப் பிரச்சனைக்கும் பாரதிராஜா, சீமான் போன்ற நச்சுப் பாம்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சினிமாக் காரர்களின் முகத்தில் மக்கள் மலத்தைப் பூசி இருக்கிறார்கள் என்பதே நிஜம். இவர்கள் பரப்பிய பொய்யை மக்கள் நம்பி இருந்தால் அதிமுக போட்டியிட்ட 23 தொகுதிகளின் வெறும் 9 தொகுதிகள் தான் ஜெயித்திருக்குமா? காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 16 . வென்றவை 9 தொகுதிகள். அதிமுக போட்டியிட்டது 23 இடங்கள். வென்றவை 9 மட்டுமே. மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஆகவே இணையத்து டைம்பாஸ் அரசியல் நிபுணர்களே , குய்யோ முறையோன்னு கத்தாம எதார்த்தத்தை கொஞ்சம் யோசிங்க. சினிமாக் காரனுங்க பின்னாடி சுத்தாதிங்க. அவனுங்க கோடி கோடியா சம்பாதிக்கிறானுங்க. கொஞ்ச நாள் சீன் போட்டு சுத்தறதால அவனுங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்கு அப்படியா? சொல்லுங்க.

ஈழப் பிரச்சனை தான் முக்கியம்னு மக்கள் நினைச்சிருந்தா, அதை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்த கம்யூனிஸ்டுகள் ஏன் தோற்றார்கள்? ஈழத்து நாயகனாக நினைத்து உதார் விட்டு திரிஞ்ச வைகோ ஏன் தோற்றார்? ஈழம் தான் உயிர் மூச்சென்று நாடகம் போட்ட பச்சோந்தி ராமதாஸ் கட்சி ஏன் தோற்றது? ஈழம் வாங்கித் தருவேன் என்று தேர்தலுக்காக நாக்கைத் திருப்பிய “ ராஜபக்‌ஷேவின் பெண் குரல்” ஜெயலலிதா கட்சிக்கு ஏன் இவ்வளவுப் பெரிய தோல்வி?.

தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள்...!

பாமகவின் ராஜதந்திரம் அடுத்த பதிவு...

Monday, May 4, 2009

உங்கள் ஓட்டு ”இலங்கைத் தமிழர்” நலன் காக்கும் புரட்சித் தலைவிக்கே.

தனி ஈழம் அமைய வேண்டுமானால் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கே ஓட்டுப் போடுங்கன்னு ”உணர்வாளர்கள்” எல்லாம் கூவிக் கூவி ஓட்டுக் கேக்கறாங்க. ஏனுங்கணா இப்டி கூவறிங்கன்னு கேட்டா, அவங்க தான் தனி ஈழம் பெற்றுத் தருவாங்களாம். பாவமா இருக்கு இவங்களைப் பார்த்தால்.

ஜெயலலிதாவோட குரலில் அலைபேசிகள் வழியாகவும் பண்பலை ரேடியோக்கள் வழியாகவும் நிமிடத்துக்கு ஒரு முறை ஓட்டுக் கேட்கும் விளம்பரம் வருகிறது. அதில் “இலங்கைத் தமிழர் நலன் காக்க” என்று தான் சொல்கிறார். ஈழத் தமிழர் நலன் என்று சொல்லவில்லை. பேச்சுக்குக் கூட ஈழம் என்ற வார்த்தையை உபயோகிக்க மறுப்பவர் ஈழம் பெற்றுத் தருவாராம். தேர்தல் முடியட்டும். அப்புறம் பாருங்க அம்மாவோட அருள் வாக்குகள் எப்டி இருக்குன்னு. போட்ட கையெழுத்தையே இல்லை என்று சொன்னவர் தன் பெயரில் வந்த காசோலையை பணமாக்கிவிட்டு அனுப்பியவர் யார் என்று தெரியாது என்று சொன்னவர் ஈழம் அமைந்தால் இலங்கையின் ஒருமைப் பாடு பாதிக்கும் என்று மீண்டும் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?. என்னவோ போங்க.

Thursday, April 30, 2009

ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா...



In an exclusively interview with TIMES NOW, BJP president Rajnath Singh ducked the question of Narendra Modi being as the future Prime Minister। BJP leaders Arun Jaitley, Arun Shourie as well as former party president Venkaiya Naidu has vouched for Modi for the PM's post. However, when questioned by TIMES NOW correspondent in Lucknow, Rajnath Singh avoided the questioned and walked off.

--http://www.timesnow.tv/videoshow/4315016.cms

Monday, April 13, 2009

நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான் - திருமா

சிதம்பரம்: நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாது.

இடையில் காங்கிரசுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அரசியல் களத்தை தொடங்கிய நான் அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யவில்லை. நான் நன்றி மறந்தவன் இல்லை.

அங்கு வழியில் சென்ற போராட்டக்காரர்களுக்கும், தோழர்களுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பில் முடிவுற்றது. அது திட்டமிட்ட செயல் அல்ல. சில தீய நிகழ்வுகள் தூக்கிப் பிடிக்கப்பட்டன. ஊடகங்கள் அதை பெரிதாக்கிவிட்டன.

நான் பழிவாங்கும் நோக்கம் உடையவன் அல்ல. இதுகுறித்து நாங்கள் தவறு செய்யவில்லை என சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சனம், தங்கபாலு, வாசன், சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவேன்...

தற்போது இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கட்சியான திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். மிகப்பெரிய கூட்டணியில் போட்டியிடுவது இதுதான் முதன்முறை.

அதிமுக அணியில் நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் நான். உங்களுடன் தான் இருப்பேன் என கருணாநிதியிடம் கூறினேன். ஈழத்தமிழர் பிரச்னைக்காக யார் போராடினாலும் அவர்களுடன் நிற்பேன். அது வேறு. அரசியல் வேறு.

திருமாவளவன் திசை மாறிப் போய்விடுவான் என எதிர்பார்த்தார்கள். திமுக அணி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம் என்றேன். ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

எங்களுக்கு தேர்தல் அனுபவம் கிடையாது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் களப்பணியாற்ற வேண்டும் என்றார் திருமாவளவன்.


நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

Sunday, April 12, 2009

கலகக்காரர்களை வெளியேற்றுங்கள்

தேர்தல் வந்துவிட்டாலே கட்சியில் கலகக்காரர்கள் முளைத்துவிடுகிறார்கள். உட்கட்சித் தேர்தலாகட்டும் உள்ளாட்சி, சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தலாகட்டும். கட்சிக்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போடாதவர்களெல்லாம் டில்லிக்கு பைபாஸ் ரூட்டில் சென்றுவிடுகிறார்கள். பதவிக் கேட்கும் முன் கட்சிக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் தாங்கள் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. பொதுக்கூட்டம், போராட்டம் என்று எதுவும் செய்து கட்சியை வளர்க்க முன்வருவதில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட மட்டும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லை எனில் கலகம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இவர்களை எலலாம் கட்சியை விட்டே நீக்க வேண்டும்.

இந்தத் தேர்தலிலும் சிலர் அந்த வேலைகளை செய்வதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லாம் கட்சிக்காக இதுவரை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். கட்சியின் ”மேலிடத்தில் மட்டும்” தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு வார்டு மெம்பர் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சீட் வாங்கிடுவாங்க. குறிப்பிட்ட சிலருக்கே எல்லா தேர்தல்களிலும் வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தால் கட்சிக்காக பாடுபடும் மற்றவர்கள் எப்படி மேலும் கட்சி வளர்க்க பாடுபடுவார்கள்.

  • மாவட்டத் தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது. அல்லது அவர்கள் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் வாய்ப்பு கேட்க வேண்டும். அப்போது தான் மக்கள் செல்வாக்கு பெற்ற மற்றொருவருக்கும் பொறுப்பு கிடைக்கும்.
  • ஏற்கனவே ஏதேனும் ஒரு தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருப்பவருக்கு அந்த பதவிக் காலம் முடியும் வரை வேறுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • உள்ளாட்சி அமைபுகளிலோ, சட்ட மன்றத்திலோ தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • தற்போது உள்ளாட்சி அமைப்புகளிலோ சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இருப்பவர்களின் தொகுதியில் அவர்களுக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு அடுத்த வாய்ப்பை வழங்க வேண்டும்.
  • அதில் தேறாதவர்களுக்கு அடுத்து வாய்ப்புகள் வழங்கக் கூடாது.
  • ஒரு முறை தோற்பவருக்கு குறைந்த பட்சம் அடுத்த ஒரு தேர்தலிலாவது போடியிட அனுமதிக்கக் கூடாது. வாக்கு வித்தியாசம் 25 சதவீதத்திற்குள் இருந்தால் மட்டும் அடுத்த தேர்தலில் வாய்ப்பளிக்கலாம்.
  • இப்போது தமிழகத்தில் இருக்கும் நம் கட்சியின் 10 எம்பிக்கள் 35 எம்எல்ஏக்கள் பெயர் எத்தனை கட்சித் தொண்டனுக்கு முழுதாகத் தெரியும்?. 10 சதவீதம் தொண்டனுக்குக் கூடத் தெரியாது. காரணம், கட்சியின் செயல்பாடு அந்த அளவுக்குத் தான் இருக்கிறது. நேற்று முளைத்த கட்சிகள் கூட பொதுக் கூட்டம், மாநாடு, பேரணிகள் என்று எப்போதும் தொண்டர்களை உற்சாமகாக வைத்திருக்கின்றன.
  • நூற்றாண்டு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு, இருக்கும் தொண்டர்களை எல்லாம் திராவிடக் கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.
  • உடனடித் தேவை உட்கட்சித் தேர்தல். தொண்டர்களிடம் செல்வாக்கு இருப்பவர்களே கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும்.
  • இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும். மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் பணி சிறப்பாகவே இருக்கின்றன. அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
  • தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம் அந்த தொகுதியில் கட்சியில் மாணவர், இளைஞர் அணி, சேவாதளம் நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார , மாவட்ட நிர்வாகிகளின் பெயர்களைக் கேட்க வேண்டும். அவர்களை எல்லாம் எப்போதாவது சந்தித்திருக்கிறார்களா என்பதை எல்லாம் ஆராய வேண்டும். அதன் பின்பே அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
இந்த பாராளுமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கவே கூடாது. தற்போது எம்பியாக இருப்பவர்களிலும் தொகுதியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். இவைகள் எல்லாம் விரைவில் ராகுல்காந்திக்கு அனுப்பி வைக்கப் படும்.

Tuesday, March 31, 2009

பாவம் அத்வாணியா? இந்தியாவா?

NDTVயின் walk the Talk நிகழ்ச்சியில் சேகர் குப்தாவுடன் அத்வாணி பேசியது.
கடைசி 2 கேள்வி - பதில்கள் தான் முக்கியமானது.

Advani defends Kandahar case handling
Shekhar Gupta (Walk The Talk)
Saturday, March 22, 2008, (New Delhi)

Nine years after the Kandahar hijack drama, BJP leader LK Advani has said that he had no idea that the then Foreign Minister Jaswant Singh was accompanying the terrorists on the flight to Kandahar.

The NDA government had to release militants in exchange of the Indians held hostage on board the IC 814 airline.

Advani spoke to Editor-in-Chief of The Indian Express Shekhar Gupta on NDTV's Walk The Talk programme.

Advani said the decision was taken in consultation with Vajpayee.

Shekhar Gupta: But going on plane was his (Jaswant Singh) own decision?
Advani: I wouldn't say it I would know that. He must have consulted Vajpayeeji, but it was not an issue at all and this issue was also raised by many others many months later.

Shekhar Gupta: But in this country, would an External Affairs Minister himself escort militants?
Advani: He is not escorting, he is trying to bring back the passengers. But I don't think that I am answerable for that, if the security committee on security had taken a decision.

Shekhar Gupta: You were not consulted on this?
Advani: I don't know about it.

Shekhar Gupta: So when did you get to know he went on the plane?
Advani: I came to know when he was going.

உள்துறை அமைச்சராக இருந்த அத்வாணிக்கு தெரியாமல் ஜஸ்வந்த் சிங் 3 தீவிரவாதிகளையும் கந்தகாருக்கு அழைத்து சென்றாராம். தீவிரவாதிகளுடன் ஜஸ்வண்ட்சிங் போகும் போது தான் அத்வாணிக்கு தெரியுமாம். வாஜ்பாய் அவர்களை கேட்டு அழைத்து சென்றிருப்பார் என்கிறார் அத்வாணி. ஒரு முக்கியமான விஷயத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரை நெ2 அமைச்சரை கலந்தாலோசிக்காமல் அமைச்சரவை செயல்பட்டிருக்கிறது. நாளை அத்வாணி பிரதமரானால் இந்தியா இவர் கட்டுபாட்டில் இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

இந்த லட்சணத்தில் இவர் மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் எங்கிறார். அந்த பலவீனமான பிரதமர் தான் பல தடைகளைத் தாண்டி அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வெங்கய்யா நாயுடு, அத்வாணி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, சுஸ்மா சுவராஜ், ஜெஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஷி என பல அதிகார மையங்கள் செயல்படும்.

பிஜேபியில் அருண் ஜேட்லிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் ஏற்பட்ட பூசலையே தடுத்து நிறுத்த முடியாமல் அப்பாவியாய் இருந்த அத்வாணி எபப்டி இந்த நாட்டின் பிரச்சனைகளை தைரியமாக தீர்ப்பார். ஆட்சியின் குறைபாடுகளை திசை திருப்ப தினம் ஒரு மதக் கலவரத்திற்கு தான் ஏற்பாடு செய்வார்.


http://ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080044709&ch=3/22/2008%209:22:00%20PM

Monday, March 30, 2009

யாரிந்த வைகோ @ வைகோயபல்ஸ்

யாரிந்த வைகோ? எவ்வளவு நல்லவர்? எந்த அளவு உண்மையானவர்? எந்த அளவு மற்ற அரசியல்வாதிகளை விட மேன்மையானவர்? பார்த்துவிடுவோம்.

இப்போது ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் மீது பொய்க் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறாரே , இவர் 2007 வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் அங்கம் வகித்தார். அப்போது ஈழப் பிரச்சனை இல்லையா? இவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஈழத்தமிழருக்கு செய்தது என்ன? துரோகத்தைத் தவிர. அப்போது இவர் கட்சிக்கு 4 எம்பிக்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பேபினட் மந்திரி பதவியும் இன்னொருவருக்கு இணை மந்திரிப் பதவியும் கொடுக்க காங்கிரஸ் தயாராய் இருந்தது. ஆனால் இவர் என்ன செய்தார்?. அமைச்சரவையில் இடம் வேண்டாம். வெளியிலிருந்தே ஆதரவு தருகிறோம் என்று சொன்னார்.

ஏன்?

தனக்கு கிடைக்காத அந்த அமைச்சர் பதவிகள் தன் கட்சியின் இரண்டாம் மட்டத் தலவர்களுக்குக் கிடைத்தால் தேசிய அளவில் அவர்கள் செல்வாக்குத் தன்னைவிட உயர்ந்துவிடும் என்ற பொறாமையும் வயித்தெரிச்சலும் தான். இந்த சரிவாதிகார மனப்பான்மை தான் செஞ்சி ராமச்சந்திரன், கணேசனில் ஆரம்பித்து இப்போது கண்ணப்பன் , கம்பம் ராமகிருஷ்ணன் என்று தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நட்களில் அவர் மட்டுமே கட்சியில் இருப்பார். இது இவர் கட்சிக்கு?! ஏற்பட்ட இழப்பு. இதை விடுவோம்.

ஆனால் ஈழத் தமிழருக்காக தான் மட்டுமே போராடுவதாக ஊரை ஏமாற்றுகிறாரே. அந்த ஈழ மக்களுக்கு இவர் செயலால் என்ன இழப்பு என்று பார்ப்போம்.

அன்று காங்கிரஸ் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும். அப்போது வெளியுறவு அல்லது பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றை கேட்டிருக்கலாம். குறைந்த பட்சம் இவைகளின் இணை அமைச்சர் பதவியாவது கிடைத்திருக்கும். அல்லது வேறு துறையின் அமைச்சர் பதவிகள் கிடைத்திருந்தாலும் அதை வைத்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக்களில் இடம் கிடைத்திருக்கும். அதை வைத்து அமைச்சரவைக் கூட்டங்களின் போதெல்லாம் ஈழப் பிரச்சனையை அந்த மக்கள் சிங்கள இன வெறி அரசால் படும் துயரங்களை எழுப்பி இருக்கலாம். அமைச்சரவையின் மற்ற சகாக்களுக்கும் புரியவைத்து இது விடுதலைப் புலிகள் பிரச்சனை மட்டுமில்லை அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களும் அடங்கி இருக்கு என புரிய வைத்திருக்கலாம். இவர்கள் தானே ஈழ மக்களின் ஒரே பாதுகாவலன் என்பது போல் நடிக்கிறார்கள் . அதனால் இவர்களை சொல்கிறேன்.

இந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் வேண்டுமென்றே விட்டுவிட்டு இப்போது காங்கிரஸ் அரசாங்கத்தை குறை சொல்லிக் கொண்டிருக்கிரார்.

இவர் கட்சி எம்பிக்களையும் காட்டி திமுக அமைச்சர் பதவிகள் பெற்றுக் கொண்டது என சொல்லி அகில இந்தியாவையும் சிரிப்பு மூட்டினார். :)) . இவர் கட்சி எம்பிக்கள் என்ன பெட்டியில் அடைத்து வைத்த ஆப்பிளா? லேபிள் மாத்தி ஒட்டிக் கொள்ள? :)

சரி , இவர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தாரே .. அதற்கு காரணம் என்ன? ஈழத் தமிழரை அழிக்க காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுக்கிறது என்று பொய்க் குற்றசாட்டு சுமத்தியா? இல்லவே இல்லை. கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் இறுதியாகக் கேட்ட 23 தொகுதிகளை( முதலில் 25 கேட்டார்) தரமுடியாது என்று சொல்லி திமுக அவருக்கு 22 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இதனால் காலையில் திமுகவுடன் பேரம் பேசிவிட்டு அந்த ஒரு சீட்டுக்காக அன்று மாலையே அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆகவே அவர் அப்போதும் காங்கிரஸ் மீது எந்த பொய்க் குற்றச்சாட்டும் சுமத்தவில்லை. அவர் பிரச்சனை வெறும் ஒரு தொகுதி தான். அவ்வளவு பெரிய கொள்கை திலகம் இந்த வைகோ.

இது வரை தாவல் ஸ்பெஷலிஸ்டான பாமக கூட காலையில் பேரம் பேசிவிட்டு படியாமல் மாலையில் எதிர் முகாம் போனதில்லை. முன் கூட்டியே அதற்கான வேலைகளை எல்லாம் செய்துவிட்டு தான் எதிர் முகாம் போவார் மருத்துவர் ஐயா. ஆனால் இந்த கொளகைப் புயல் வைகோ ஒரு சீட்டுக்காம 10 மணி நேரத்தில் கூட்டணி மாறியவர். அப்போதெல்லாம் அவர் ஈழ மக்களைப் பற்றி யோசித்ததே இல்லை.

பிறகு தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தான் கடந்த ஓராண்டாக தான் மத்திய அரசின் மீது குறைகள் எதுவும் இல்லாததால் காங்கிரஸ் மீது பொய்க் குற்றசாட்டு சுமத்திக் கொண்டிருக்கிறார். அதென்ன பொய்க் குற்றசாட்டு?

பின்னே? கொடுக்காத ஆயுதத்தை இலங்கைக்கு கொடுபப்தாக சொல்வது பொய் தானே. ப்ரணாப் முகர்ஜி, அந்தோணி மற்றும் சிதம்பரம் என சொல்ல வேண்டிய அனைவரும் சொல்லிவிட்டார்கள், இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் வழங்கவில்லை என்று. அப்போதும் நம்பாமல் குற்றம் சுமத்துவது பொய் தானே. சமீபத்தில் கடர்படைத் தளபதியும் சொல்லி இருக்கிறார் ஆயுத உதவி எதுவும் செய்யவில்லை என்று. அப்படி செய்தால் யாருக்கு பயந்து மறைக்க வேண்டும். இதில் இந்திய ராணுவத்தினர் இலங்கைப் போரில் பங்கேற்பதாக தகவல்கள் என்று தினமும் பித்தலாட்ட பதிவுகள் வேறு. இதுவரை யாரும் அதற்கு ஆதாரம் தரவில்லை. உண்மை இருந்தால் தானே. யாரிடமோ எதையோ வாங்கிக் கொண்டு இப்படி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் இணையத்தில்.

கீழே இருக்கும் படத்தை பெரிது பண்ணி பார்க்கவும்..( தி சண்டே இண்டியன் இந்த வார இதழ்)
இலங்கை ராணுவம் பயன்படுத்துவது சீனாவின் டி56 ரக துப்பாக்கிகள் தான். இந்தியா தன் ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவில்லை என்பது இதில் தெரிகிறது.

புலிகளின் தாக்குதலில் இந்திய ராடார் தொழில்நுட்ப இஞ்சினியர்கள் காயம் பட்டார்களே என்கிறார் வைகோ. ”ராடார்” என்பது ஆயுதம் இல்லை என்பதை யாராவது அவருக்கு புரியவைத்தால் நல்லது. அது ஒரு கண்காணிப்புக் கருவி. விடுதலை புலிகள் விமானத்தாக்குதலுக்கு வாய்ப்புகள் இருப்பதால் இலங்கைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதை வைத்து தமிழர்களை ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் சொல்லப் போனால் அது தற்காப்பிற்கே.

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தின் மீது என்ன கரிசனம்? எதற்கு ராடார் தர வேண்டும்? என்று கேட்கலாம்.

எல்லாம் சுயநலம் தான். இதைக் கொடுத்தால் ராடாரை வைத்து தமிழ்மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது ஒரு காரணம். இன்னொன்று இந்தியப் பாதுகாப்பு தொடர்புடையது. நாம் கொடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அல்லது சீனா கொடுத்திருக்கும். டயலாகை மாத்துடா டேய்ன்னு சொல்றது புரியுது. ஆனால் இது வெறும் டயலாக் இல்லை. பாகிஸ்தானோ சீனாவோ ராடார் வழங்கி இருந்தால் அதை பயன்படுத்தவும் பயிற்சிக் கொடுக்கவும் கூடவே ஆட்களை அனுப்பி இருப்பார்கள். அதை வைத்து இந்தியாவைக் கண்காணித்திருப்பார்கள். மும்பை தாஜ் மற்றும் ட்ரைடண்டில் நடந்த தாக்குதல் சென்னையின் கன்னிமாராவிலோ, லீ மெரிடியனிலோ நடந்திருக்கும். ஆகவே ராடார்கள்க் கொடுத்ததால் ஈழத் தமிழருக்கும் பாதிப்பில்லை. இந்தியாவுக்கும் புதிய பகுதியிலிருந்து ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.

மேலும், சண்டைன்னா சட்டை கிழியத் தான் செய்யும். சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குன்னு வடிவேலு காமெடி பண்ண மாதிரி , போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள். இது எல்லா இடத்திலும் இருப்பது தான் என்று ஈழத் தமிழரின் படுகொலைகளை காங்கிரஸ் கொச்சைப் படுத்தவில்லை. அப்படி சொன்ன புரட்சித்தலைவியுடன் தான் ஈழ மக்களின் தோழனாக நடிக்கும் வைகோ ஓட்டுககாக கூட்டு வைத்திருக்கிறார்.

இவர் தான் வைகோ என்று நியூமராலஜி பார்த்து பெயர் வைத்துக் கொண்ட பகுத்தறிவுவாதி வையாபுரி கோபால்சாமி. 2 எம்பிக்களும் 2 எம்எல்ஏக்களும் இவரை விட்டுப் போனதும் இன்றி தன் உரிமையான திருமங்கலைத்தையும் அம்மாவிடம் இழந்து கூனி குறுகி நின்ற தன்மானச் சிங்கம் வைகோ அவர்கள்.

இவர் போன்ற வேஷதாரிகளை மக்கள் நிச்சயம் அடையாளம் கொள்வர். காங்கிரஸ் + திமுக கூட்டணி ஈழத் தமிழருக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும் புரிந்துக் கொள்வர். அப்படி எதிரானவர்களாக இருந்தால் திருமாவளவன் சேர்ந்திருக்க மாட்டாரே.

படம் நன்றி : தி சண்டே இண்டியன் மின்னிதழ்.